Friday, June 3, 2011

எலேய் நீ கெளம்புலேய் முதல்ல

ஊருக்கு போகணும் என்கிற சண்டை மும்முரமா நடந்துட்டு இருக்கு எனக்கும் அரபிக்கும். அதுவும் இல்லாமல் புது ஹோட்டல் வேற எடுத்து இருக்கான் எங்க அரபி. ஹோட்டல் டூ ஹோட்டல் ஷிப்டிங் நடந்துட்டு இருக்கு. பர பர பிஸியா இருக்கேன் நான் [[ எவம்லேய் அது அருவாளை தேடுறது ம்ஹும் ]] 

இன்னைக்கி அரபியை மடக்கி பிடிச்சு எனக்கு ஒரு பதில் சொல்லாம இந்த அருவாளை தாண்டபுடாதுன்னு கட்டையை போட்டேன் [[ஏண்டா பொய் சொல்றே]] அப்புறமா பயந்து ஒரு டேட் சொல்லி இருக்கான் ஊர் போறதுக்கு ஹி ஹி...

நண்பன் ராபர்ட்டுக்கு போன் போட்டு சொன்னென் அண்ணே 00/00/0000 இந்த டேட்டுக்கு புக் பண்ணுங்கன்னு. என்னாது டேட்ட சொல்லனுமா...??? நோ நோ நோ பிள்ளைகளே, மும்பை ஏர்போர்ட் நாறி போவதை நான் விரும்பாததாலும், கொலைவெறி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி நடப்பதாகவும் உளவு துறை [[உணவு துறை அல்ல]] ரகசிய தகவல் வந்திருப்பதாலும், நோ டேட்.

எனக்கு இன்னொரு பயம் என்னன்னா, என் வீட்டுக்காரம்மா என் பதிவுகளை எல்லாம் ரகசியமா படிச்சிட்டு கடுப்புல ஏர்போர்ட்'ல அருவாளோட வந்துருவாளோ'ன்னு நடுக்கமா இருக்கு ஹி ஹி... சீவலப்பேரி பக்கத்து ஊர் அலங்காரப்பேரி ஆள் ஆச்சே, அதான் இப்பமே கிலோ கணக்குல ஐஸ் அம்பாரத்தையே வச்சிட்டு இருக்கேன் தலையில கொஞ்ச கொஞ்சமா....

இந்த பிஸி'களுக்கு நடுவுல நண்பர் ரவிகுமார் "பதிவர்" போன் பண்ணுனார். என்னய்யா ஃபிரியா...?  என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? நான் பண்றதைதான் பண்ணிட்டு இருக்கேன் சொல்லுங்க, ரவி : லேப்டாப்பை வச்சியே ஒரு பதிவை தேத்தி புட்டீங்களேன்ன்னு வாழ்த்தி கமெண்ட்ஸ் போடலாம்னு நினச்சேன், சரி பக்கத்துலதானே இருக்கீங்கன்னு கமெண்ட்ஸ் போடாம போன்லயே வாழ்த்தலாம்னு போன் பண்ணுனேன் [[அவ்வ்வ்வ்வ்வ்]] [[கமெண்ட்ஸ போடுய்யா அப்போதானே லைம் லைட்டுக்கு வரமுடியும்]]


நான் : ஹி ஹி ஹி ஹி, ரவி : இன்னைக்கு ராத்திரி ஃபிரியா இருக்கீங்களா..? [[பிரியா அல்ல]] நான் : ஆமாய்யா ஒம்பது மணிக்கு மேல ஃபிரிதான். ரவி : அப்போ ராத்திரி நம்ம ரூமுக்கு வந்துருங்க மங்களம் பாட [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] நான் : வாரேன் வாரேன்....!!!

அடுத்து ஃபிரன்ட் ஆபீஸ்ல ஒரு குவைத்தி அரபி கூட வாய்க்கா வரப்பு சண்டை நடந்து முடியவும் போன், யாருன்னு பார்த்தா நம்ம "கலியுகம்"தினேஷ். அண்ணே ஃபிரியா இருக்கீங்களா [[டேய்]] நான் : ஃபிரியா இல்லை டை கட்டிட்டுதான் இருக்கேன் சொல்லுங்க...


