Sunday, November 25, 2012

பதிவர்கள் வர்க்கமும் ஆளும்வர்க்கமும் காமெடி கும்மி...!

கோபலலிதா : இங்கே இந்த மீட்டிங்கை அவசர அவசரமாக கூட்டியதின் காரணங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நான் மறுபடியும் ஒருமுறை சொல்லிவிடுவதே நல்லது என்று போடாநாடு மீது சத்தியமாக சொல்லிக்கொல்[ள்]கிறேன், 
டிமுக ஆட்சியிலும் எங்கள் ஆட்சியிலும் எத்தனையோ யானைகளும், பானைகளும், யாகங்களும் செய்தும்..... "கரண்டு" வந்தபாடில்லை டமிழகத்துக்கு, கடைசி முயற்சியாக கேரளா கோடாங்கியையும் வரவைத்து உறுமி அடித்துப் பார்த்தும் பிரயோசனமில்லாமல் போன படியால்தான்  பிரபல[!] பதிவர்களாகிய உங்களை அழைத்து ஐடியா கேக்க தோணியது, அமைச்சர்களை விட பதிவர்களிடம் நிறைய ஐடியாக்கள் இருப்பதாக அறிந்தே இந்த கூட்டத்தை கூட்டியுள்ளேன். இனி உங்கள் எண்ணங்களை சொல்லலாம்.

பொ.செல்வம் : மம்மா...டினகரனை கட்சியை விட்டே தூக்கினால்தான் டமில் நாட்டுக்கு மின்சார விமோசனம் கிடைக்குமென்று செங்கல் கோட்டையன் சொல்லசொன்னார்...என்று சொல்ல, மம்மா முறைக்கிறார்..

பசிகலா : அக்கா அக்கா...நான் வேணா மைசூர் போயி சொல்லமாடன் சாமிக்கு கிடாவெட்டி போட்டு குடும்பமாக மங்களம் பாடிவிட்டு வந்துறட்டுமா..? கரண்டு உடனே  வந்துரும்...

சிபி [பதிவர்] : ஆமா உடனே வாயை பொளந்துரும்....பசிகலா வெறியாக அண்ணனை பார்க்க, டேபிளுக்கு கீழே பம்முகிறான்.
பக்கி : ஒன்று செய்யலாம் மம்மா, கேமரூன் காட்டுக்குள்ளே இருக்கும் காட்டுவாசிகளை போடாநாடு அழைத்து வந்து, கும்மாகுத்து நடனம் ஆடச்செய்து, பாம்பில் ஊறவைத்த ஒயின் கொடுத்து தீக்கொளுத்த சொல்வோம், உடனே கரண்டு பப்பரப்பான்னு வந்துரும்.

பக்கத்தில் அமர்ந்திருந்த சிபி ஓங்கி ஒரு கொட்டு கொடுக்க, பக்கி கலவரமாகிறான்.

பவர் அமைச்சர் : மம்மா, இது வேற்காடு ஏழுமுகத்தின் சதி என்றே நினைக்கிறேன், என்னை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தாங்கள் என்னிடம் பேசுவதுபோல மிமிக்கிரி செய்து என்னை செயல்படமுடியாதபடி செய்வதாக எனக்கு ரகசிய தகவல் வந்துருக்கு....இதை சப்பிரமனியன் சுவாமி சொல்லசொன்னார்.
நாஞ்சில்மனோ : அடிங்"கொய்யா"ல"....என்று எழும்பவும், பக்கி டேபிளுக்கு கீழே காலால் ஒரு மிதி கொடுக்க, கலவரமாகி பயத்துடன் நடுங்கியவாறு மெதுவாக, மம்மா..... அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா "கொய்யா" மரத்துல இருந்து கரண்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன் காரணம் இணையதளங்களில் "கொய்யா" என்று சொன்னதுமே பலர் ஷாக் ஆகிறார்கள், எதுக்கும் பப்துல் கலாமிடம் சொல்லி விஞ்ஞானிக்க சொல்லவும்.

பன்னி குட்டி : கோடாங்கியும் சரி, சொல்லமாடனும் சரி, யானையும் சரி, பானையும் சரி, போடாநாடும் சரி, கொய்யாவும் சரி இவைகளால் கரண்டை கொண்டு வரமுடியாது ஆனால்...
கோபலலிதா : ஆனால் என்ன ஆனால்...? சொல்லுங்க சொல்லுங்க மிஸ்டர் பன்னி.....நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.

நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோ....

பன்னி குட்டி : மனோவை முறைத்தவாறே....மம்மா, அந்த கோடாங்குளம் பணு உலையை திறந்தோம்னா கரண்டு வெடிச்சிரும்..... ச்சே ச்சீ.... கிடைச்சிரும் என்பது என் தாழ்மையில்லாத கருத்துன்னு சொல்லமாட்டேன்னு சொல்லி........ சொல்லாம இருக்கமாட்டேன்.

சரிப்பு போலீஸ் : எட்றா அந்த அருவாளை...

பம்சை அரசன் பாபு : தம்பி அடங்கு, பெரியவிங்க பேசிட்டு இருக்கோம்ல...? 

