Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Saturday, November 9, 2013

மனம் தளராத இரும்பு மனிதர்...!



“என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்: என் நேர்மைக்கும் நான் நேசிக்கும் என் தொழிலுக்கும் களங்கம் விளைவித்த ஆபத்தான சவாலான அதை “சத்தியம் ஒரு நாள் நிச்சியம் ஜெயிக்கும் என்ற என நம்பிகையினாலும் தெய்வத்தின் அருளாலும் ஜெயித்தேன் “ என்கிறார் நம்பி நாராயணன்.

 எதிர்பாராத நேரத்தில் சவால்கள் எழுவதும் அதை எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பதும் பெரிய நிருவனங்களில், அல்லது துணிவுடன் எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லை. ஒரு தனிமனிதன் வாழ்க்கையிலும் நிகழக்கூடியது என்ற நிதர்சனமான உண்மையை புரிய வைக்கிறது இந்த விஞ்ஞானியின் வாழ்க்கை.
நம்பி நாராயணன் ஒரு விண்வெளியியல்விஞ்ஞானி.
 
ஏரோநாட்டிகல் எஞ்ஞினியரிங்கும், ராக்கெட் சையின்ஸும்படித்த பின் இந்திய விண்வெளித்துறையில் (ISRO)அப்துல் கலாம் சதிஷ் தாவன் போன்றவர்களுடன் 1970களில் பணியாற்றியவர். திரவ எரிபொருளின் சக்தியில் இயங்கும் ராக்கெட்மோட்டர்களை. எந்த வெளிநாட்டின் உதவியுமில்லாமல் 1970லேயே உருவாக்கியவர். மிக பெரிய வல்லரசுநாடுகள் மட்டுமே அறிந்தந்திருந்த அதிவேக ராகெட்களை செலுத்த தேவையான கிரையோஜினிக் என்ற திரவ எரிபொருளை உள் நாட்டிலியே தயாரிக்க ரஷ்ய பிரெஞ்ச் அரசு நிறுவனங்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து அதை கற்றவர்.செய்யும் தொழிலையே தெய்வமாக நினைக்கும் இந்த மனிதருக்கு தன் தொழிலைத்தவிர வேறுஎதுவும் தெரியாது.

1994லில் ஒரு நாள் திருவனந்தபுரத்தில் இவர் வீட்டுக்கு வந்த போலீஸ் படைஇவரை கைது செய்கிறது. மறுநாள் தலைப்பு செய்திகள் சொன்ன தகவல் இவர் ராக்கெட் ரகசியங்களையும் ராணுவ ரகசியங்களையும்  பாக்கிஸ்தானுக்கு விற்கிறார். என்பது.இன்று போல் செய்திகளை துரத்தும் டிவி சேனல்கள் அன்று இல்லை. ஆனால் மாநில மற்றும் தேசிய நாளிதழ்களில்  தொடர்ந்து ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல செய்திகள் விஸ்வரூபம் எடுத்து நம்பி நாராயணணையும், அவரது சகா சிகுமாரையும் தேசதுரோகிகளாக வர்ணித்தன.

 மலையாளத்திலும் தமிழிலும் பல வாரபத்திரிகைகள் தொடர்களில் உண்மை”கதைகளை” வெளியிட்டன. ஒவ்வொருமுறையும் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லும்போது துரோகி என முகத்தில் குத்தி காரி உமிழ்ந்தனர் சிலர்... சிறையில் ”உன்னை சரியாக நடத்தாத மேலதிகாரியை மாட்டிவிடு” என்று கொடுத்த அட்வைஸை ஏற்காததால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யபட்டார்.. இரண்டாண்டு நீண்ட பலவிசாரணைக்கு பின் சிபிஐ 1996ல்அறிவித்த முடிவு  ”இது பொய்யாக புனையபட்ட ஒரு வழக்கு. வழக்கை தொடர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், அவர்களுக்கு கோர்ட்மூலம்தகுந்த  தண்டனையும் தரபடவேண்டும்”
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 1998ல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபட்டார். ஆனாலும் மாநிலபோலீஸ் கேரள உயர்நீதிமன்றத்திற்கு போனது. அங்கும் வழக்குதள்ளுபடி செய்யபட்ட நிலையில் நம்பி நாராயணன் சந்தித்த அடுத்த சோதனை மாநில அரசு முழுவழக்கையும் மீண்டும் மாநிலபோலீஸ் மறுவிசாரண செய்ய இட்ட உத்தரவு.

ஏன் இவருக்கு இது நேர்ந்தது.? போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செல்வாக்குள்ள பணக்கார்களும் வில்லனின் கூட்டாளியாக கூட்டு சேர்ந்து அப்பாவி கதாநாயகனை பலிகடாவாக்கி தங்கள் பிரச்னைகளை தீர்த்துகொள்ள முயலும் தமிழ் கிரைம் திரில்லர் சினிமா திரைக்கதையின் உண்மைவடிவம்தான் இவரது கதை. தனது உயர் அதிகாரியை பழிவாங்க ராணுவ ரகசியம் கடத்தல் என ஒர் கற்பனை செய்தியை கசிய விட்ட போலீஸ் அதிகாரி, ஒரு பெரிய பத்திரிகை குடுமபத்தில் எழுந்த வாரிசு போரட்டத்தில் தனக்கு உதவாத அதே உயர் போலீஸ் அதிகாரியை வஞ்சம் தீர்க்க காத்திருந்த செல்வாக்குள்ள ஒருதினபத்திரிகையின் அதிபர், பொறியாக இருந்த இந்த பிரச்சனையை பெருந்தீயாக வளர்த்து, ”தேசத்ரோகிகளை காப்பற்ற முயல்கிறார் இந்த முதல்வர்” என சொல்லி அரசியல் பிரச்னையாக்கி. முதல் அமைச்சரையே பதவியிழக்க செய்த  அரசியல்வாதிகள் என சேர்ந்த ஒரு கூட்டணியின் வெற்றி இந்த மனிதரின் வாழக்கையை பகடைகாயாக்கி ஆடியதில் பெற்றது..