அண்ணே இன்னைக்கு நீச்சல் குளத்துல குளிக்க வரட்டுமா அண்ணே [[ஹி ஹி]] நான் ; ராசா ஹோட்டலே கைவிட்டு போகுது, இனி புது ஹோட்டல்ல போயி ஆரம்பிப்போம் என்ன, இன்னைக்கு ரவி கூப்புட்டு இருக்கார் அங்கே போறேன். தினேஷ் : சரிண்ணே.


ஏற்கெனவே நானும் தினேஷும் நீச்சல் குளத்துல குளிச்சி நாரடிச்சது வேற நடந்தது தனி கதை.....நீச்சல் குளம் எங்கள் ஹோட்டல் மொட்டை மாடியில் இருக்கு. நீச்சல் அடிச்சி குளிச்சா உடம்புக்கு நல்லாத்தான்யா இருக்கு...!!! மனைவியை பிரிஞ்சி வந்த சோகத்தை எல்லாம் அந்த தண்ணி தொட்டிகுள்ளே கொட்டி பொங்க வச்சாரு தினேஷ்....


அடுத்து எங்க முதலாளி வந்து என்கூட பிஸியா பேசிட்டு இருக்கும் போது நம்ம ஆபீசர் சாட்டிங்க்ல வந்தாரு, குட் ஈவ்னிங். நான் : ஆபீசர் நான் பிஸியா இருக்கேன் அப்பாலிக்கா போன் பண்றேன்னு கட் பண்ணிட்டு, முதலாளிகிட்டே பேசிட்டு இருக்கும் போதே போன், எடுத்தா நண்பன் சதீஷ் [[நல்ல நேரம் சதீஷ் அல்ல]] என்ன மனோஜ் நீங்க ஃப்ரீயா...??? [[கொய்யால]] நான் : @#@#%&@#$%%%@@@, . . . . சதீஷ் போனை தூக்கி கடாசும் சத்தம் கடபுடான்னு கேட்டுச்சு.


எங்க அரபி முதலாளி எடுத்தான் பாருங்க ஓட்டம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இன்னைக்கு தேதி 02/06/11 மீதி ரவிகுமார் வீட்டுக்கு போயிட்டு வந்து சொல்றேன் நாளைக்கு ஹி ஹி ஹி ஹி...

இன்னைக்கு தேதி 03/06/11 
 நேற்று ரவி வீட்டுக்கு போனேன் அங்கே கீர்த்தி வாசன், ரமேஷ், வெங்கட் என மூன்று நண்பர்களை அறிமுக படுத்தினார் ரவி, ரொம்ப நாள் பழகிய நண்பர்கள் போல நல்ல ஜாலியாக பேசி பழகினார்கள்...!!! செமையான அலப்பறை நடந்துச்சு, கொலைவெறி, சொல்வெறி, எகனை மொகனைவெறி, சாப்பாடு வெறி, என செம ஜாலியா நடந்ததை நாளை சொல்றேன் ஏன்னா பதிவு நீளம் கூடி போச்சின்னு "தக்காளி" துப்பாக்கியை தூக்கிட்டு வந்துரப்போறான்....!

கருப்பு சட்டை கீர்த்தி வாசன், அடுத்து வெங்கட், ரவிகுமார், ரமேஷ் [[சிரிப்பு போலீஸ் ரமேஷ் அல்ல]]

டிஸ்கி : அலப்பறை தொடரும்....

79 comments:

  1. எட்டுத்திக்கும் ஒளி வீசும்..

    ReplyDelete
  2. ///
    மும்பை ஏர்போர்ட் நாறி போவதை நான் விரும்பாததாலும், கொலைவெறி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி நடப்பதாகவும் உளவு துறை [[உணவு துறை அல்ல]] ரகசிய தகவல் வந்திருப்பதாலும், நோ டேட்./////

    உஷாராதான்யா இருக்கே...

    ReplyDelete
  3. ///
    அதான் இப்பமே கிலோ கணக்குல ஐஸ் அம்பாரத்தையே வச்சிட்டு இருக்கேன் தலையில கொஞ்ச கொஞ்சமா....

    /////
    இருந்தாலும் அது தனியாது...

    நீர் பண்ணது ரொம்ப ஓவர்...

    தாய்குலமே விடாதீங்க...

