Showing posts with label தமிழா இது உனக்கான கடைசி தருணம். Show all posts
Showing posts with label தமிழா இது உனக்கான கடைசி தருணம். Show all posts

Wednesday, March 23, 2011

தமிழா இது உனக்கான கடைசி தருணம்

படித்தவர்கள் அதிகம் வாழும் சென்னையை விட்டுட்டு ஊருக்கு வெளியே போயி திமுக போட்டி இடுவதை பார்த்தால் சம்திங் ராங்......[படிச்சவனுக்கு இவனுக தகடுதத்தம் நல்லா புருஞ்சிடுச்சி போல] மக்களே உஷாரா இருங்கள்.....ஸ்பெக்ட்ரம் ஊழல் மறந்து விடாதீர்கள்.....ஈழத்தமிழ் மக்கள்
கொல்லப்படும் போது சட்டி நிறைய இட்லியை தின்னுட்டு அரை நாள் உண்ணா விரதம் இருந்ததை மறந்து விடாதீர்கள்.....சாதிக் பாட்ஷா தற்கொலை செய்யபட்டதை மறந்து விடாதீர்கள்....சாதிக் பாட்ஷா
உடலை போஸ்ட்மாட்டம் செய்த டாக்டர் ராஜினாமா [என்ன நிர்பந்தமோ] செய்ததை மறந்து
விடாதீர்கள்...இந்த சில நாதாரிகள் தரும் பிச்சை பணத்துக்காக.....
அம்மையாரும் உன்மத்தம் பிடித்தவராக கிளம்பி இருக்கிறார் தேர்தல் பிரசாரத்துக்கு..... ஒ தமிழனே
விழித்துக்கொள்... இது உனக்கான கடைசி தருணம். ஒன்று படு. வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!! ஆக தமிழனுக்கு விரோதமாக ஒரு பெரிய நெட் ஒர்க்கே செயல்படுகிறது அப்பட்டமாக தெரிகிறது!!!!
தமிழா நாம்தான் நம்மை காத்து கொள்ள வேண்டும்.....காத்து கொள்வாயா அல்லது பிச்சை காசுக்கு மயங்கி விடுவாயா காலம் பதில் சொல்லட்டும். 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!