Sunday, June 19, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...


அப்புறம், நான் உள்ளே வந்த வேகத்துலையே ஆபீசர் பேசிட்டு இருந்த மைக்கை
என் கையில் தந்துட்டார் [[பெருந்தன்மை]] என்ன பேசன்னு தெரியலை. நடுக்கம்,
சந்தோசம், மெய்மறத்தல், கையும் காலும் ஓடாத நிலை....!!! [[பாவிகாளா
கொஞ்சம் கேப் விட்டு தரப்புடாதா அவ்வ்வ்வ்]]

நான் என்ன பேசுனேன்னு இப்போ வரை எனக்கு புரியலை....!!!! காரணம் போட்டோ
பிடிக்கிரவங்க [[பத்திரிக்கைகாரங்க]] என்னை சுத்தி வளைச்சிட்டாயிங்க
ஃபோக்கொஸ் லைட்டோட....!!! ஆபீசரும், என் தளபதியும் [[இம்சை அரசன்]]
எனக்கு லெமன் ஜூஸ் தரசொன்னாங்க. ஜூஸ் வந்துச்சி அதை குடிக்க என் கை
நடுங்கிய நடுக்கத்தை யாரும் கவனிக்கலை ஹி ஹி ஹி ஹி....




தம்பி "கோமாளி" செல்வா ஒரு மகாராஜா கதை சொல்லி எல்லாரையும் அருமையா
சிரிக்க வச்சி கை தட்டுகளை தட்டி சென்றான்.

அப்புறமா சீனா அய்யா பேச எழும்பி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வச்சார். அய்யா
பேச்சி என்னான்னா, எலேய் மொக்கை எழுதுங்கடா நோ பிராப்ளம் [[என் பாஷையில
எழுதுறேன் சீனா அய்யா ரொம்ப டீசண்டா சூப்பரா பேசினார்]] இடையிடையே உங்கள்
சொந்த அனுபவங்கள், சமுதாயத்துக்கு பிரயோசனமான விஷயத்தையும் எழுதுங்கன்னு
அறிவுரை வழங்கினார். அது எனக்கு சரின்னு பட்டது....!!!





அடுத்து வந்த ஷங்கரும் [[பாலா பட்டரை]] அதையேதான் சொன்னார். ஆனால் சில
நல்ல நல்ல விஷயங்களையும் சொன்னார்...!!! இடையில் புகுந்த 'பெயர் சொல்ல
விரும்பவில்லை' [[அவர் உண்மை பெயர் தெரியவில்லை அவர் பிளாக் பெயர்தான்
அது]] அவரும் சில கருத்துகளை சொன்னார் மிகுந்த ஆர்வத்தோடு. பயபுள்ளை
அநியாயத்துக்கு நல்ல மூடில் இருந்தார் [[ஏய் தப்பா நினச்சிராதீங்கபா
ஏன்னா ஆபீசர் கபர்தார்]]

எனக்கு ஞாபகத்துல இருக்குறதைதான் சொல்வேன் என்ன...?

அடுத்து மைக் [[அது ஒர்க்கே ஆகலை]] போனது தோழி [[ நான் அவங்களை மேடம்னு
கூப்பிடபூடாதுன்னு கடின உத்தரவு]] கவுசல்யா கையில, அவங்களும் சமுதாய,
சமூக, விழிப்புணர்வை குறிச்சிதான் பேசினாங்க [[ஐ லைக் தோழி]] "கழுகு"
பதிவு பற்றி பேசினாங்க. நானும் கழுகின் ரசிகன் என்பதால் என் ஆதரவும்
கழுகிற்கு உண்டு தோழி. ஷங்கரை [[பாலா பட்டரை]] கழுகில் எழுதும் படி
விரும்பி கேட்டு கொண்டார்கள், ஹேய் மக்கா ஷங்கர் எழுதி குடும்யா,
இல்லேன்னா பின்னால இம்சை அரசன் அருவாளோட வந்துறப்போறான் ஹே ஹே ஹே ஹே
ஹே....