    ReplyDelete
  4. ///
    ரவி : அப்போ ராத்திரி நம்ம ரூமுக்கு வந்துருங்க மங்களம் பாட [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] நான் : வாரேன் வாரேன்....!!!///

    ஏன் இந்த அவசரம்...
    சும்மா ஒரு பேச்சுக்கூட கூப்பிடக்கூடாதா...

    ReplyDelete
  5. ////
    செமையான அலப்பறை நடந்துச்சு, கொலைவெறி, சொல்வெறி, எகனை மொகனைவெறி, சாப்பாடு வெறி, என செம ஜாலியா நடந்ததை நாளை சொல்றேன் ஏன்னா பதிவு நீளம் கூடி போச்சின்னு "தக்காளி" துப்பாக்கியை தூக்கிட்டு வந்துரப்போறான்....!////

    அவ்வளவு பயம் இருக்கட்டும்..

    ReplyDelete
  6. ஹலோ சௌந்தர் காலிங்...

    மனோ ப்ரியா .இருக்கீங்களா...

    ReplyDelete
  7. அந்த 5 வது போட்டோல உன்தலை மட்டும் ஒட்டுனாப்போல இருக்கு.......உடம்பு என்னமோ ஹைவேஸ்ல நசுங்குன தவள கணக்கா பப்பர பேன்னு இருக்கே ஏன் ஹிஹி!

    ReplyDelete
  8. ஐய்யய்யோ அம்மாடியோ வடைக்கு பதிலா என்னென்னமோ வந்துருக்கு....!!!

    ReplyDelete
  9. கவிதை வீதி # சௌந்தர் said...
    ///
    மும்பை ஏர்போர்ட் நாறி போவதை நான் விரும்பாததாலும், கொலைவெறி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி நடப்பதாகவும் உளவு துறை [[உணவு துறை அல்ல]] ரகசிய தகவல் வந்திருப்பதாலும், நோ டேட்./////

    உஷாராதான்யா இருக்கே...//


    பொழைக்கனும்னா என்னெல்லாம் பண்ண வேண்டி இருக்கு பாருங்க ம்ஹும்...

    ReplyDelete
  10. கவிதை வீதி # சௌந்தர் said...
    ///
    அதான் இப்பமே கிலோ கணக்குல ஐஸ் அம்பாரத்தையே வச்சிட்டு இருக்கேன் தலையில கொஞ்ச கொஞ்சமா....

    /////
    இருந்தாலும் அது தனியாது...

    நீர் பண்ணது ரொம்ப ஓவர்...

    தாய்குலமே விடாதீங்க...//


    யோவ் போட்டு குடுக்காதீரும் ஒய்...

    ReplyDelete
  11. கவிதை வீதி # சௌந்தர் said...
    ///
    ரவி : அப்போ ராத்திரி நம்ம ரூமுக்கு வந்துருங்க மங்களம் பாட [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] நான் : வாரேன் வாரேன்....!!!///

    ஏன் இந்த அவசரம்...
    சும்மா ஒரு பேச்சுக்கூட கூப்பிடக்கூடாதா...//


    ஓசில சாப்பாடுய்யா விடுவேனா...?

    ReplyDelete
  12. இந்த படங்களை எடுத்தது எந்த டைரக்டர்ப்பா...?

    பலான படத்தை பளிச்சின்னு போடுரீங்க....

    பிரண்டஸ் போட்டோ இப்படி இருக்குது...

    ReplyDelete
  13. கவிதை வீதி # சௌந்தர் said...
    ////
    செமையான அலப்பறை நடந்துச்சு, கொலைவெறி, சொல்வெறி, எகனை மொகனைவெறி, சாப்பாடு வெறி, என செம ஜாலியா நடந்ததை நாளை சொல்றேன் ஏன்னா பதிவு நீளம் கூடி போச்சின்னு "தக்காளி" துப்பாக்கியை தூக்கிட்டு வந்துரப்போறான்....!////

    அவ்வளவு பயம் இருக்கட்டும்..//


    ஹி ஹி ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  14. விக்கி உலகம் said...
    அந்த 5 வது போட்டோல உன்தலை மட்டும் ஒட்டுனாப்போல இருக்கு.......உடம்பு என்னமோ ஹைவேஸ்ல நசுங்குன தவள கணக்கா பப்பர பேன்னு இருக்கே ஏன் ஹிஹி!//


    இந்த அநியாயம் பண்ணி போட்டோ எடுத்தது தினேஷ்'தான் திட்டணும்னா அவரை திட்டு, தக்காளி ராஸ்கல்....