"பலியுகம்" தினேஷ் : பலாயி போலாயி கோலாகி நொந்து கொசு வந்து கோடியில் ஆடி படியில் வெந்து காலரா போலரா தைங் தக்கா தை ஆடியது...

பரசன் : வேகமாக எழும்பி வந்து தினேஷ் காலில் விழுகிறார் [[கோபலலிதா முறைக்கிறார்]] தெய்வமே...நீங்க இம்புட்டு நாளும் எங்கே இருந்தீக....? கரண்டே வேண்டாம்டா சாமீ ஆளை விடுங்க...என்று தலைதெறிக்க வாசலை நோக்கி ஓடுகிறார்.
கே ஆர் விஜயன் : இங்கே கூடியிருக்கும் அமைச்சர்களால் வாயே திறக்கமுடியாமல் இருக்கிறார்களே இதற்கும் கரண்டுக்கும் என்ன சம்பந்தம், இவர்களை ஏன் மம்மா அவர்கள் அழைத்து இருக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் யோசித்து கொண்டே இருக்கிறேன்.

பக்கி : யோவ் இதென்ன உம்ம நாகர்கோவில் ஆபீஸ்ன்னு நினைச்சீரா..? "கொய்யால"ன்னு அந்த நாதாரிப் பயலை என்னைக்கோ திட்டுனதை மனசுல வச்சிகிட்டு கொய்யாவுல இருந்து கரண்டுன்னு போட்டு குடுக்குறான் ஓய்...

ஒழுங்கா பியட்னாம் போயி சேருவேனா இல்லை பாஸ்போர்ட்டை புடுங்கிட்டு ஆப்பு அடிப்பானுகளான்னு ஆடிப்போய் இருக்கேன், ஐயோ என் ஆபீஸ்ல ஐந்தாவது வந்து சேர்ந்த அந்த ஸ்டெனோ காத்து இருக்குமே...
பன்னி குட்டி : ஆமா இவரு பெரிய கவர்னரு, டேய் அங்கே இருக்குறதே நாலே நாலு இந்தியாக்காரனுக, அதுகளும் பச்சைபாம்பை பிடிச்சி தின்னுட்டு டவுசரோட அலையுறானுக...இங்கே வேலூர்ல கொஞ்சநாள் இருந்துட்டுப் போய்யா...

கோபலலிதா : பதிவர்கள் என் பொறுமையை சோதிக்க வேண்டாம்...அமைச்சர்கள் போலவே அமைதியாக இருங்கள், பஜயகுமார் குண்டாந்தடியோடும், பளர்மதி மீன் வாலோடும் வாசலில் இல்லை என்பதை இங்கே நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

கே ஆர் விஜயன் தன் இரு செருப்பையும் கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்கிறார்.

ரகசியமாக நாஞ்சில்மனோ காதில்...

"மக்கா, நிலைமை சரியில்லை போல தெரியுது ஓய், அன்னைக்கு எருமைநாயக்கன்பட்டியில் நடந்த அதே களேபரம் இங்கேயும் நடக்கும்னு தோணுது எதுக்கும் பேப்பர் அருவாளை சுருட்டி தூரப்போட்டுட்டு, செருப்பை கழட்டி கையில் வைத்துக்கொள்ளும் ஒய்"
சிபி : மம்மா அவர்களே, உங்கள் அமைச்சர்கள் யாவரும் தனிமையில் மொட்டைமாடியில் நின்று வீரவசனம் பேசுகிறார்களே ஒழிய, எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவே தயங்குகிறார்களா அல்லது பசிகலா'வுக்கு பயப்படுகிறார்களா என்றே தெரியவில்லை, கரண்டு என்னாச்சுன்னு பதிவர்கள் கேட்டா...

வேலூரை தெரியுமா? பாளையங்கோட்டையை தெரியுமா? புழல் தெரியுமா? ஏன் அந்தமானைக் கூடத்  தெரியுமா என்று கேட்கிறார்கள்...?

பக்கி : மனசுக்குள்' இன்னையோட இவன் செத்தான்டா...அப்பாடா இனி ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்டு தமிழனை கொல்ல ஒருத்தன் பிறந்துதான் வரனும் ஸ்ஸ்ஸ் அபா தப்பிச்சுதுடா பதிவுலகம்...சத்தமாக, ஆங்.... சிபி அண்ணன் என்ன சொல்றான்னு எனக்கு கேக்கவே இல்லை மம்மா, அவன் யாருன்னே எனக்குத் தெரியாது, ஆனால் நாஞ்சில்மனோ அவனுக்கு பினாமின்னு கே ஆர் விஜயன் சொல்ல சொன்னாரு.

கே ஆர் விஜயன் : ஆஹா......எருமைநாயக்கன்பட்டியேதான்....
பம்சை அரசன் பாபு : கொய்யாவில் இருந்து "கரண்ட்" என்பது நல்ல விஷயமே மம்மா அவர்களே, டரர் குரூப்பிடம் மற்றும் நாஞ்சில்மனோ நண்பர்களிடமும்  சொன்னால் கொய்யாக்களை அமோகமாக விளைவிப்பார்கள் என்பது என் கருத்து..

பன்னி குட்டி : ஆஹா சொந்த செலவுலேயே தம்பி சூனியம் வைக்குறானே...சத்தமாக, கொய்யா என்பது என்ன...? அதனூடே 'ல' சேரும் போதுதான் ஷாக் அடிக்கிறது என்பது என் தாழ்மையில்லாத கருத்து.