வழக்கு நடைபெற்ற காலங்களில் நாரயணன் அடைந்த துயரங்களின் உச்சம் மன அழுத்தினால் அவர் மனைவி தன் செயல் திறன்களை இழந்து நின்றது. ”என்னால் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. நான் தேசதுரோகி என என் காதுபடவே பேசுவார்கள்” என்கிறார் நாராயணன். நிரபராதி என அறிவிக்கபட்ட பின்னரும் அரசின் மறு விசாரணை அறிவிப்பினால் வெகுண்ட நம்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். அங்கும் கேரள அரசின் அணுகுமுறையை மிக கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து கடிந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. உச்சநீதிமன்றம். அரசு பதவி திரும்ப கிடைத்தாலும் கெளரவங்களை இழந்தார்.

 மூத்த விஞ்ஞானியான இவருக்குஅதிகாரமில்லாத நிர்வாக பணிகளே தரபட்டது. மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இன்று திட்டமிடுகிறது இந்திய விண்வெளிதுறை. அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்க ,உழைத்த , விருதுகள் வழங்கபட்டிருக்கவேண்டிய இந்த விஞ்ஞானி, எந்த கெளரவவும் இல்லாமல் 2001ல் பதவி ஓய்வு பெற்றார்.பொய் வழக்கு போட்டதற்காக குற்றம் சாட்டபட்டபட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அந்த போலீஸ் அதிகாரிகள் பதவிஉயர்வு பெற்றார்கள். அதில் ஒரு மூத்த அதிகாரி ஓய்வுக்கு பின்னரும் பெரிய அரசு பதவி அளிக்கபட்டு கெளரவிக்கபட்டிருக்கிறார், கிளைமாக்ஸாக சிபிஐயின் பரிந்துறையின் பேரில் இந்த பொய்வழக்கை போட்ட போலிஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்த வழக்கை அரசு கைவிட்டது. சொன்ன காரணம்  “பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நீண்ட காலமாகிவிட்டது.”

தவறாக குற்றம்சாட்டபட்டு பொய்வழக்குகள் போடபட்டு தாமதமாக கிடைத்த நீதியினால் தன் வாழ்க்கையின் வசந்தத்தை இழந்து போன நம்பி மனித உரிமை ஆணையத்தில்  தொடர்ந்த வழக்கில் அது கேரள அரசுக்கு இட்ட ஆணை நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய். கொடுக்க வேண்டும் என்பது. ஆணை இடபட்டது 2001ல். 2012 வரை கேரள அரசு அசையவில்லை.. வேறு எந்த மனிதனும் வீபரிதமான முடிவுகளை கூட எடுத்திருக்க கூடும் என்ற நிலையில் நம்பி நம்பிக்கையுடன் உயர் நீதிமன்றத்தை அணுகியதில் ”உடனடியாக 10 லட்சம் கொடுங்கள். பிரச்னைகளை பிறகு பேசுங்கள் என மாநில அரசை. எச்சரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் (இந்த கட்டுரைஎழுதும்வரை) அந்த பணமும் தரப்படவில்லை.
எனது பிரச்னை பணமில்லை. என் நேர்மையும் அநீதியை எதிர்த்ததில் நான் சந்தித்த சத்திய சோதனைகளும் பதிவு செய்யபடவே போராடுகிறேன்” என்கிறார் நாராயணன்.
”பத்திரிகைகளும், காவல்துறையும் அரசியல்வாதிகள் செய்த பொய்பிரசாரத்திற்கு அப்பாவி கேரளமக்கள் பலியாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்கள் சார்பில்மன்னிப்பு கேட்கிறேன், கேரள எழுத்தாளர்கள், அறிவிஜிவிகள் சார்பாக மன்னிப்புகேட்கிறேன் பத்திரிகைகள் சார்பில் மன்னிப்புகேட்கிறேன் “எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பி சார்” என்று மிகசிறந்த கேரள இலக்கிய வாதிகளில் ஒருவரான பால்சக்காரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஓரு பத்திரிகையாளார் கூட்டதில் பேசியபோது அங்கிருந்தவர்களும், அதை மறுநாள் செய்திதாட்களில் படித்தவர்களும் அதை தாங்கள் கேட்ட மன்னிப்பாகவே உணர்ந்து நெஞ்சம் நெகிழந்தது நிஜம்.

நன்றி : சுவடுகள் 

ஒரு மலையாளி நண்பன் சொன்ன தகவல் இது, உடனே கூகுளில் அந்த பெயரை தேடினேன், மனம் நொந்து போனேன், அதனால்தான் உங்களுக்கும் இதை பகிர்ந்துள்ளேன்.

Tuesday, October 29, 2013

காந்தி பிறந்த மண்ணில் இருந்து ஒரு தலைவன்....!

ஒரு நாட்டை நாறடிக்க வேண்டும் என்றால் இந்த காங்கிரஸ் கட்சி ஒன்றே போதும், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் நடத்தும் அழிச்சாட்டியங்களை இந்திய மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள்...!

இது வேறெந்த நாட்டிலும் இல்லாத அநியாயம், ராஜீவ் பூந்தியை கொன்னது யாருன்னு கூட இன்னமும் தெரியாமல், ஒரு இனத்தையே கருவறுத்தவர்களின் உண்மை முகம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

மனதில் வஞ்சம் வைத்து, வெளியே இன்முகம் காட்டும் அன்னை, முசோலினி, நாடு பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்களின் பரம்பரையில் வந்தவருக்கு இங்கே மிகப் பெரிய சக்தியாக உருவாக வழி அமைத்துக் கொடுத்தது யாரு ?

உலக மக்கள் தொகையே 700 கோடிதான், ஆனால் இவர்கள் களவாண்ட மக்கள் பணமோ [[ஸ்பெக்ட்ரம்]] ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் கோடி....! உலகளவில் தமிழனின் வீரம் தெரியப்பட்டதும் அல்லாமல், களவாங்குறதிலேயும் நாங்க கில்லாடிடான்னு, காட்டிட்டான் தமிழன்...!