இடையிடையே பயங்கர கலாயிச்சல் வேற தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால்,
எதுவும் சீரியஸா தெரியலை...!!! அப்புறம் சர்புதீன் சந்தோசமா பேசினார்,




அடுத்து நம்ம கிலுக்கான்பெட்டி "செல்லம்" சித்ரா மேடம் பேசவந்தாங்க,
அவங்க கேட்ட கேள்விக்கு யாரும் சரியான பதில் சொல்லலை என்பது என் எண்ணம்.
[[வீடியோ பார்த்துட்டு நீங்களும் பதில் சொல்லலாம், ஆபீசர் பதிவில் வீடியோ
வெளியாகும்]] அப்புறம் சிரிச்சாயின்களே சிரிப்பு அவ்வ்வ்வ்வ் எல்லாரும்
ரொம்ப பரவசமானோம்...!!! அவிங்க மனசெல்லாம் சிரிப்பு மத்தாப்பு அது
மற்றவங்களையும் தொத்திகிச்சி அருமை அருமை...!!!




அதிரடி தொடரும்........

டிஸ்கி : அடுத்து என் தங்கச்சி பாப்பா'வின் [[கல்பனா ராஜேந்திரன்]]
பேச்சிலிருந்து தொடரும்......




டிஸ்கி : டேய் அண்ணா சிபி, உன் வண்டவாளத்தையும் தண்டவாளத்துல ஏத்தாம
விடமாட்டேம்லேய் ராஸ்கல்....

55 comments:

  1. தமிழ்மணம் இணைக்க முடியல

    ReplyDelete
  2. ஐய்யா அடுத்து என்னோட பேச்சுல இருந்து .......................... வைடிங் அண்ணா .. சீக்கரம் போடுங்க ......

    ReplyDelete
  3. விட்டு போயிடு .... சுத்தி சுத்தி எடுத்த போட்டோவை போஸ்ட் ல போட்டு இருக்கீங்க .... போ அண்ணா .... :((((

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. போட்டோ பயங்கரமா இருக்கு ?

    ReplyDelete
  6. நீங்க குளிசிங்கனு ஒத்துக்குறேன்

    ReplyDelete
  7. படிக்கப் படிக்க பரவசம்! கலந்துகொள்ளவில்லை எனும் ஏக்கம் வருகிறது!

    ReplyDelete
  8. சந்திப்புக்கு லேட்டா வந்தாலும் மக்கா... தொடரை அதிரடியா போடுரிங்களே.... இன்னும் என்னென்ன வரப்போகுதோ?

    ReplyDelete
  9. டேய் அண்ணா சிபி, உன் வண்டவாளத்தையும் தண்டவாளத்துல ஏத்தாம
    விடமாட்டேம்லேய் ராஸ்கல்....--- seekiram..seekkiram..

    ReplyDelete
  10. சி.பி.செந்தில்குமார் said...
    முதல் மழை

    June 19, 2011 9:41 PM
    சி.பி.செந்தில்குமார் said...
    தமிழ்மணம் இணைக்க முடியல//

    ம்ஹும் உன்கிட்டே சொன்னேன் பாரு கர்மம் கர்மம்....

    ReplyDelete
  11. கல்பனா said...
    ஐய்யா அடுத்து என்னோட பேச்சுல இருந்து .......................... வைடிங் அண்ணா .. சீக்கரம் போடுங்க ......//

    ஹா ஹா ஹா ஹா பொறும்மா.....

    ReplyDelete
  12. கல்பனா said...
    விட்டு போயிடு .... சுத்தி சுத்தி எடுத்த போட்டோவை போஸ்ட் ல போட்டு இருக்கீங்க .... போ அண்ணா .... :((((//

    கூல் செல்லம்மா.....

    ReplyDelete
  13. தமிழ் உதயம் said...
    பகிர்வுக்கு நன்றி.//

    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  14. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    போட்டோ பயங்கரமா இருக்கு ?

    June 19, 2011 9:57 PM


    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நீங்க குளிசிங்கனு ஒத்துக்குறேன்//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  15. FOOD said...
    Weldone Mano. C.P.settaikal paarka aaval. kalpanavin karuthukkalai ungal paarvaiyil ethirpaarpukaludan///

    கண்டிப்பா ஆபீசர்.....