கோபலலிதா : அப்போ "ல" என்ற வார்த்தையில் கரண்ட் இருக்குறதா சொல்றீங்களா மிஸ்டர் பன்னி..?

சின்னவீடு சுரேஷ் : அவருக்கு அம்புட்டு அறிவு பத்தாதுங்  மம்மா, நான் சொல்லுறேனுங்.....இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...

கோவை டைம் : அடிங்கொய்யால....மனதுக்குள், டாஸ்மாக் கடையை நாரடிச்சுட்டு வந்து பேசுறப் பேச்சப்பாரு....?


பளர்மதி : மம்மா நான் உள்ளே வரட்டுமா சத்தம் கேட்டாப்ல இருக்கு என்று மீன்வாலை சுருட்ட...சிபி அண்ணன் சுவற்றோடு பல்லிபோல ஓட்டுகிறான்.
பேய் நக்ஸ் பக்கீரன் : மம்மா, பாவம் பயபுள்ள கரண்டு இல்லாம கஷ்டப்படுவானேன்னு நினச்சி விசாரிக்கப் போனை போட்டா, இந்த நாஞ்சில்மனோ போனை எடுக்கவேமாட்றான் மம்மா...இவனுக்கு கரண்டு ஒரு கேடா? [[யோவ் அண்ணே, சரக்கடிச்சா மட்டும் தம்பிக்கு போனா பிச்சிபுடுவேன்பிச்சு]]

சென்னை பவன் : சென்னை பட்டணத்திலே அதுவும் மம்மா பக்கத்தில் நாங்கள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு கவலையேது, மஞ்சாசிங்கம் பாரில் ஏறி சட்டையை கழட்டினால் கரண்டும் நாணும்...கண்ணாடியை சற்று மூக்கில் தூக்கி வைக்குறார் விரலால்...
பன்னி குட்டி : அதென்னடா கொக்காமக்கா வந்ததுல இருந்தே பாக்குறேன் மினிஸ்டர்ங்க ஒரு பயலும் வாயே திறக்கமாட்றானுக, பன்னி குட்டிபோட்ட கணக்கா...? பிச்சிபுடுவேன் பிச்சி, மம்மா இருக்காங்களேன்னு பம்மிட்டு இருந்தா ஓவரா சீனைப் போடுறானுக கம்னாட்டிக பேசாம இருந்து, கொய்யா...ஐயோ மம்மா மன்னிச்சு, பவர் இல்லாத கடுப்புல ஒவ்வொருத்தனுக்கும் பவர்ஸ்டார் படங்களின் டிவிடி"யை பார்சல் அனுப்பி வலுக்கட்டாயமாக பாக்க வச்சிப்புடுவேன் ஜாக்கிரதை.

கோபலலிதா : மிஸ்டர் பன்னி.... கூல்....இப்போ பிரச்சினை கரண்டை பற்றினது...

பன்னி குட்டி : மெதுவாக...ஆமா, இதுக்கு பேசாம சுடுகாட்டுல போயி குடும்பம் நடத்தலாம், சத்தமாக....ஒ...மம்மா...கொய்யா"இருந்து தாராளமா கரண்டு எடுக்கலாம் கேன் யு அப்ரூவல் பிளீஸ்...

பலேசியா சில்வி டீச்சர் : அய்யோடா..."ல"வுல கரண்டா...? நாங்க இங்கே மலேசியாவுல 'ல' போட்டுதான் பேசுவோம்'லா....மேடம், "ல"வுல சத்தியமா'லா கரண்டு'லா இருக்கு'லா....

நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோங்க இனி அங்கேயும் கரண்டு இல்லாம போயிரும் அவ்வ்வ்வ்...

பக்கி : யாருடா அங்கே அழுவுறது..? வாயி'ல' குத்திப்புடுவேன், அய்யூ இங்கேயும் 'ல"வா?

அமைதியாக இருக்கும் சாப்பாடு உலகம் கோபமாக எழும்பும்முன், அவர் பாடிகாட் திவானந்தா சுவாமிகள் எழும்பி உருட்டுகட்டையால் பக்கியை ஒரு போடுபோடுகிறார்... அண்ணன் சைலண்ட் ஆகிறான்.
சிபி : ஆக...... கி'ல்'மா என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது ஸோ அதிலும் 'ல' இருக்கிறது என்பதை தாழ்மையாக மம்மாவின் காலை பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

பன்னி குட்டி : நாதாரி என்னை உள்ளே தூக்கி போட்டுறாதீங்கன்னு கெஞ்சுறதை எப்பிடி நாசூக்கா சொல்லுறான் பாரு....உருப்பட்டுரும் நாடு கொய்யாமக்கா ச்சே ச்சீ கொக்காமக்கா...
கோபலலிதா : 'ல'வில் கரண்டு இருப்பதாக சொன்ன பதிவர்களுக்கு எனது அரசு வரிவிலக்கு[!] அளிக்க சட்டம் கொண்டுவரும், இனி யாருமே பதிவர்கள் கூட 'ல' என்பதை யூஸ் பண்ணக்கூடாது, மீறுபவருக்கு பவர்ஸ்டார் படத்தை தனியாக அமர்ந்து தியேட்டரில் பார்க்கவைக்கப்படுவர் கதற கதற..... 'ல'வில் கரண்டு இருப்பதை கண்டுபிடிக்க பப்துல் கலாம் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு.....