ஆட்சியை தன் கையில வச்சிகிட்டே "எங்க பாட்டி, அப்பா மாதிரி நானும் கொல்லப்படலாம்"னு கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூவுது ஒரு ஆக்கங்கெட்ட கூவ....!

அடுத்து...

தமிழ்நாட்டுல ஒரு குடும்பம் தமிழ்நாட்டை மொத்தமா வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்று பிரிச்சு ஊரை அடிச்சி உலையில போட்டுகிட்டு இருக்கு....!

அடுத்து தலைநகரை கைப்பற்றும் கட்சி கூட கூட்டு வைக்க பலமான சிந்தனையில் இருக்கு இவங்க தலைமை, பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அதுவும் மோடி பிரதமராக வரும் பட்சத்தில் "பழம் மொழி" களி திங்க மறுபடியும் திகார் போகவேண்டி வரும்...!
அதான் என்னடா பண்ணலாம் என்கிற யோசனையில் இருக்கு தலைமை, காங்கிரஸை விட்டுட்டு போலாம்னாலும், காங் இவிங்களை விடுறதா இல்லை, ரெண்டு மூன்று தடவை முயற்சித்தும், காங்கிரஸ் பயங்கரமான மறைமுக தாக்குதல் நடத்தியதும் அடங்கி விட்டார்கள்.

ஆக புலி வால் பிடித்த கதையாக உடன்பிறப்புகள் இருக்கிறார்கள், என்ன இனி இவிங்க ஜெயிச்சு வாறது என்பது என்னைப் பொறுத்தவரையில் கானல் நீர்தான், பேசாம இருக்குற காசை எடுத்துட்டு போயி பேரிக்காவில் செட்டில் ஆகச் சொல்லுங்கள்.

காங்கிரஸ் கட்சி வேரும் வேரடி மண்ணோடும் சா[ய்க்க] யவேண்டும் என்பது என் பிரார்த்தனை, வேண்டுதல்.... இவர்களைக் கொண்டு நாட்டுக்கு ஒரு பிரயோசனம் இல்லை, மெத்த படித்த பொருளுதார மேதை அன்னையின் காலில் மண்டிபோட்டுகிட்டு கேவலமே இல்லாம இருக்காம்ன்னா மக்கள் கதி ?
மக்களே இனியாவது யோசிப்போம் செயல்படுவோம், பத்து வருஷம் பட்டது போதும், இனியாவது ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்....!

ஓ....நம்ம கவலை இனி விஜய்"யின் ஜில்லா பற்றியும், அஜித்"தின் ஆரம்பம் பற்றியும்தானே இருக்கப் போகுது ?!!!

அடபோங்கப்பா......


Friday, October 4, 2013

சுகமான பிரசவம்....!

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:-

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம்

மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்­ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.


நன்றி : இயற்கை அளிக்கும் நிவாரணம்.

Wednesday, September 18, 2013

கேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...!

திருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர்களின் கூடாரமாக திகழ்ந்த காட்டுப் பகுதியும், பெண்களை கற்பழித்து கொன்று வீசும் திகில் பிரதேசமாக இருந்த அந்த காட்டை சூப்பரான சிட்டியாக மாற்றியவர் ஒரு தமிழர்....! திருவனந்தபுரத்தின் முந்தய பெயர் : தம்பானூர்...!

கேரளா இடுக்கி அணை கட்டப்படும் போது, காலில் ஏதோ தட்டுபட, தோண்டி பார்த்தால், இந்த இடத்தில் அணை கட்டலாம் என்ற கல்வெட்டு கிடைத்திருக்கிறது, அணை கட்டலாம் என்று முன்பே கண்டு பிடித்தவரும் அதே தமிழர்தான்...! அவர் பெயர்.....

சர் சி பி இராமசுவாமி 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் அக்டோபர் 8, 1936 - ஆகஸ்ட் 16, 1947

அதேபோல திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனை இருக்கும் இடமான பத்மநாபபுரம் என்ற பெயர் வர [[சூட்ட]] காரணமென்ன ? இந்த லிங்கை தட்டிப் பாருங்கள்...! அவரும் ஒரு தமிழன்தான்...!
---------------------------------------------------------------------------------------------------------

பஜாரில் கால்குலேட்டர் வாங்கும் போது அது சரியாக இயக்கத்தில் உள்ளதா என்று அறிய அதில் 12345679 என்ற எண்ணை 8 ஆல் பெருக்கிப் பாருங்கள் இப்பொது விடை 98765432 என்று வந்தால் அது நல்ல கால்குலேட்டர் என்று அர்த்தம்! செக் பண்ணிப் பாருங்கள்! 

செல்போனை சட்டைப் பாக்கெட்டில் வைப்பவர்கள் அதன் முன் பகுதி வெளியில் பார்த்த மாதிரி வைத்தால் போனில் இருந்து வரும் கதிர்வீச்சு பாதிப்புக்களை குறைக்கலாம். பொதுவாக சட்டைப் பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்தல் நலம்.

நன்றி : தளிர் 
----------------------------------------------------------------------------------------------------------

ஆண் புத்தி பெண் புத்தி பற்றி ஒரு காமெடி....காமெடிதான் ஆமா....

ஸ்கூட்டியில் வந்த இளம் பெண்ணும் பைக்கில் வந்த ஆணும் நேருக்கு நேராக மோதிவிட, ஆண் பயங்கரமாக அவளை திட்டுகிறான், அவள் சாந்தமாக பேசுகிறாள்,  கேட்கிறாள், கெஞ்சுகிறாள், ஆனாலும் இவன் விடாமல் திட்டுகிறான்.

அவள் பொறுமையாக காத்திருந்து விட்டு, இவன் திட்டி சோர்ந்தபின் மறுபடியும்  கேட்கிறாள்.

மனம் இளகி போன இவன், "சரி நான் மன்னித்துவிட்டேன், ஆனால் ஒரு கண்டிஷன்"

"என்ன சொல்லுங்க ?"