    ReplyDelete
  15. கவிதை வீதி # சௌந்தர் said...
    இந்த படங்களை எடுத்தது எந்த டைரக்டர்ப்பா...?

    பலான படத்தை பளிச்சின்னு போடுரீங்க....

    பிரண்டஸ் போட்டோ இப்படி இருக்குது...//

    என்னாது பலான படமா..? பிச்சிபுடுவேன் பிச்சி...

    ReplyDelete
  16. M.G.ரவிக்குமார்™..., said...
    சூப்பர் தல........//


    என்னய்யா சீக்கிரமா எழும்பிட்டீர் போல...?

    ReplyDelete
  17. யோவ் உனக்கு இப்ப பிரச்சன அரபியா இல்ல...அந்த மொராக்கோ காரியா....சும்மா ஏன் பம்முற ஹிஹி!

    ReplyDelete
  18. எப்பதான் வற்றீங்க



    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
    http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

    ReplyDelete
  19. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Ha . . . Ha . . Ha//


    ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  20. //கொலைவெறி, சொல்வெறி, எகனை மொகனைவெறி, சாப்பாடு வெறி, என//
    அவ்வளவுதானா?

    ReplyDelete
  21. விக்கி உலகம் said...
    யோவ் உனக்கு இப்ப பிரச்சன அரபியா இல்ல...அந்த மொராக்கோ காரியா....சும்மா ஏன் பம்முற ஹிஹி!//


    சுஜாதாவின் மெக்ஸிகோ சலைவைகாரி ஜோக் மாதிரி, இங்கே மொரோக்கோ'காரியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் உன்னை...

    ReplyDelete
  22. Speed Master said...
    எப்பதான் வற்றீங்க//


    மறுபடியும் முதல்ல இருந்தா...?

    ReplyDelete
  23. சென்னை பித்தன் said...
    //கொலைவெறி, சொல்வெறி, எகனை மொகனைவெறி, சாப்பாடு வெறி, என//

    அவ்வளவுதானா?//



    அம்புட்டுதேன் தல.......

    ReplyDelete
  24. ஆனா ஒரு விஷயத்துல உன்னை பாராட்டறேண்டா.. கடைசி வரை அந்த ஃபிகர் மேட்டரை நீ சொல்லவே இல்லையே.. ஹி ஹி

    ReplyDelete
  25. நீச்சல் குளத்தில் மூழ்க நானும் வாரன் மாமா பிரிந்து இருப்பதால்!

    ReplyDelete
  26. சி.பி.செந்தில்குமார் said...
    ஆனா ஒரு விஷயத்துல உன்னை பாராட்டறேண்டா.. கடைசி வரை அந்த ஃபிகர் மேட்டரை நீ சொல்லவே இல்லையே.. ஹி ஹி//


    டேய் மூதேவி ராஸ்கல் நான் என்ன "தக்காளி"யா...???

    ReplyDelete
  27. Nesan said...
    நீச்சல் குளத்தில் மூழ்க நானும் வாரன் மாமா பிரிந்து இருப்பதால்!//


    என்னாது மாமா"வா...?? எப்பா இது நல்லா இல்லையே தம்பி...

    ReplyDelete
  28. ///எனக்கு இன்னொரு பயம் என்னன்னா, என் வீட்டுக்காரம்மா என் பதிவுகளை எல்லாம் ரகசியமா படிச்சிட்டு கடுப்புல ஏர்போர்ட்'ல அருவாளோட வந்துருவாளோ'ன்னு நடுக்கமா இருக்கு /// பாவம் பாஸ் நீங்க ஹிஹிஹி ...

    ReplyDelete
  29. கந்தசாமி. said...
    ///எனக்கு இன்னொரு பயம் என்னன்னா, என் வீட்டுக்காரம்மா என் பதிவுகளை எல்லாம் ரகசியமா படிச்சிட்டு கடுப்புல ஏர்போர்ட்'ல அருவாளோட வந்துருவாளோ'ன்னு நடுக்கமா இருக்கு ///

    பாவம் பாஸ் நீங்க ஹிஹிஹி ...///


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  30. ஹாஸ்யமான பதிவு
    கலக்குறீங்க அண்ணாச்சி

    ReplyDelete
  31. என் நண்பர்கள் கிட்ட பெரிய எழுத்தாளர்னு உங்களை அறிமுகப் படுத்தி வச்சத
    சொல்லவே இல்ல..........