கே ஆர் விஜயன் : மெதுவாக மனோவிடம், எலேய் மக்கா அழுகுன பழச்சாறு நாற்றம் வந்தாப்புல இருக்கே பார்த்தீரா ஓய்..?

நாஞ்சில்மனோ : அட ஆமாய்யா....

விஜயன் கலவரமாகிறார் செருப்பை இறுக பிடித்துக்கொள்கிறார்...

வெளியே கலவரமான சத்தம் கேட்கிறது....வாசலில் நின்ற பளர்மதியும் பஜெயகுமாரும் வாந்தியெடுக்க வாசலைவிட்டு ஓடுகிறார்கள்....

வேகமாக தள்ளாடியபடி உள்ளே வருகிறார் கப்பல் "கேப்டன்"........ அரங்கம் மொத்தமும் டாஸ்மாக் வாடை பரவுது....

"டாய்......ராஜாக்கலு வந்துலு..... டாய்..... ராஜாக்கலு போயிலு....நீயாலு எனக்கு சம்பளம் தாறேலு...? நான் இங்கேலு  ஒரு புதிர் கட்சியாலு  இருந்தும்லு  என்னைக்கேக்காமலு  எப்பிடிலு கூட்டம்லு நடத்தலாம்லு...? 

ஏய்....கேட்டுக்கலு....'ல'...'லு'...'லி' தெலுங்குலு...கரண்டை 'ல"வுல இருந்து எடுக்க விட்டுருவேனாலு பார்ப்போமாலு..."என்று பாட்ட'லை' சுழட்ட....

விஜயன் செருப்பை மனோ மீது எறிந்துவிட்டு அவன் தோளில் மிதித்து ஜன்னல் எட்டிப்பிடித்து தாவி ஓடுகிறார், சிபி....ஒரே ஜம்பில் பக்கி இடுப்பில் ஏறி உட்கார, பக்கி ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுகிறான்...சின்னவீடு உடம்பை தூக்கி ஓடமுடியாமல் நின்று கதகளி ஆடுகிறார்...பன்னி, கேப்டனுக்கு தட்டாமாலை காட்டி அவரை கிர்ர்ர்ராக்கி விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்...

சில்வி டீச்சர் ஹேன்ட் பேக்கை தோளில் போட மறந்து [[பயந்து]] தலையில் மாட்டிக்கொண்டு ஏர்போர்ட் நோக்கி ஓடுகிறார்....சென்னை பவன், மஞ்சாசிங்கம் இவரை தள்ளிட்டு ஓடிய வேகத்தில் காணமல் போன கண்ணாடியை தரையில் தேடுகிறார்...

சாப்பாட்டு உலகம் மெதுவாக எழும்பி வந்து கேப்டன்  முன்பு நின்று அலட்டிக்காமல் ஒரு லுக் விட, கேப்டன் தள்ளாடியபடி சற்று பின்வாங்குகிறார், சாப்பாடு உலகம் பின்னாடியே வந்த திவானந்தா சுவாமி கேப்டனை விரலைக்காட்டி, நாக்கை ரெண்டாக மடித்துக்காட்டி பயமுறுத்துகிறார்....
எதுக்குமே அசையாமல் அமர்ந்திருக்கும் கோபலலிதாவை பார்த்து, சாப்பாடு உலகம் சொல்கிறார்....

நீங்க நல்லா இருப்பீங்க மேடம்..... நல்லா இருக்கனும்... கரண்டைப்போல..வாழ்க வாழ்க....!

டிஸ்கி : சும்மா தமாஷா நினச்சுக்கோங்க ஹி ஹி....

டிஸ்கி : என் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி...

70 comments:

  1. ஹா.. ஹா... செம கலக்கல்-நக்கல்... எல்லோரும் தமாஷா தான் நினைச்சுப்பாங்க...

    ஊ ல ல லா... ஊஉ ல ல லா...

    ReplyDelete
  2. ஆனாலும் கபியை இப்படிப்போட்டுத்தாக்கியிருக்க வேணாம். :)

    ReplyDelete
  3. அதே அதே தமாஷாதான் எடுத்துக்கணும் ஹி ஹி....

    ReplyDelete
  4. பாவம் டீச்சர், இனி ‘லா’ பேச முடியாது. ஹே ஹே ஹே

    ReplyDelete
  5. FOOD NELLAI said...
    ஆனாலும் கபியை இப்படிப்போட்டுத்தாக்கியிருக்க வேணாம். :)//

    உங்ககிட்டே வந்து புகார் குடுத்துட்டானோ ஆபீசர் ஹி ஹி...

    ReplyDelete
  6. FOOD NELLAI said...
    பாவம் டீச்சர், இனி ‘லா’ பேச முடியாது. ஹே ஹே ஹே//

    அதாலே "லா" சொன்னால் டீச்சர் வீட்டுக்கு வரும் கரண்ட்டு புடுங்கப்படும் ஹே ஹே...