"நாம் சமாதானம் ஆகிவிட்டோம் இல்லையா அதனால என்கிட்டே ஒரு ஷாம்பெயின் பாட்டல் இருக்கு அதை ரெண்டு பெரும் பாதி பாதி குடித்து என்ஜாய் பண்ணவேண்டும் சரியா ?"

"சரி ஓகே நான் ரெடி" பெண் 

பாட்டலை திறந்து ஆண் பாதியை குடித்துவிட்டு அவளுக்கு கொடுக்குறான். ஆனால் அவளோ....

"ஏன்டா நாதாரி நன்னாறிப் பயலே குடிச்சுட்டாடா வண்டி ஓட்டுறே ? குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதும் அல்லாமல், என் மேலயும் வந்து மோதி இருக்கே ராஸ்கல்...."

ஆண்....

"அய்யய்யோ மேடம் மன்னிச்சுருங்க மன்னிச்சுருங்க....போலீசை கூப்பிட்டுறாதீக...."

"நீ ஷாம்பையினை திறந்ததுமே போலீசுக்கு போன் பண்ணிட்டேன்டா டுபுக்கு...."

Monday, September 9, 2013

இது அமெரிக்காவின் ராஜ தந்திரமா குள்ளநரி தந்திரமா ?

இந்திய பணத்தின் வீழ்ச்சியினால் நாம் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் திட்டிக் கொண்டு இருக்கிறோம் இல்லையா ? ஏன் நமக்கும் அதில் அலட்சியம் தாங்கும் பங்கும் இருக்கிறது என்பதை எனது சிற்றறிவு மூலம் சொல்கிறேன்.

நமது இந்திய பணம் [[நோட்டு]] தங்கத்தில் இன்வெஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது, உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் பேங்கில் எனக்கு இந்த நோட்டு [[பணம்]] வேண்டாம் என்று கொடுத்தால், அதற்க்கு சரி நிகரான தங்கம் ரிசர்வ் பேங்க் தரவேண்டும், அதற்க்கு உத்திரவாதமும் நோட்டில் எழுதப் பட்டு இருக்கிறது...!
[[ I PROMISE TO PAY THE BEARER THE SUM OF TEN RUPEES ]]

அடுத்து....

வளைகுடா நாடுகள் மொத்தமும் பெட்ரோலை அமெரிக்கன் டாலரில் வர்த்தகம் செய்வதால் அமெரிக்கன் டாலர் நிலை தடுமாறாமல் மேல் நோக்கி நகர்கிறது.

 என்று சவுதியோ அல்லது குவைத்தோ அந்த டாலர் வர்த்தகத்தை ஈரோ பணத்தில் செயல்படுத்தும் பட்சத்தில் அமேரிக்கா [[டாலர்]] அட்ரசே இல்லாமல் போகும். [[குவைத் ஏற்கனவே ஈரோவில் டிக்ளேர் செய்யாமல் அங்கே வர்த்தகம் செய்வதாகவும் ரகசிய செய்திகள் உண்டு]]

வளைகுடா நாடுகளின் வர்த்தகம் காரணம் அமேரிக்கா டாலர் நோட்டுகளை அச்சடித்து கொண்டே போகிறது, இதே நான் சொன்னதுபோல இந்திய பணத்திற்கு தங்கம் கிடைக்கும், ஆனால் அமெரிக்க டாலருக்கு வேல்யூவே கிடையாது.

அமெரிக்கன் பேங்கில் டாலரை கொண்டு போயி கொடுத்துவிட்டு இதற்க்கு நிகராக என்ன தருவாய் என்று கேட்டால் "போடா கொய்யால அதை கொண்டுபோய் குப்பையில் போடு" என்றுதான் சொல்வான்.

அமெரிக்க டாலரில் அந்த பணத்திற்கு எந்த ஒரு உத்திரவாதமும் எழுதப்படவில்லை மாறாக கேரண்டி இல்லை என்றே எழுதபட்டுள்ளது.
[[THIS NOTE IS LEGAL TENTER FOR ALL DEBTS, PUBLIC AND PRIVATE]]
  
சரி அது போகட்டும் நான் சொல்ல வந்ததை சொல்லிருதேன்....

நாம் நம்முடைய [[இந்திய]] பணத்தை மேல் நோக்கி நகர்த்த என்னால் முடிந்த ஆலோசனை என்னவென்றால், நம் இந்திய மக்கள் வீடுகளில் ஒரு அறுபது சதவீதம் பைக், ஒரு நாப்பது சதவீதம் கார்கள் உள்ளவர்கள், ஒரு வாரத்திற்கு தனது காரையோ, பைக்கையோ உபயோகிக்காமல், அரசாங்க பஸ்களில் அலுவல் செல்வோம்.

கொஞ்சம் கொஞ்சம் தூரத்திற்கு போகவேண்டுமானால் பைக்கில் போகாமல் நடந்து செல்வோம், நம்மாளுங்க பக்கத்து வீட்டுக்கு போகனும்னாலே பைக்லதான் போறான் இல்லையா ?

அந்நிய நாட்டு பொருட்கள் அதாவது சோப்பு சீப்பு கண்ணாடி ஷாம்பூ பேஸ்ட் பூஸ்ட் கோலா பெப்சி மிராண்டா துணிகள் [[புரியும்னு நினைக்கிறேன்]] எதுவாக இருந்தாலும் நம் உள்நாட்டு நம்ம இந்திய பொருட்களையே உபயோகிப்போம், இந்துஸ்தான் லிவர் கம்பெனி என்று பெயர் வச்சிருப்பான் ஆனால் அது இந்திய கம்பெனி கிடையவே கிடையாது....!

இதை மட்டும் செஞ்சிட்டோம்னா ஒரு வாரத்தில் டாலர் வேல்வியூ சர்ர்ர்ர்ன்னு கீழ் நோக்கி சரிவதை நேரிடையாகவே காணலாம், ஆனால் என்ன........ அமெரிக்கன் நேவி கப்பல் இந்தியா பக்கம் திரும்பலாம்....!