    ReplyDelete
  32. A.R.ராஜகோபாலன் said...
    ஹாஸ்யமான பதிவு
    கலக்குறீங்க அண்ணாச்சி//

    ReplyDelete
  33. A.R.ராஜகோபாலன் said...
    ஹாஸ்யமான பதிவு
    கலக்குறீங்க அண்ணாச்சி//


    நன்றி....

    ReplyDelete
  34. M.G.ரவிக்குமார்™..., said...
    என் நண்பர்கள் கிட்ட பெரிய எழுத்தாளர்னு உங்களை அறிமுகப் படுத்தி வச்சத
    சொல்லவே இல்ல.......//

    பெரிய எழுத்தாளரா யார்யா அது.....? அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

    நாளை இருக்கு வானவெடி...

    ReplyDelete
  35. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அலப்பறை தொடரட்டும்..//

    அண்ணே வணக்கம் அண்ணே...

    ReplyDelete
  36. MEE THE FIRST.

    NEENGA MARUPADIUM PATHIVU PODUNGA...

    ETHU ELLAM CHELLATHU....

    ReplyDelete
  37. இப்ப போய் படிக்கிறேன்....RIGHTU...

    ReplyDelete
  38. siva said...
    MEE THE FIRST.

    NEENGA MARUPADIUM PATHIVU PODUNGA...

    ETHU ELLAM CHELLATHU....//


    ஹி ஹி ஹி மறுபடியும் பதிவு நாளைக்கு போடுர்கேன் பன்ரெண்டு மணிக்கு என்ன..

    ReplyDelete
  39. siva said...
    50..HEY VADAI ENAKUTHAN...///


    அம்பதாவது வடை வாங்கி வாழ்க....

    ReplyDelete
  40. siva said...
    இப்ப போய் படிக்கிறேன்....RIGHTU...//


    ரைட்டு....

    ReplyDelete
  41. பாஸ், ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கு,
    கருத்துக்களோடு இரவு வருகிறேன்,

    ReplyDelete
  42. மனைவியை பிரிஞ்சி வந்த சோகத்தை எல்லாம் அந்த தண்ணி தொட்டிகுள்ளே கொட்டி பொங்க வச்சாரு தினேஷ்//
    ஓவர் குசும்புங்க உங்களுக்கு

    ReplyDelete
  43. தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்!

    ReplyDelete
  44. குளுகுளு பதிவு!

    ReplyDelete
  45. நிரூபன் said...
    பாஸ், ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கு,
    கருத்துக்களோடு இரவு வருகிறேன்,//


    நோ பிராப்ளம் மக்கா டேக் இட் ஈசி கூல்...

    ReplyDelete
  46. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    மனைவியை பிரிஞ்சி வந்த சோகத்தை எல்லாம் அந்த தண்ணி தொட்டிகுள்ளே கொட்டி பொங்க வச்சாரு தினேஷ்//

    ஓவர் குசும்புங்க உங்களுக்கு//


    என்னதான் இருந்தாலும் நண்பன் கவலையை மறக்க செய்யணுமே அதான்...

    ReplyDelete
  47. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்!//


    ஓ பாட்டாவே பாடிட்டீங்களோ, சரி சரி இடையிடையே மானே தேனே'ன்னு நடுவுல போட்டுக்கோங்க...

    ReplyDelete
  48. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    குளுகுளு பதிவு!//


    நானும் என்னவோ கிளு கிளு'ன்னு போட்டுட்டீங்கலோன்னு பயந்துட்டேன் ஹி ஹி...

    ReplyDelete
  49. மங்களம் பாடுச்சுங்களாண்ணே?

    ReplyDelete
  50. சுவாரஸ்ய திலகம் அண்ணன் நாஞ்சில் மனோ வாழ்க வாழ்க....

    ReplyDelete
  51. கிளம்புற மாதிரி தெரிய்லயே. வீட்ல போட்டு குடுத்துற வேண்டியதுதான்.