    ReplyDelete
  7. மனோ என்ன....லா என்னை இப்படி சொல்லிட்டிங்க.....லா??ஆஹா ஆஹா ஆஹா நல்ல நகைசுவை மனோ..இன்னும் சிரிக்கிறேன்..ஹேண்ட்பேக் தலையிலா??சிவபெருமானே??நன்றி மனோ..செல்விக்கும் உங்கள் நட்பில் இடம் கொடுத்தமைக்கு!

    ReplyDelete
  8. செல்விகாளிமுத்து said...
    மனோ என்ன....லா என்னை இப்படி சொல்லிட்டிங்க.....லா??ஆஹா ஆஹா ஆஹா நல்ல நகைசுவை மனோ..இன்னும் சிரிக்கிறேன்..ஹேண்ட்பேக் தலையிலா??சிவபெருமானே??நன்றி மனோ..செல்விக்கும் உங்கள் நட்பில் இடம் கொடுத்தமைக்கு!//

    ஹா ஹா ஹா ஹா கழுத்துக்கு வந்தது பேக்கோட போச்சுன்னு சொல்லுங்க, கேப்டன் கையிலே மாட்டாம ஓடிட்டீங்களே அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  9. பல்லியாய் விக்கி இடுப்பில் கபி தொற்றியதால், இடுப்பொடிந்த விக்கி, இருநாளாய் வலைப்பக்கம் வரவில்லை! :)

    ReplyDelete
  10. FOOD NELLAI said...
    பல்லியாய் விக்கி இடுப்பில் கபி தொற்றியதால், இடுப்பொடிந்த விக்கி, இருநாளாய் வலைப்பக்கம் வரவில்லை! :)//

    அது ஓடியுற இடுப்பு மாதிரியா இருக்கு ஆபீசர்...?

    ReplyDelete
  11. ஏன்யா இப்படி ராத்திரியோட ராத்திரியா பதிவ போட்டுட்டீரு..........?

    ReplyDelete
  12. ////கோபலலிதா : ////

    அடங்கொன்னியா...... ஃபர்ஸ்ட் லைனே அவுட்டுய்யா...... உம்ம கைக்கு காப்பு கன்பர்ம்லே......!

    ReplyDelete
  13. ////இதை சப்பிரமனியன் சுவாமி சொல்லசொன்னார்.//////

    வெளங்கிரும்........

    ReplyDelete
  14. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன்யா இப்படி ராத்திரியோட ராத்திரியா பதிவ போட்டுட்டீரு..........?
    ///////////////////////
    தூக்கத்துல பதிவு போடுற வியாதியா இருக்கும் பன்னி..!

    ReplyDelete
  15. ///அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா "கொய்யா" மரத்துல இருந்து கரண்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன் //////

    ஏனுங்க இந்த தக்காளில, படுவால இருந்துலாம் எடுக்கப்படாதா?

    ReplyDelete
  16. ////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்/////

    க்கும்...... இனி எவன் எந்தப்பக்கத்துல இருந்து வந்து அப்ப போறானோ....?

    ReplyDelete
  17. /////சரிப்பு போலீஸ் : எட்றா அந்த அருவாளை.../////

    அவரு எடுறா கடல முட்டாயன்னு சொல்லி இருப்பாருங்கோ.... அது கை தவறி ச்சீ காது தவறி எட்றா அருவாளைன்னு கேட்டுடுச்சுங்கோ....!

    ReplyDelete
  18. //////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.////////
    ஆமா...கொளத்தூர் எம் எல் ஏ சொன்னாரு......! பன்னி அறிவாளின்னு...!

    ReplyDelete
  19. ////"பலியுகம்" தினேஷ் : பலாயி போலாயி கோலாகி நொந்து கொசு வந்து கோடியில் ஆடி படியில் வெந்து காலரா போலரா தைங் தக்கா தை ஆடியது...//////

    என்ன...... இது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு......?

    ReplyDelete
  20. /////ஐயோ என் ஆபீஸ்ல ஐந்தாவது வந்து சேர்ந்த அந்த ஸ்டெனோ காத்து இருக்குமே.../////

    அப்போ மீதி நாலு பேரும் வெரட்டி விட்டுட்டாங்களா?

    ReplyDelete
  21. /////வீடு சுரேஸ்குமார் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன்யா இப்படி ராத்திரியோட ராத்திரியா பதிவ போட்டுட்டீரு..........?
    ///////////////////////
    தூக்கத்துல பதிவு போடுற வியாதியா இருக்கும் பன்னி..!//////

    தூக்கத்துல வேற எதுவும் பண்ணாம இருந்தா செரி......

    ReplyDelete
  22. ////வீடு சுரேஸ்குமார் said...
    //////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.////////
    ஆமா...கொளத்தூர் எம் எல் ஏ சொன்னாரு......! பன்னி அறிவாளின்னு...!//////

    ஆமா எல்லாம் நம்ம ரெகமெண்டேசன்ல ஜெயிச்சி வந்த பயலுக....

    ReplyDelete
  23. இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'ல இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...
    //////////////////////
    நீங்க நாய்ன்னு சொன்னது நக்கீரைத்தானே....நோட் திஸ் பாயிண்ட்....!