ராமர் பிள்ளையின் பெட்ரோல்ல என்ன பிரச்சினைன்னு யாருமே தெளிவாக இதுவரை சொல்லவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது....!

இனியும் ஒரு கோணம்....

கள்ள நோட்டுகள் அதிகமாக புழங்குவது ஆயிரம், ஐநூறு ரூபாய் நொட்டுகளில்தான் இல்லையா ? திடீரென ரிசர்வ் பேங்க் அவைகளை தடை செய்ய போகிறோம் ஆகவே பக்கத்தில் உள்ள வங்கிகளில் இத்தனாம் தேதிக்குள் உங்கள் பணம்களை மாற்றியோ, டிபாசிட்டோ செய்து விடுங்கள் என்று சட்டம் வந்தால்.....

கள்ள நோட்டுக்கும் ஆப்பு, கருப்பு பணம் பதுக்கி வச்சிருக்கவனுக்கும் ஆப்பு, சரியா இல்லையா ?

யோசிப்போம் செயல்படுவோம் நம் நாட்டை நாமே காப்போம் யார் தயவும் தேவை இல்லாமல், நன்றி....!


Friday, July 26, 2013

திருநெல்வேலி போலீஸுக்கு அடி உதை, ஏன்...?

ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கப் போனான்.
ஆனா, கடைசியில மனம் திருந்திட்டான்.
*
*
*
ஏன்?
*
*
*
ஏன்னா?
*
*
*
கடைசியிலதான் அவன் காதலி அந்த
வார்த்தையை சொன்னா...
*
*
*
என்ன சொன்னா?
*
*
*

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"

நன்றி : வானம்
----------------------------------------------------------------------------------
அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்//

முதல்ல இந்தாளை தூக்கி கடல்ல போடுங்கய்யா, இந்தாளு வாயை திறந்தாலே அங்கே தமிழனை கொல்கிறார்கள், தமிழன் தமிழன் என்று உசுப்பேத்துற தெலுங்கன் வாழ்க ப்பூப்ப்....
------------------------------------------------------------------------------------
தனித் தெலங்கானா அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதியில் 23 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
------------------------------------------------------------------

நெல்லையில் கைதிகளை ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு சென்ற போலீசாரை வக்கீல்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் 40 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்து, வக்கீல்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் கோர்ட்டுக்கு வரவும் தடை விதித்துள்ளனர்.
---------------------------------------------------------
கன்னியாகுமரியில் நேற்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 2 படகுகளும் தரை தட்டி நின்றன. இதனால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீண்ட நேரமாக துவங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து தரை தட்டிய படகுகள் இயல்பு நிலைக்கு வந்தது. தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டது.
---------------------------------------------------------
பதினான்காவது வருஷம் கார்கில் வெற்றி கொண்டாட்டம்//

என்னைப் பொறுத்தவரை கார்கில் போரில் நாம் தோற்று விட்டோம்...!
-------------------------------------------------------

அரிதான ஒரு படம், அண்ணன் பிரபாகரனும், அண்ணன் வைகோ"வும் கூட ஒரு புலிக்குட்டி....! உங்கள் பார்வைக்கு.
-----------------------------------------------------------------------

மனோ'தத்துவம் : எல்லாருக்கும் எல்லாமே தெரியும்னு நாம பேசனும்.

Thursday, June 28, 2012

இது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான அவசர பதிவு...!!!



யாருமே அறியாதவாறு காங்கிரஸ் அரசு ஒரு அநியாயமான திட்டத்தை கொண்டு வந்துருக்கிறது அது, இனி வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்தில் 12.5 சதவீதம் டாக்ஸ் அடித்து கட் பண்ணிதான் கொடுக்குமாம்...!!!

உங்க அம்மாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் அனுப்பினால் கூட 750 ரூபாய் கட் செய்துவிட்டே கொடுப்பார்களாம், அதாவது நீங்கள் சம்பாதித்து 10000 ரூபாய் அனுப்பினால் 1250 ரூபாய் கட் பண்ணிவிட்டு பாக்கி பணத்தைத்தான் கொடுப்பார்களாம், சசிதரன் பிள்ளை கேரளா முதல்வர் உமன் சாண்டிக்கு காரசாரமாக லட்டர் எழுதி உள்ளாராம், ஏன்னா வெளிநாட்டு பணம் கேரளாவில்தானே வந்து குவிகிறது...!!!

நரசிம்மராவ் காலத்தில் இப்படி இந்த நிலைமை இருந்ததால்தான் உண்டி என்று சொல்லப்படும் ஹவாலா மோசடிகள் அதிகமாக நடந்தது, அதனால் நாட்டில் தீவிரவாதம் அதிகரிப்பதை அறிந்த ராவ் அதை உடனடியாக ரத்து செய்தார்....!!!

இப்போ மறுபடியும் அதே சட்டம் அமலுக்கு வருமானால் ஹவாலா மறுபடியும் செழித்தோங்கும், தீவிரவாதமும் தன் கோரை பல்லை நீட்டும் என்பதில் சந்தேகமே இல்லை, சத்தியமா நாடு உருப்படப்போறதில்லை, உருப்பட்டாலும் காங்கிரஸ்காரன் உருப்படவிடமாட்டான்....!!!

எங்களுக்கு உண்டி என்ற ஹவாலா இருக்கு, அனுப்பும் சார்ஜும் மிச்சம் போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்........கொய்தா வாழ்க.......பின்லேடன் வாரிசுகள் வாழ்க......சவூதி வாழ்க......எல்லாரையும் வாழவைக்கும் நாதாரி அமெரிக்கா வாழ்க போங்கடா வெண்ணைகளா....!!!

டிஸ்கி : ஜூலை ஒன்னாம் தேதி முதல் இது அமலாகிறது, என்னப்போல வெளிநாட்டில் இருப்பவர்கள் சந்தோஷமாக உண்டி நபரை அணுகவும், நம்மை நல்லவனாக வாழவைப்பதும் ஆட்சியாளர்கள்தான், கெட்டவனாக மாறவைப்பதும் இந்த நாதாரிங்கதான் உண்டா இல்லையா கமெண்டில் கும்மி, இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்கள் பிளீஸ்......