    ReplyDelete
  52. நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்து சேரலைன்னா, மும்பை வந்து முழங்கால் போட வச்சுருவேன்.

    ReplyDelete
  53. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மங்களம் பாடுச்சுங்களாண்ணே?///


    கடைசிவரை மங்களம் பாடவே இல்லை அண்ணே ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  54. NKS.ஹாஜா மைதீன் said...
    சுவாரஸ்ய திலகம் அண்ணன் நாஞ்சில் மனோ வாழ்க வாழ்க....///


    குப்புற கவுத்து புடாதீங்கய்யா....

    ReplyDelete
  55. FOOD said...
    கிளம்புற மாதிரி தெரிய்லயே. வீட்ல போட்டு குடுத்துற வேண்டியதுதான்.///



    இப்பதான் கொஞ்சம் வீட்ல சமாதானபடுத்தி வச்சிருக்கேன் அதை கெடுத்துராதீங்க ஆபீசர்...

    ReplyDelete
  56. FOOD said...
    நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்து சேரலைன்னா, மும்பை வந்து முழங்கால் போட வச்சுருவேன்.//


    கொஞ்சம் கருணை காட்டுங்க ஆபீசர்....

    ReplyDelete
  57. ////////MANO நாஞ்சில் மனோ said...
    FOOD said...
    நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்து சேரலைன்னா, மும்பை வந்து முழங்கால் போட வச்சுருவேன்.//


    கொஞ்சம் கருணை காட்டுங்க ஆபீசர்....

    /////////

    கருணைன்னா கருணைக்கிழங்குதானே...? அதப் பாத்து என்னலே பண்ண போறே?

    ReplyDelete
  58. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////////MANO நாஞ்சில் மனோ said...
    FOOD said...
    நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்து சேரலைன்னா, மும்பை வந்து முழங்கால் போட வச்சுருவேன்.//


    கொஞ்சம் கருணை காட்டுங்க ஆபீசர்....

    /////////

    கருணைன்னா கருணைக்கிழங்குதானே...? அதப் பாத்து என்னலே பண்ண போறே?//


    ஆபீசர் பயங்கர ஸ்டிக்ட்டு அதான் கெஞ்சி பாக்குறேன்....

    ReplyDelete
  59. ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் என்று சொல்லி டகால் தாங்க முடியலையே.

    ReplyDelete
  60. இந்த ரணகளத்துல கூட உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதோ?

    ReplyDelete
  61. ஊருக்கு வர்றேன்... ஊருக்கு வர்றேன்.. ஒவ்வொரு பதிவுலயும் சொல்றிங்களே. ஒரு பதிவுலயாவது தேதிய சொல்றிங்களா?

    ReplyDelete
  62. என்னய்யா, உங்களின் இந்தப் பதிவிற்கு நேற்றும் ஓட்டுப் போட்டு, இன்றும் ஓட்டுப் போடுறேன். அது சொல்லுது,
    மன்னிக்கவும், உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்காம் என்று.

    ReplyDelete
  63. பர பர பிஸியா இருக்கேன் நான் [[ எவம்லேய் அது அருவாளை தேடுறது ம்ஹும் ]]//

    பாஸ், இனி நீங்க ப்ளாக்கிற்கு வரவும் அப்பாயிமெண்ட் பிக்ஸ் பண்ண வேணும் போல இருக்கே;-))

    ReplyDelete
  64. எனக்கு இன்னொரு பயம் என்னன்னா, என் வீட்டுக்காரம்மா என் பதிவுகளை எல்லாம் ரகசியமா படிச்சிட்டு கடுப்புல ஏர்போர்ட்'ல அருவாளோட வந்துருவாளோ'ன்னு நடுக்கமா இருக்கு ஹி ஹி.//

    ஆஹா...இது வேறையா... இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்க்க சிபி கூட ஏர் போட்டுக்கு வருவாராமே.

    ReplyDelete
  65. பிரியா இல்லை டை கட்டிட்டுதான் இருக்கேன் சொல்லுங்க..//

    ஹா...ஹா....ஐயோ. ஐயோ...ரொம்ப கொல வெறி உங்களுக்கு.

    ReplyDelete
  66. நிறைய கமெண்ட் வந்துட்டதால ஓட்டு மட்டும் ஹி ஹி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!