    ReplyDelete
  16. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    படிக்கப் படிக்க பரவசம்! கலந்துகொள்ளவில்லை எனும் ஏக்கம் வருகிறது!//

    கண்டிப்பா நாமளும் நீங்களும் மீட் பண்ணலாம் மக்கா கவலைபடாதீங்க....

    ReplyDelete
  17. தமிழ்வாசி - Prakash said...
    சந்திப்புக்கு லேட்டா வந்தாலும் மக்கா... தொடரை அதிரடியா போடுரிங்களே.... இன்னும் என்னென்ன வரப்போகுதோ?//

    குற்றாலத்துல சிபி பய பண்ணுன எல்லா அட்டூழியத்தையும் வெளி கொண்டு வருவேன்.....

    ReplyDelete
  18. வேடந்தாங்கல் - கருன் *! said...
    டேய் அண்ணா சிபி, உன் வண்டவாளத்தையும் தண்டவாளத்துல ஏத்தாம
    விடமாட்டேம்லேய் ராஸ்கல்....--- seekiram..seekkiram..//

    அடபாவி உருப்படுவியாய்யா நீ.....

    ReplyDelete
  19. எல்லாம் சரி, ஃபோட்டோ ஏம்யா இப்படி ஆபாசமாப் போடுதீரு?

    ReplyDelete
  20. அருவில குளிக்கும்போது சிபி ஸூ போட்டிருக்கும் மர்மம் என்னவோ?

    ReplyDelete
  21. உங்களை பார்த்ததும் குற்றாலத்துல உள்ள குரங்குகள் எல்லாம் தற்கொலை பண்ணிகிச்சாமே. அப்படியா?

    ReplyDelete
  22. செங்கோவி said...
    எல்லாம் சரி, ஃபோட்டோ ஏம்யா இப்படி ஆபாசமாப் போடுதீரு?//

    பிச்சிபுடுவேன் பிச்சி நாங்கெல்லாம் சின்னபிள்ளைங்க தெரியாதாக்கும் உமக்கு....

    ReplyDelete
  23. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அருவில குளிக்கும்போது சிபி ஸூ போட்டிருக்கும் மர்மம் என்னவோ?//

    அந்த நாய்க்கு போட்டோவுக்கு போஸ் குடுக்கனும்ல அதுக்காம்... அவன் திருந்தமாட்டான் மக்கா விடுங்க...

    ReplyDelete
  24. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    உங்களை பார்த்ததும் குற்றாலத்துல உள்ள குரங்குகள் எல்லாம் தற்கொலை பண்ணிகிச்சாமே. அப்படியா?//

    குரங்கு தலைவன் இவன்ட்ட வந்து காதுல என்னமோ சொல்லிச்சி, அப்புறம் சிபிதான் தற்கொலை பண்ணிக்க மலை மேல ஓடினான்.....அந்த குரங்கு என்ன சொல்லிச்சு'னுதான் தெரியலை...

    ReplyDelete
  25. நல்லா இருக்கு மக்கா, படிக்க படிக்க பரவசம்.

    ReplyDelete
  26. நல்லா இருக்கு உங்கள் அனுபவம்

    ReplyDelete
  27. இனிமையான அனுவம்தான்!அதைப் பகிர்ந்த் விதம் அழகுதான்!

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் மனோ.
    அது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான நாள்.

    ReplyDelete
  29. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நல்லா இருக்கு மக்கா, படிக்க படிக்க பரவசம்.//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  30. Mahan.Thamesh said...
    நல்லா இருக்கு உங்கள் அனுபவம்///

    ஹா ஹா ஹா....

    ReplyDelete
  31. சென்னை பித்தன் said...
    இனிமையான அனுவம்தான்!அதைப் பகிர்ந்த் விதம் அழகுதான்!//

    நன்றி தல....

    ReplyDelete
  32. Rathnavel said...
    வாழ்த்துக்கள் மனோ.
    அது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான நாள்.//

    உண்மை உண்மை அய்யா......

    ReplyDelete
  33. நடுராத்திரில கூட கூலிங் க்ளாஸ் போடுறதை ரெண்டு பெரும் விடவே மாட்டீங்களா அப்பு!!

    ReplyDelete
  34. //கையும் காலும் ஓடாத நிலை.//

    கை எப்படி ஓடும்?