டா[க்]ஸ்'கி : ஹவாலா பணத்தால் வளரும் தீவிரவாதம் வாழ்க, இதற்க்கு முழுபொறுப்பும் காங்கிரஸ் தலைமையையே சாரும்...!!!





நன்றி : பக்கத்து நாட்டில் இருக்கும் நம் எல்லாருக்கும் தெரிந்த நண்பர் கடுமையான [[க்ய்ய௪த௯௩௧ஹ்பி ]] கோபத்தில் எனக்கு போன் செய்து இப்பதான் இந்த மேட்டரை சொன்னார், வேண்ணா பாருங்கள் அவர் கமேண்ட்சும் இப்போ காரசாரமா வரும் பாருங்கள்...!

Sunday, June 17, 2012

நாட்டு நடப்புகளும், வேதனைகளும், சந்தோஷங்களும்...!

நாட்டு நடப்புகளும் வேதனைகளும், சந்தோசங்களும்...

# போலீஸ் வாகனத்துக்கே பாதுகாப்பு இல்லை, இரும்பு ஜாலிகளால் பின்னப்பட்ட வாகனங்களில் ரோந்து போகிறார்கள், அப்பிடின்னா மக்களுக்கு என்னய்யா பாதுகாப்பு...?


# என் மகனோடு படித்த [[மும்பை]] நான்கு மாணவிகள் பத்தாவது வகுப்பில் தோற்றுப்போனதினால், பெற்றோர் வீடு திரும்புமுன் தற்கொலை - இன்னும் கூடுதலான கவுன்சிலிங் தேவை, மற்றும் அல்லாது இந்த முறை மகாராஷ்ட்ரா பரீட்சை தேர்வு மிகவும் கெடுபிடியாக நடந்துள்ளதாக குற்றசாட்டு வந்துள்ளது....!!!


# பஹ்ரைனில் கார்பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட எட்டு கார்களை ஒரே நேரத்தில் கொளுத்திய நரகாசுரனை அரசாங்கம் வெளியே காட்டவுமில்லை, மீடியாவின் வாயையும் பூட்டி விட்டது....!!!


# நாம் அமைதியாக இருந்தாலும், நாம் பயந்துவிட்டோம் என்று எண்ணி மிரட்டிய ஒரு சேட்டனை பத்தே நிமிஷத்தில் ரூமை செக் அவுட் பண்ணிய வேகத்தை பார்த்து மிரண்டு போன எங்கள் ஜெனரல் மேனேஜர், அவனையும் இம்புட்டு நாள் பயங்காட்டி வச்சி இருந்துருக்கான் அந்த சேட்டன், பொறுமைக்கும் அளவு உண்டா இல்லையா ஹி ஹி...!!!


# பழசையே போட்டு போட்டு மாவரைத்து லைக் போட சொல்லி மிரட்டும் பேஸ்புக் நண்பர்கள் [[நான் விக்கியை சொல்லலை]]


# நிறைய பேசும் கலைஞரை பேசாம சனாதிபதி ஆக்கினால் என்ன...? தொல்லை அதோடு ஒழியுமே...!!! ஓ அங்கேயும் நாலு குடும்ப வாரிசும் மல்லுக்கு போயிருமோ ஹா ஹா ஹா ஹா...!!!


# சாட்டிங்கில் வந்து, மனோ நலமா'ன்னு கேட்டுட்டு, நான் இன்னைக்கு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு சொல்லி லிங்கை கொடுத்து கமெண்ட்ஸ் போடசொல்றாங்கோ, அதானே பார்த்தேன் கொய்யால ஒரு நாளும் வராத பயபுள்ளை இன்னைக்கு சாட்டிங்க்ல வருதேன்னு டேய் இதை முதல்லயே சொல்லவேண்டியதுதானே..?!!!


#  எப்போ ஸ்கைப்ல பேசுனாலும், ஒன் கப் ஆஃப் டீ அன்ட் புட் சம் ஹாட் வாட்டர்னு ஸ்டெனோவுக்கு ஆர்டர் குடுக்குறாப்ல பில்டப் கொடுக்குறானே ஒரு மூதேவி அது என்னையும் ஆபீசரையும் விஜயனையும் கடுப்பேத்தவா அல்லது டுபாக்கூரா தெரியலையே.....!


# எண்ணெய் தேச்சி சீயக்காய் ஷாம்பூ போட்டு குளிச்சாலும் கூட, எண்ணெய் பிசுக்கு கொஞ்சம் அப்பிடியேதானே இருக்கு, அப்புறம் எதுக்கு குளிக்கணும் ஹி ஹி...



# பதிவுலகின் சூப்பர் டூப்பர்ஸ்டார் சத்தமில்லாமல் ஒதுங்கிட்டானே என்னாச்சுய்யா அவனுக்கு யாராவது கேட்டீங்களா...?


# ஈரோடுல எத்தனையோ பதிவர்கள் இருந்தும் [[பேஸ்புக் இத்யாதி உட்பட]] காவிரி ஆற்றில் கூவம் கலந்து நாறுதே யாராவது சவுண்டே [[சென்னிமலை அண்ணன் உட்பட]] விடக்காணோம்...???!!! [[என்ன ஊர் பக்தியா இருக்குமோ...?]] அந்த பக்கம் ரயில்ல போறவங்க அந்த நாத்தத்தை கடந்துதான் போவோணும்....!!!

# ரொம்ப லொள்ளு பண்ணுற நம்ம நித்தியை பேசாம சனாதிபதி ஆக்கிட்டா என்ன, ஏன்னா நம்ம ஊரும் தப்பிச்சிரும் இல்லையா, அய்யாவும் சும்மா கனடா, எகிப்து, ஈரான், ஈராக், மொரோக்கா......................[[எவம்லேய் அங்கே முழிச்சி பாக்குறது பிச்சிபுடுவேன் பிச்சி]] லண்டன், சிறீ லங்கா, ரஷ்யா, சைனா இப்பிடி வெரைட்டிசா பாக்க வெளியே ஓடிருவார்ல [[ஜிஞ்சிதா மன்னிச்சு]] அமெரிக்காகாரன் சோதனை போடவும் முடியாது ஹி ஹி ஏன்னா அய்யா கோவணம்தான் கட்டுவாரு, அடிக்கிற கப்புல அமெரிக்கா நாறிப்போகும்...!