    ReplyDelete
  24. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன்யா இப்படி ராத்திரியோட ராத்திரியா பதிவ போட்டுட்டீரு..........?//

    அப்போ நான் பதிவை போஸ்ட் பண்ணினது ராத்திரியா அவ்வவ்...

    ReplyDelete
  25. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////கோபலலிதா : ////

    அடங்கொன்னியா...... ஃபர்ஸ்ட் லைனே அவுட்டுய்யா...... உம்ம கைக்கு காப்பு கன்பர்ம்லே......!//

    தனியா மாட்டிக்கப்டாதுன்னுதான் இத்தனை பேரை கோர்த்து விட்டுருக்கேன்.

    ReplyDelete
  26. /////வீடு சுரேஸ்குமார் said...
    இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'ல இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...
    //////////////////////
    நீங்க நாய்ன்னு சொன்னது நக்கீரைத்தானே....நோட் திஸ் பாயிண்ட்....!/////////

    அது எப்படி வெறும் நாய்னு சொன்னா ஒத்துக்குவோமா...? நாய் நக்கின்னு ஃபுல்லா சொல்லோனும்.....

    ReplyDelete
  27. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////இதை சப்பிரமனியன் சுவாமி சொல்லசொன்னார்.//////

    வெளங்கிரும்........//

    அழுகுன முட்டை நாத்தம் வருதுய்யா...

    ReplyDelete
  28. /// டரர் குரூப்பிடம் மற்றும் நாஞ்சில்மனோ நண்பர்களிடமும் சொன்னால் கொய்யாக்களை அமோகமாக விளைவிப்பார்கள் என்பது என் கருத்து..
    ///////

    ஆமாங்...... நம்ம பெலாக்கு பக்கம் வந்தீங்கன்னா..... கொய்யாவா வெளைஞ்சு தட்டி கெடக்கு... அள்ளிட்டு போய்டலாம்.......

    ReplyDelete
  29. ////சின்னவீடு சுரேஷ் ////

    ஆள பாத்தா மலையூர் மம்பட்டியான் மாதிரி இத்தா பெருசா இருக்காரு......?

    ReplyDelete
  30. வீடு சுரேஸ்குமார் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன்யா இப்படி ராத்திரியோட ராத்திரியா பதிவ போட்டுட்டீரு..........?
    ///////////////////////
    தூக்கத்துல பதிவு போடுற வியாதியா இருக்கும் பன்னி..!//

    நமக்கு இதெல்லாம் புதுசாய்யா...

    ReplyDelete
  31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா "கொய்யா" மரத்துல இருந்து கரண்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன் //////

    ஏனுங்க இந்த தக்காளில, படுவால இருந்துலாம் எடுக்கப்படாதா?//

    நாசமாபோச்சு போங்க, பக்கி கல்லேடுத்துட்டு வரப்போறான்...

    ReplyDelete
  32. ////பேய் நக்ஸ் பக்கீரன்//////

    இன்னும் அது ஒண்ணுதான் பாக்கி........

    ReplyDelete
  33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்/////

    க்கும்...... இனி எவன் எந்தப்பக்கத்துல இருந்து வந்து அப்ப போறானோ....?//

    உமன் சாண்டி உங்களை தேடுறதா அப்பவே செய்தி வந்துருச்சு...

    ReplyDelete
  34. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////சரிப்பு போலீஸ் : எட்றா அந்த அருவாளை.../////

    அவரு எடுறா கடல முட்டாயன்னு சொல்லி இருப்பாருங்கோ.... அது கை தவறி ச்சீ காது தவறி எட்றா அருவாளைன்னு கேட்டுடுச்சுங்கோ....!//

    அய்யய்யோ பயபுள்ள பயந்து உளறிடுச்சோ....

    ReplyDelete
  35. ////சிபி : ஆக...... கி'ல்'மா என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது//////

    சிபி என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது

    ReplyDelete
  36. வீடு சுரேஸ்குமார் said...
    //////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.////////
    ஆமா...கொளத்தூர் எம் எல் ஏ சொன்னாரு......! பன்னி அறிவாளின்னு...!//

    நல்லகாலம் வீரப்பன்னு சொல்லல....

    ReplyDelete
  37. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////"பலியுகம்" தினேஷ் : பலாயி போலாயி கோலாகி நொந்து கொசு வந்து கோடியில் ஆடி படியில் வெந்து காலரா போலரா தைங் தக்கா தை ஆடியது...//////

    என்ன...... இது கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு......?//

    ஓ...காலரா"ன்னு சொன்னதும் புருஞ்சிடுச்சா...

    ReplyDelete
  38. //////சிபி....ஒரே ஜம்பில் பக்கி இடுப்பில் ஏறி உட்கார, பக்கி ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுகிறான்...////////

    பக்கி இடுப்புல பத்துப்பேரு உக்காந்து எல போட்டு சாப்புடலாமே?

    ReplyDelete
  39. /////சின்னவீடு உடம்பை தூக்கி ஓடமுடியாமல் நின்று கதகளி ஆடுகிறார்...//////

    இதுவேறயா.....?

