ஆபீசர் சங்கரலிங்கம், ஆக்கபூர்வமான செயல்பாட்டின் தந்தை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அவர் மனசு ஒரு பிஞ்சி குழந்தையின் மனசு என்பது நான் பார்த்து பேசி பழகி, அவரிடம் உணர்ந்து கொண்டேன்...!!!!
இடையிடையே வந்து சபையை கண்ட்ரோலிலும் வச்சிகிட்டார் நேர்த்தியாக, போட்டோ எப்பிடி எப்பிடி எடுக்க வேண்டும்னு டைரக்ஷன் சொல்லிட்டும் இருந்தார்.
நேரம் இருட்டியதால் குற்றாலம் சீக்கிரமாக நாங்கள் கிளம்ப எத்தனித்தாலும், ஆபீசருக்கு எங்களை பிரிய மனமே இல்லை, எங்களுக்கும்தான்...ஒரு வழியா பிரியா விடை.........
கடைசியாக ஆபீசர் முகத்தில் நான் கண்டது, பெற்ற மகளுக்கு சீர் செனத்தி செய்து, மணவாளன் வீட்டுக்கு மன நிறைவுடன் அனுப்பிய ஒரு தந்தையின் சமாதானம் அவர் முகத்தில் ஜொலிப்பதை கண்டேன். எவ்வளவு அற்புதமாக அழகாக நேர்த்தியாக இந்த குடும்ப [[பதிவர்]] சந்திப்பை நடத்தினார் பாருங்கள்....!!!!
நான் சந்திப்புக்கு வந்ததே ஒருமணி நேரம் லேட்டாதான், ஹாலில் நுழைந்ததுமே என்னை தெரிந்து கொண்டு உள்ளே அழைத்து [[இம்சை அரசனும்'தான்]] அருகில் அமர்த்தி அழகு பார்த்தார். மைக்கும் உடனடியாக என்னிடம் தந்தார் ஆபீசர்....!!! [[சிபி அப்போது கீழே கல்லை தேடினான் என்று அப்புறமாதான் செல்வா சொன்னான் குற்றாலத்தில் வைத்து ம்ஹும் ராஸ்கல்]]
ஒவ்வொரு பதிவராக பேசி கொண்டிருக்கும் போதே, இடையிடையே வெளியே போயிட்டும் வந்துட்டும் இருந்தார் ஆபீசர். நான் கவனிச்சிட்டே இருந்தேன். அது மீடியா'காரர்களுக்கு அட்வைஸ் செய்யவும், சாப்பாடு ரெடி ஆகிருச்சா'ன்னும் அக்கறையோடு பார்த்து கொண்டிருந்தார்....!!!
இடையிடையே வந்து சபையை கண்ட்ரோலிலும் வச்சிகிட்டார் நேர்த்தியாக, போட்டோ எப்பிடி எப்பிடி எடுக்க வேண்டும்னு டைரக்ஷன் சொல்லிட்டும் இருந்தார்.
ஆக்கப்பூர்வமாக உண்டியல் பணம் வசூல் செய்து ஒரு பெரிய சாதனையை செய்தும் காட்டினார் மட்டுமல்லாது அதை தொடரவும் செய்கிறார் தன்னடக்கமாக....!!!
அப்புறமா சூப்பரா பதிவர் சந்திப்பு முடிஞ்சதும், சாப்பிட போனோம் பஃபே சாப்பாடு அருமையா செய்து இருந்தார்கள் [[பின்னே பிடிச்சி உள்ளே கிள்ளே போட்டுற போறாருன்னு பயந்துட்டாயின்களோ]] ஆபீசர் பம்பரமாக சுழண்டு கொண்டு இருந்தார், அவர் சொன்னது போல இது குடும்ப விழா ஆச்சே யாரும் மனசு நோகாமல் இருக்கணுமே என்ற அக்கறை அவர் கண்ணில் தெரிஞ்சது...!!!
எல்லாரும் திருப்தியா சாப்பிட்டோம் சிபி தவிற, ராஸ்கல் பத்து பிளேட் உள்ளே தள்ளிட்டு சர்வர் கையில ஆப்பை அடி வாங்குன பின்பும் சாப்பாட்டு திசையையே பார்த்துட்டு இருந்தான் மூதேவி...[[ஹா ஹா ஹா மாட்டுனியாடா]]
எல்லாரும் கை குலுக்கியும் கும்பிட்டும் பி......ரி.......யா......விடை பெற்று கொண்டிருந்தனர் ஆனால் ஆபீசருக்கு இன்னும் எல்லோரும் அவர் கூடவே இருக்க வேண்டும் என்ற தவிப்பு இருந்தது என்னவோ உண்மை, எனக்கும்தான்.....!!!