    ReplyDelete
  35. அண்ணே...எங்க எல்லாரையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஓசில பஹ்ரைன் கூட்டிட்டு போங்கண்ணே.

    -தம்பி பாப்பா!!

    ReplyDelete
  36. ! சிவகுமார் ! said...
    நடுராத்திரில கூட கூலிங் க்ளாஸ் போடுறதை ரெண்டு பெரும் விடவே மாட்டீங்களா அப்பு!//

    யோவ் அந்த நாதாரிதான் கிளாஸ் போட சொல்லி மிரட்டினான் என்னை......

    ReplyDelete
  37. ! சிவகுமார் ! said...
    //கையும் காலும் ஓடாத நிலை.//

    கை எப்படி ஓடும்?//

    இப்பிடி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா, உங்க ஹோட்டல்லையே சாப்பிட்டுட்டு பில்லை சட்டை பையில் வச்சிட்டு ரயில் முன்னாடி பாஞ்சிருவேன் சாக்ரதை....

    ReplyDelete
  38. ! சிவகுமார் ! said...
    அண்ணே...எங்க எல்லாரையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஓசில பஹ்ரைன் கூட்டிட்டு போங்கண்ணே.

    -தம்பி பாப்பா!!//

    அது யார்யா தம்பி பாப்பா...?

    ReplyDelete
  39. விக்கியுலகம் said...
    சூப்பர்யா!//

    டேய் அண்ணே புரியுது புரியுது......

    ReplyDelete
  40. Adara adra naakku mukka...kalakureenga makka..

    ReplyDelete
  41. கலக்கி இருக்கீங்க மக்கா
    நேரில் பார்த்த போல இருக்கு பதிவு
    போடோவ ஏன் தெளிவா எடுக்கல ???

    ReplyDelete
  42. மக்கா அல்வா சாப்பிடீங்கள ?
    அதை பத்தி ஒரு பதிவு போடவும்

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் மக்கா...

    பகிர்வுக்கு நன்றி :)

    ReplyDelete
  44. ம்ம ..போட்டு தாக்குரான்களே நெல்லை பதிவர் சந்திப்பு அங்க அங்க .போட்டு இருக்காங்களே .

    ReplyDelete
  45. நான் என்ன பேசுனேன்னு இப்போ வரை எனக்கு புரியலை....!!!! காரணம் போட்டோ
    பிடிக்கிரவங்க [[பத்திரிக்கைகாரங்க]] என்னை சுத்தி வளைச்சிட்டாயிங்க//

    ஆஹா..கேட்கவே சந்தோசமா இருக்கே...

    ReplyDelete
  46. சுவராஸ்யமாக எழுதியிருக்கிறீங்க சகோ,
    ஆமா குற்றாலம் போன படத்தில
    சிபி, மனோ, செல்வா மாத்திரம் தான் நிற்கிறீங்க,
    மத்தவங்க யாருமே வரலையா...

    ReplyDelete
  47. நடத்த கூத்தையெல்லாம் விடாம சொல்லுங்க...

    ReplyDelete
  48. கொஞ்சம் பிஸி வேலை மக்கா...
    பாத்துக்கங்க...

    ReplyDelete
  49. பேச்சைப் போலவே சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் பதிவு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  50. ஹிஹி மனோ-சிபி என்ன நடந்திச்சு...அதுக்காக தான் ஒவ்வொரு பதிவா நான் வெயிட்டிங் மாமு!!

    ReplyDelete
  51. ரொம்ப ஜாலியா எழுதிருக்கீங்க. படிக்க நல்ல சுவாரஸ்யமா இருக்குது.

    // அப்புறம் சிரிச்சாயின்களே சிரிப்பு அவ்வ்வ்வ்வ் எல்லாரும்
    ரொம்ப பரவசமானோம்...!!! அவிங்க மனசெல்லாம் சிரிப்பு மத்தாப்பு அது
    மற்றவங்களையும் தொத்திகிச்சி அருமை அருமை...!!!//

    எங்களையும் தொத்திகிச்சு ...... நன்றி.

    Voted 20 to 21 in INDLI

    ReplyDelete
  52. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  53. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  54. மனோ சார் என் போட்டாவை போட்டு பதிவை கலக்கிட்டிங்க.வாழ்த்துகள்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!