    ReplyDelete
  40. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////ஐயோ என் ஆபீஸ்ல ஐந்தாவது வந்து சேர்ந்த அந்த ஸ்டெனோ காத்து இருக்குமே.../////

    அப்போ மீதி நாலு பேரும் வெரட்டி விட்டுட்டாங்களா?//

    ஓல்ட் இஸ் கோல்ட்'ன்னு அலமாரிகுள்ளே பூட்டி வச்சுட்டானோ?

    ReplyDelete
  41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////வீடு சுரேஸ்குமார் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன்யா இப்படி ராத்திரியோட ராத்திரியா பதிவ போட்டுட்டீரு..........?
    ///////////////////////
    தூக்கத்துல பதிவு போடுற வியாதியா இருக்கும் பன்னி..!//////

    தூக்கத்துல வேற எதுவும் பண்ணாம இருந்தா செரி......//

    ச்சே ச்சே அந்தமாதிரி நல்லகாரியம் எல்லாம் பண்ணமாட்டேன் ஹி ஹி

    ReplyDelete
  42. ////டிஸ்கி : சும்மா தமாஷா நினச்சுக்கோங்க ஹி ஹி....//////

    யோவ் அவனவன் அங்க 18 மணிநேர பவர்கட்ல அர உசுரு, கா உசுரா கெடக்கான், உமக்கு தமாஷ் வேண்டிக்கெடக்கா தமாஷு....... பிச்சிபுடுவேன் பிச்சி....!

    ReplyDelete
  43. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////வீடு சுரேஸ்குமார் said...
    //////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.////////
    ஆமா...கொளத்தூர் எம் எல் ஏ சொன்னாரு......! பன்னி அறிவாளின்னு...!//////

    ஆமா எல்லாம் நம்ம ரெகமெண்டேசன்ல ஜெயிச்சி வந்த பயலுக....,,

    ஆமா ஆமா சீக்கிரமே திகாருக்கு அனுப்பப்போராயிங்களாம்...

    ReplyDelete
  44. வீடு சுரேஸ்குமார் said...
    இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'ல இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...
    //////////////////////
    நீங்க நாய்ன்னு சொன்னது நக்கீரைத்தானே....நோட் திஸ் பாயிண்ட்....!//

    ஆஹா இன்னும் கொஞ்ச நேரத்துல என் போன் அலறுமே....அவ்வவ்....

    ReplyDelete
  45. செம கலக்கல் மக்களே...
    படிச்சு படிச்சு சிரிச்சு சிரிச்சு
    வாய் வலிச்சது தான் மிச்சம்...

    ReplyDelete
  46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////வீடு சுரேஸ்குமார் said...
    இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'ல இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...
    //////////////////////
    நீங்க நாய்ன்னு சொன்னது நக்கீரைத்தானே....நோட் திஸ் பாயிண்ட்....!/////////

    அது எப்படி வெறும் நாய்னு சொன்னா ஒத்துக்குவோமா...? நாய் நக்கின்னு ஃபுல்லா சொல்லோனும்.....//

    பேரை மாத்தி போன் நக்கி'ன்னு வைங்கப்பா...

    ReplyDelete
  47. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /// டரர் குரூப்பிடம் மற்றும் நாஞ்சில்மனோ நண்பர்களிடமும் சொன்னால் கொய்யாக்களை அமோகமாக விளைவிப்பார்கள் என்பது என் கருத்து..
    ///////

    ஆமாங்...... நம்ம பெலாக்கு பக்கம் வந்தீங்கன்னா..... கொய்யாவா வெளைஞ்சு தட்டி கெடக்கு... அள்ளிட்டு போய்டலாம்....//

    மம்மா'வின் கனி'வான கவனத்திற்கு....

    ReplyDelete
  48. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////சின்னவீடு சுரேஷ் ////

    ஆள பாத்தா மலையூர் மம்பட்டியான் மாதிரி இத்தா பெருசா இருக்காரு......?//

    கட்டபொம்மன்னு நினச்சி கர்ணன் படத்தை கிராபிக்ஸ் பண்ணிருச்சு பயபுள்ள ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  49. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////பேய் நக்ஸ் பக்கீரன்//////

    இன்னும் அது ஒண்ணுதான் பாக்கி......//

    போச்சுய்யா இன்னைக்கு சிதம்பரத்துல கலவரமே நடக்கும்...

    ReplyDelete
  50. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////சிபி : ஆக...... கி'ல்'மா என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது//////

    சிபி என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது//

    ஷாக் மட்டுமில்ல ஜெர்க்கும் ஆகிறது.

    ReplyDelete
  51. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////சிபி....ஒரே ஜம்பில் பக்கி இடுப்பில் ஏறி உட்கார, பக்கி ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுகிறான்...////////

    பக்கி இடுப்புல பத்துப்பேரு உக்காந்து எல போட்டு சாப்புடலாமே?//

    இவன் மலை ஆச்சே, அதான் பயபுள்ள சரிஞ்சிடுச்சு....

    ReplyDelete
  52. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////சின்னவீடு உடம்பை தூக்கி ஓடமுடியாமல் நின்று கதகளி ஆடுகிறார்...//////

    இதுவேறயா.....?//

    ஹா ஹா ஹா ஹா நல்லவேளை கேப்டன் கையில் இருந்த பாட்டலை புடுங்கல....