எல்லாரையும் வழி அனுப்பி விட்டு ஆபீசரும் நானும், சிபியும், கவுசல்யா'வும், செல்வாவுமாக ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். வந்து ஆபீசர் நம்ம செல்வாவை ஒரு [[ரேடியோ ஜாக்கி]] வேலைக்கு இண்டர்வியூ'க்காக அழைத்து சென்றார்..[[இது செல்வாவுக்கு தெரியாமல் நடந்த சர்பரைஸ்]]
செல்வாவும் ஆபீசரும் போய்விட்டு சிபி தங்கி இருந்த அஞ்சி நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து விடுவதாக சொல்லி விட்டு அவனை உடன் அழைத்து சென்றார்...!!! ஒரு ஒரு மணி நேரம் கழித்து வந்தார்கள்.
மணி மாலை ஆறு ஆகி இருக்க கிரண் டீவியில் நியூஸ் வந்தது நம் பதிவர் சந்திப்பு பற்றி எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது....!!! நாங்கள் குற்றாலம் போக சிபி தீவிரமாக [[???]] இருந்த படியால் உடனடியாக வெளியே புறப்பட்டோம்.
சிபி ஹோட்டல் ரூமை நாறடித்து விட்டதாக [[ரிஷப்சனில்]] அங்கே ஃபைன் கட்ட சொல்ல அவன் அவர்கள் காலை கட்டி பிடித்து அழுது கொண்டிருந்ததை என் ஓரக்கண்ணால் பார்த்து சந்தோஷமாக ரசித்து கொண்டிருந்தேன் ஹி ஹி ஹி...
அப்புறமாக ஆபீசர் இன்னும் எங்களை அனுப்ப மனம் இல்லாதவராக, சரி வாங்க காப்பி குடிக்கலாம்னு கூப்பிட்டார் சரி ஏதாவது ஹோட்டலில் சாப்பிடிடலாம்னு சொன்னதும், இன்னும் அவருக்கு எங்களை அனுப்ப மனம் இல்லாதவராக, நல்ல காப்பி வேணுமா வேண்டாமான்னு கேட்டார்.
நாங்களும் நல்ல காப்பி வேணும்னு [[பன்னி குட்டியின் அந்த காப்பி இல்லை]] சொல்லவும் சரி அப்போ நம்ம ஆபீசுக்கே போயிருவோம்னு கூட்டிட்டு போனார். அடேங்கப்பா....!!! போற வழியில போற வாரவிங்க எல்லாரும் ஆபீசருக்கு சல்யூட் வைக்கிராயிங்க....!!!
போற வழியில ஒரு இடிச்சி தரைமட்டம் ஆக்கப்பட்ட பில்டிங்கை காட்டி சொன்னார் இதுதான் என் ஆபீசுன்னு [[அவ்வ்வ்வ் சின்ன பிள்ளையை இப்பிடியா கலவர படுத்துறது..?? அதுக்கு தனி பதிவு வச்சிருக்கேன்]] அந்த இடிக்கப்பட்ட இடம்தான் முன்னால் ஆபீசாக செயல்பட்டுள்ளதாம், இப்போது அதே இடத்தில் புதுசா ஆபீஸ் கட்டுவதாக சொன்னார்...
அப்புறமா தற்காலிகமாக செயல்படும் ஆபீசுக்கு அன்புடன் அழைத்து சென்றார். எங்களை அமர வைத்து காப்பி வாங்கி தந்தார் [[சிபி காப்பி குடிக்கமாட்டானாம் பால்'தான் குடிப்பானாம், ராஸ்கல் பச்சை புள்ளைன்னு நாம புரிஞ்சிகிடனுமாம் போடாங்]] சூப்பரா இருந்துச்சு. இடையே சிபி'க்கு போன் வர, அவனை யாரோ ஒரு வில்லன் [[வில்லி]] செமையா மிரட்ட வெளியே தெரிச்சி ஓடிட்டான் ராஸ்கல்....
நேரம் இருட்டியதால் குற்றாலம் சீக்கிரமாக நாங்கள் கிளம்ப எத்தனித்தாலும், ஆபீசருக்கு எங்களை பிரிய மனமே இல்லை, எங்களுக்கும்தான்...ஒரு வழியா பிரியா விடை.........
மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன்......!!!!!
டிஸ்கி : நிறைய பொறாமையால் பொசுங்கும் நண்பர்களின் [[ஹி ஹி]] வேண்டுகோளுக்கு இணங்க பதிவர் சந்திப்பு நிறைவு பெறுகிறது....
டிஸ்கி : இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் குற்றாலம் டூர் ரவுசு ஆரம்பம்.......
டிஸ்கி : மேலே படத்தில் இருக்கும் குரங்குதான் சிபி'யையும் செல்வாவையும் கடித்து குதறி பழி வாங்கியது,