# கன்டினியூவா சரக்கடிச்சுட்டு திடீர்னு நிப்பாட்டினாலும் சும்மா சரக்கடிச்ச மாதிரி [[குறிப்பிட்ட நேரத்தில்]] தெம்பாதான்யா இருக்கு - நண்பனின் சந்தோசம்...!


#  நான் மட்டும் மரம் நட்டால் ஏன் அந்த செடி செத்து போகிறது...? என்னாது கைராசியா..? எங்க அண்ணன் ஜோதிராஜ்'கிட்டே சொல்லி பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா.....

# பங்களாதேசிகளின் வருகையால் பஹ்ரைன் நிரம்பி வழிகிறது, ஆனாலும் மலையாளி போக மாட்டேங்குறான் [[அப்போ நீ]]


# இனி எந்த இந்திய சனாதிபதியை அமெரிக்காகாரன் துகிலுறிஞ்சி [[சோதனை [[கலாம்]]] பாக்கப்போறானோ, எதுக்கும் கோவணம் கட்டிட்டு போக சொல்லுங்க அதான் லங்கோட்டி லங்கோட்டி....!!!


# பூமி உருண்டை என்பதை கண்டறிந்து, பூஜ்ஜியத்தை கண்டறிந்தான் தமிழன், வாழ்க்கையும் ஒரு உருண்டை என்ற தத்துவத்தையும் அதனுள் அடக்கினான் தமிழன்....!!! 

# நான் உடுத்தும் ஆடைகளை ரசித்தும், வெறுப்பாகவும் நேரிடையாக விமர்சிக்கும் என் சில அண்ணிகள், சில அக்காக்கள், நண்பிகள், நண்பர்கள் விஜயன், ராஜகுமார், கிருஷ்ணா, ராபர்ட் மற்றும் பலர்....இதுக்கும் ஒரு தைரியம் வேணுமப்பா என்னால அப்பிடி முடியிறதில்ல....!!!

உலகிலேயே பீர் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது........வியட்னாம்.....!!! [[அதானே பார்த்தேன் ஏண்டா விக்கி இப்பிடி ஊதிப்போயி இருக்கானேன்னு...!



கடைசியாக.......

# அடுத்த பிரதமரா நரேந்திரமோடிதான் வரணும் வருவார்.....!!!

Tuesday, May 29, 2012

அரண்மனையாம் அரண்மனை ம்ஹும்....!!!

பத்பனாபபுரம் அரண்மனையை நாங்க சந்தோஷமா திரும்பியபோது என் மனதில் தோன்றிய சில கேள்விகள் சில, அரண்மனையில் நிறைய இடங்களில் தளங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அரண்மனையை பார்க்க உள்ளே போகிறவர்கள் [[சிறுபிள்ளைகள் இருந்தால் கண்டிப்பாக]] குடிநீர் கண்டிப்பாக கையில் வைத்து கொள்ளுங்கள், உள்ளே ஒரு சொட்டு குடிநீரும் கிடையாது, அம்புட்டு பெரிய அரண்மனையில் தண்ணீர் இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது....!!!



அடுத்து இங்கே [[வெளியே]] ஒரே ஒரு பாத்ரூம்தான் இருக்கு அதிலும் தண்ணீர் கிடையாது, பணியாளர்களில் சிலர் மிகவும் ரஃபாக நடந்து கொண்டார்கள், சில பல அறைகளில் மேலே செல்ல ஏணிப்படிகள் இருக்கிறது, அங்கே சென்று பார்க்க தடை இருக்கிறது சரி அங்கே என்னா இருக்குன்னாவது சொல்லலாம், ஆனால் கைடுகள் அதைபற்றி சொல்லவே இல்லை [[அவிங்களுக்கும் தெரியாதோ]]

வெளியே செருப்பை பாதுகாக்கும் இடத்தில் ஒரு அம்மா பணிவாக எல்லார் செருப்புகளையும் திருப்பி கொடுத்து கொண்டிருந்தார்...!

கடைசியாக நாங்கள் அரண்மனையை விட்டு திரும்பும்போது என் அண்ணன் மகன் ஜோஷ்வா கேட்ட ஒரு கேள்விக்கு கேரளா டூரிசம் போர்டு பதில் சொல்லியே ஆகணும். "இவ்ளோ பெ.........ரீ.........ய...... அரண்மனையில ஒரே ஒரு பாத்ரூமா....?" பாவம் அவன் கஷ்டம் அவனுக்கு என்று சொல்லி சிரித்தோம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------


பெட்ரோல் விலையேற்றம் எதிரொலி, மும்பையில் பெட்ரோல் திருட்டு நடக்கிறது, என் நண்பனின் பைக்கிலேயே திருடியுள்ளார்கள். சில பல பேர் பைக்கை உருட்டி கொண்டு போகிறார்கள், பாவமாக இருக்கிறது காரணம் பைக்கில் பெட்ரோல் இருக்கு என நினைத்து ஏமாறுகிறார்கள், எனவே பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது பெட்ரோல் இருக்கா களவு போயிருச்சான்னு கவனித்து வண்டியை எடுங்கள்....!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------


என் மீது உள்ள ஊழல் புகாரை நிரூபித்தால் நான் பொது வாழ்க்கையை விட்டே போய்விடுகிறேன் - மன்மோகன் சிங்.

# யோவ் முதல்ல நீயி தேர்தல்ல நின்னாய்யா ஜெயிச்ச கொய்யால, பொது வாழ்க்கயாம் பொது வாழ்க்கை மானம் கெட்ட வாழ்க்க, என் நாலு ஏக்கர் நிலத்தை வித்து தாரேன் லஞ்சம் கொடுத்தாவது இந்த ஆளை வெளியே தள்ளுங்கன்னு மக்கள் பேசுறாங்க.....!!!