    ReplyDelete
  53. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////டிஸ்கி : சும்மா தமாஷா நினச்சுக்கோங்க ஹி ஹி....//////

    யோவ் அவனவன் அங்க 18 மணிநேர பவர்கட்ல அர உசுரு, கா உசுரா கெடக்கான், உமக்கு தமாஷ் வேண்டிக்கெடக்கா தமாஷு....... பிச்சிபுடுவேன் பிச்சி....!//

    கரண்டு இருக்குற கொஞ்ச நேரத்துலயாவது இன்னும் நொந்து போகட்டுமேன்னு...யாருலேய் அங்கே கல்லை தூக்குறது....

    ReplyDelete
  54. மகேந்திரன் said...
    செம கலக்கல் மக்களே...
    படிச்சு படிச்சு சிரிச்சு சிரிச்சு
    வாய் வலிச்சது தான் மிச்சம்...//

    ஹா ஹா ஹா ஹா நன்றி புலவரே....

    ReplyDelete
  55. பஹ்ரைன் மேடம் தி.மு.க. சார்பாக நெடுஞ்சாலை மறியல் நடத்தப்படும்.

    ReplyDelete

  56. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////வீடு சுரேஸ்குமார் said...
    //////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.////////
    ஆமா...கொளத்தூர் எம் எல் ஏ சொன்னாரு......! பன்னி அறிவாளின்னு...!//////

    ஆமா எல்லாம் நம்ம ரெகமெண்டேசன்ல ஜெயிச்சி வந்த பயலுக.//

    ப.குட்டிக்கு 007 கைதி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ReplyDelete
  57. இத கொபலளிதாவுக்கு அனுப்பபோறேன்

    ReplyDelete
  58. சிவகுமார் ! said...
    பஹ்ரைன் மேடம் தி.மு.க. சார்பாக நெடுஞ்சாலை மறியல் நடத்தப்படும்.//

    பஹ்ரைன் மேடமா அது யாருய்யா புதுசா?

    ReplyDelete
  59. சிவகுமார் ! said...

    //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////வீடு சுரேஸ்குமார் said...
    //////நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.////////
    ஆமா...கொளத்தூர் எம் எல் ஏ சொன்னாரு......! பன்னி அறிவாளின்னு...!//////

    ஆமா எல்லாம் நம்ம ரெகமெண்டேசன்ல ஜெயிச்சி வந்த பயலுக.//

    ப.குட்டிக்கு 007 கைதி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.//

    ஓ அப்போ எனக்கும் பன்னிக்கும் ஒரே நம்பரா ஹி ஹி...

    ReplyDelete
  60. என் ராஜபாட்டை"- ராஜா said...
    இத கொபலளிதாவுக்கு அனுப்பபோறேன்//

    முதல்ல அதை செய்யும்ய்யா வாத்தீ.....இங்கே வேலை ரொம்ப போரா இருக்கு.

    ReplyDelete
  61. ஹா ஹா...

    சிரிச்சிட்டே இருக்கேன்வோய்!!!

    அப்பாலிக்கா வந்து குந்துறேன்

    ReplyDelete
  62. @ பன்னி,மனோ....

    இந்த
    பகிலா கிட்ட இருந்து கரண்ட்டு எடுக்க முடியாதா????
    ல வருதே....

    (மாட்டுனாங்க..கொய்யால...!!!)

    ReplyDelete
  63. இல்லாட்டி டகிலா சாப்பிட்டு கரண்ட் எடுப்பது எப்படின்னு சிங்கம்,,,இளைய ஆதீனம் பிரபா கிட்ட கேக்கவும்....

    நல்லா சொல்லிதருவாப்ல....

    ReplyDelete
  64. வெளங்காதவன்™ said...
    ஹா ஹா...

    சிரிச்சிட்டே இருக்கேன்வோய்!!!

    அப்பாலிக்கா வந்து குந்துறேன்//

    ஹா ஹா ஹா ஹா வாய்யா வாய்யா ஹி ஹி

    ReplyDelete
  65. நாய் நக்ஸ் said...
    @ பன்னி,மனோ....

    இந்த
    பகிலா கிட்ட இருந்து கரண்ட்டு எடுக்க முடியாதா????
    ல வருதே....

    (மாட்டுனாங்க..கொய்யால...!!!)//

    அண்ணனுக்கு ஷகீலா நியாபகம் வரல போல....

    ReplyDelete
  66. நாய் நக்ஸ் said...
    இல்லாட்டி டகிலா சாப்பிட்டு கரண்ட் எடுப்பது எப்படின்னு சிங்கம்,,,இளைய ஆதீனம் பிரபா கிட்ட கேக்கவும்....

    நல்லா சொல்லிதருவாப்ல...//

    டகீலா தனியா அடிக்க முடியாது அண்ணே என்னா காம்பினேஷன் அதுகூடன்னும் சொல்லுங்க

    ReplyDelete
  67. அவ்வ்வ்வவ்வ்வவ்வ்வ்வ்

    ReplyDelete
  68. அச்சோ....மன்னு....இப்பிடியா போட்டு ஒவ்வொருத்தரையும் கும்மி வைப்பீங்க....இருக்காங்கதானே எல்லாரும் சுகமா !

    ReplyDelete
  69. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  70. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்...சென்று பார்வையிடஇதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_15.html?showComment=1397524988384&m=1#c6269993936082955026
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!