நான் வளர்க்கும் டேபள் ரோஜா செடி......!!!
மரம்தான் வளர்க்க முடியலை செடியாவது வளர்ப்போம் ம்ஹும்...
பேஸ்புக்'ல நான் டேபிள் ரோஜா செடி படம் போட்டு மேலே சொன்ன கமெண்ட்ஸ் போட்டுருந்தேன். அதுக்கு வந்த கண்ணீர் கமெண்ட்ஸ் என் நெஞ்சை விம்ம வைத்து விட்டதுமல்லாமல், இயலாமையை நினைத்து கூனி குறுகி போனேன்....
கீழே வரும் ஒரு [[பல]] சகோதரியின் கண்ணீரை பாருங்கள்....!!!
Swathi Swamy
இதை ஜப்பான் ரோஜா என்று சொல்வார்கள் எங்கள் ஊரில். மண்ணில் நட்டால் கொடியாக படர்ந்து அடர்ந்து வளரும். பல வர்ணங்களில் இந்த ரோஜாவை யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தேன். கடும் சூரிய ஒளி இதற்கு ஆகாது. அதே போல் கோழியும் இதன் இலைகளை கொத்தி கொத்தி தின்று செடியை மொட்டையாக்கிய பரிதாபமெல்லாம் எனக்கு அனுபவம். அதன் பின் கம்பி வலையால் அதை சுற்றி வேலி போட்டு தடிகள் ஊன்றி கொடியாக படரவிட்டு தந்தார் என் அப்பா. அந்த அயலில் எல்லாரின் வீட்டிலும் என்னுடைய ஜப்பான் ரோஜாவின் துளிர்கள் நடப்பட்ட வரலாறும் உண்டு.. ! :):)
Swathi Swamy ஊரில் எதெது எல்லாம் ஆசை ஆசையாக செய்தோமோ அதையெல்லாம் இங்கு இத்தனை வசதியிருந்தும் செய்ய முடிவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கும்..எனக்கு ஒரே ஒரு காரணம் தான் என்னுடைய ஆன்மா இன்னும் என்னுடய யாழ்ப்பாண வீட்டை விட்டு அமெரிக்காவுக்கு குடிவரவில்லை என்பது மட்டும் தான்.. :(
நாஞ்சில் மனோ //என்னுடைய ஆன்மா இன்னும் என்னுடய யாழ்ப்பாண வீட்டை விட்டு அமெரிக்காவுக்கு குடிவரவில்லை என்பது மட்டும் தான்.. :(// கவலை படாதீர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் கண்டிப்பாக வரும்....விடியலும்.....
Vanathy Ravi Oh! now I remember this plant's name. Japan Rose. Thanks, Swathy. Uncle, you r a kind man!
Swathi Swamy
என்னுடைய வீட்டு முன் முற்றம் முழுவதும் பூக்களாகவே இருக்கும்..பின் பக்க வளவு மா மரம், பனைமரம், மிளகாய், துளசி, தக்காளிச் செடி என்று இருக்கும். எனக்கும் அப்பாவுக்கும் செடி வளர்ப்பு அப்போது வெறி பிடித்த பொழுது போக்கு. கடைசியாக 1989ல் ஊர் போன போது அந்த வீடும் இல்லை..தரைமட்டமாகிவிட்டது; பூ த்துக் குலுங்கிய வளவெல்லாம் புதரும் புல்லும்.. பனைமரங்கள் மொட்டையாக விமானத்தாக்குதலில் பட்டுப் போய்...நல்ல வேளை அதைப் பார்க்காமலே அப்பா இறந்து போனார்.. அவர் ஆசை ஆசையாய் ஒவொரு கல்லாக கட்டிய வீடும் வளவும்...அவருக்கு இன்னொரு பிள்ளை மாதிரி நேசித்தார்,.
Kalpana Rajendran hi swathi sagothari .. ninalvugal valiyaai irupinum sila samayangalil ninavugal pokkisham pontrathu.. nitchayam neengal vazntha vazhvu ungaku virivil kidaikkum .. :))) dont feel .. we are with u .....
Swathi Swamy அதெல்லாம் இல்லை சார்...இது எங்களுக்கு பழகிப் போனது தான்..யாழ்ப்பாண நினைவு கலங்கிப் போக வைத்தாலும் அவை தான் எங்களைப் போன்றோரை இயக்கிக் கொண்டுமிருப்பவை...
டிஸ்கி : என் கண்ணீரால் இந்நிலை மாறுமின், நாளெல்லாம் அழுவேனே.......!!!
டிஸ்கி : மனிதன்தான் கல்லாகி போனான்...!!!
ஆண்டவனே நீயும் கைவிட்டாயோ..???
ஏ வானமே அகன்று போ...
ஏ பூமியே நீ சுழல்வதை நிறுத்து...
ஏ மேகமே நீ பொழிவதை நிறுத்து...
எங்கள் பெண்மணிகளின்
கண்ணீரே பொழிகிறது ரத்தமாய்...
ஏ கடலே நீ உலர்ந்து போ...
எங்கள் கண்ணின் கண்ணீரால்
உனை நிரப்பி விடுவோம்...
ஏ தென்றலே உன் சுகம் வேண்டாம் எனக்கு
நீ போய் உனது பண்டகசாலையில்
ஒளிந்து கொள்..
ஏ புயலே பயந்து நடுங்கு
எம் பெண்மணிகளின்
பெருமூச்சு உன்னை ஒடசெய்யும்...
ஏ சூறாவழியே சுருட்டி கொண்டு ஓடு
எங்கள் இருதயம்
பெரும் சூறாவளியாய்
கனன்று கொண்டிருக்கிறது...
ஏ ஆறுகளே உங்கள்
ஓட்டத்தை நிறுத்துங்கள்
நீங்கள் அருகதை அற்றவர்கள்...
ஏ வனங்களே எரிந்து போங்கள்
எங்கள் பெண்மணிகளின்
கண்ணீரை கொண்டு
உங்கள் அக்கினியை அமர்த்துவோம்...!!!
கண்ணீருடன் நாஞ்சில் மனோ.....
பேஸ்புக் லிங்க் கீழே...