------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளர் காங்கிரஸ் தலைமை முடிவு.

# அடுத்த ரப்பர் ஸ்டாம்ப்.....!!!

-------------------------------------------------------------------------------------------------------------------------


பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை.

# நல்லா பாத்தீங்களா அது ஆயிரம்வாலா பட்டாசா இருக்கும் பார்த்து சொல்லுங்க...?

-----------------------------------------------------------------------------------------------------------------------


இன்னொரு சோகம் என்னன்னா நம்ம பக்கி ச்சே விக்கி இன்னைக்கு பேஸ்புக்கை நாரடிச்சுட்டு இருக்கான் முடியல.....

Wednesday, May 16, 2012

ப[ழி]லி வாங்கப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரி...?!

போனபதிவில் சொல்லப்பட்ட அந்த அதிகாரி யாருன்னு பலபேருக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், ஆம் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே'தான் அவர்....! மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பலரை சட்டத்தின் முன் நிறுத்தவோ அல்லது போட்டு தள்ளவோ ரெடியாக அவர் இருந்த நேரத்தில்தான் அவருடைய படுகொலை அரங்கேறி உள்ளது...!!


அவர் உயிரை பறித்ததும் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஏ கே 47 துப்பாக்கியின் குண்டுகள் அல்ல, சாதாரண கைதுப்பாக்கியில் உள்ள குண்டுகள்தான் அவர் உடலில் இருந்தது என்று மருத்துவமனை ஊழியர்கள் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்...!!


தீவிரவாதியும் பயங்கரவாதிகளும் இங்கே நாட்டுக்குள்ளே தைரியமாக உலா வரும் போது, நாம் வெளியே இருந்து வருவதாக தேடிக்கொண்டிருக்கிறோம், இன்னும் அதே நரிமன்பாயின்ட் சிட்டியிலும் மும்பை தாக்குதல்கள் நடந்த இடங்களிலும் போயி பாருங்க போலீஸ் பாதுகாப்பை, ஒரே ஒரு கான்ட்சபில் கையில்தான் ஏ கே 47 துப்பாக்கி இருக்கு மற்றவர்கள் கையில் லத்திதான் இருக்கு...!!!


அந்த துப்பாக்கியை வைத்திருக்கும் ஹவில்தாரை பார்த்ததும் கிருஷ்ணாவிடம் சொன்னேன், எலேய் இந்த போலீஸை பார்த்தால் தீவிரவாதியை எதிர்த்து சண்டை போடுறவன் மாதிரியா தெரியுது, கையில் இருககும் துப்பாக்கியை தீவிரவாதிகள் கையிலேயே கொடுத்துட்டு, அம்மா சண்டை'ன்னு ஓடுறவன் மாதிரியில்லா இருக்கு என்றேன்....!!!


அடுத்து, இம்புட்டு பாதுகாப்பை அந்த இடத்தில் போட்டுருக்காயிங்களே........இனியும் தீவிரவாத தாக்குதல் அங்கினேயேதான் நடத்துவோம்னு எவனாவது சொன்னானா என்ன...? தீவிரவாதி என்ன இவங்ககிட்டே சொல்லிட்டாய்யா வாரான்...? வீணா மக்களை அச்சுறுத்திட்டு இருக்காங்க போலீஸ் அந்த இடத்தில், ஆனால் ஒன்னுய்யா இவிங்க இந்த பந்தோபஸ்தால் காதலர்களுக்கு செம ஜாலி, போலீஸ் பாதுகாப்போடு செமையா உரசிகிட்டு போறாங்க....!!!


என்னமோய்யா ஒரு நேர்மையான அதிகாரியை போட்டுத்தள்ள என்னெல்லாம் நாடகம் நடத்தி இருக்கானுக, ஆக நாம் ஒரு உண்மையான போலீஸை இழந்து விட்டோம் என்பதே உண்மை....!!!


அடுத்து மும்பை துறைமுகம் அழைத்து போனான் கிருஷ்ணா, இம்போர்ட் எக்ஸ்போர்ட் பண்ணுமிடம், ஆஹா நல்ல எல்லாரையும் பழக்கம் போல, ஆட்கள் போக தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எல்லாம் அழைத்துப்போயி காட்டினான். அவன் கம்பெனி கப்பல்களை காட்டி தந்தான், வாங்க அண்ணே கப்பலுக்கு உள்ளே போயி பார்க்கலாம் நாம ரெண்டு பேரும் போக சின்ன போட் ஏற்பாடு பண்ணுறேன் என்றதும், தம்பி எனக்கு கடல்னா அலர்ஜி வேண்டாம் என்று கடுமையாக மறுத்து விட்டேன் [[அம்புட்டு பயம்]]


அவன், இம்போர்ட் எக்ஸ்போர்ட் எப்பிடியெல்லாம் செய்வோம் என்பதையும் அந்த இடங்களையும் காட்டி தந்தான். என்னடா ஒரே கருவாடு நாத்தமா இருக்கே என்றேன், அண்ணே அங்கே பக்கத்துலதான் மீன் வியாபாரம் காலையில நடக்கும், காலையில் வந்தோம்னா சூப்பர் சூப்பர் மீனா சீப் ரேட்டுல வாங்கலாம் என்றான்.


என்னடா கடல்வாழ் மக்கள்னு ஆரம்பிச்சிட்டு இவன் வேற எங்கேயோ சுத்துறான்னு கேக்காதீங்க, இனிதான் சுவாரஸ்யமான மனிதர்கள் வரப்போகிறார்கள், ஏன்னா கிருஷ்ணா கம்பெனி கப்பலில் உள்ள ஸீ மேன்'ல இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.


ஒரு மனிதனை கப்பலில் இருந்து கடலில் தூக்கிப்போட்டு தூக்கிப்போட்டு விளையாடிய கப்பல் ஊழியர்கள்...............தொடரும்..........!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!