Saturday, July 23, 2011

நெல்லை பதிவர் [[ரெண்டாவது]] சந்திப்பு தொடர்ச்சி...

பரணி ஹோட்டலில் ஆபீசருக்கு சரியான மரியாதை நெஞ்சில் கை வைத்து வணங்குகிறார்கள்...!!! [[எனக்கும் உடனே பெரிய ஆபீசர்ன்னு என்னை நானே நினைத்து கொண்டேன் ஹி ஹி]] அப்புறமா சாப்பிட கிளம்பினோம், பழைய பாஸ்டான்ட் பக்கம் "ஜென்னத்" ஹோட்டலுக்கு, ஏசி ரூம் போனால் அங்கே சரியாக அமர இடம் வசதி குறைவு ஏன்னா நான்கு பேர் அமரக்கூடிய டேபிள் அது.....



அப்புறம் இடம் மாறி அமர்ந்தோம். சாப்பாடு வந்தது, அடடா தேளி மீன் வறுத்தது, தேளி மீன் கறி, இன்னும் பல பல அயிட்டங்கள் இருந்தாலும், பதிவர்களுக்காக ஆபீசர் ஏற்பாட்டில், ஜென்னத் ஹோட்டல் முதலாளி நண்பர் திவான் [[தாக்கூர் அல்ல ஹி ஹி]] அவர்கள் நேரிடையாக மீன் மார்க்கெட் போயி மீன் வாங்கி....!!!


ஸ்பெஷலாக எங்களுக்காக சமைத்து பரிமாற சொன்னார், அடடா அருமையான சாப்பாடு திருப்தியாக சாப்பிட்டோம் எல்லாரும் [[ மிக்க நன்றி நண்பா]] மெதுவாக ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டோம் பொறுமையாக...அடிக்கடி திவான் வந்து கேட்டு கொண்டே இருந்தார் சாப்பாடு நல்லா இருக்கா, இருக்கான்னு...


சாப்பாடு முடிந்ததும் ஆபீசர் கேட்டார் ஜூஸ் ஏதாவது வேணுமான்னு, எங்கே விஜயன் அண்ணாச்சி பழம் ஜூஸ் சொல்லிருவாரோன்னு பயந்து வேண்டாம் என்று கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னேன் ஹி ஹி... அப்புறம் சூப்பரா பழுத்த வாழைபழம் ஆர்டர் பண்ணி தந்தார்....!!!


மீன் சாப்பாடு கையில் கமகமத்து கொண்டு இருந்தது மனசுக்கும் இதமாக இருந்தது...! சாப்பாடு பரிமாறினவர்களை பாராட்டனும், அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள்...!!! கொஞ்ச நேரம் அங்கே இருந்து பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் ஆபீசர் ஹோட்டல் முதலாளி "திவான்"னை அறிமுக படுத்தினார். நல்ல மனுஷன் நம்ம பதிவுகளை எல்லாம் படிப்பாராம்...[[அய்யோ பாவம் ஹி ஹி]]


அப்புறமா பீடா ஆர்டர் செய்தார் ஆபீசர், பாவம் பணியாளரும் திவானும் அலை அலைன்னு அலைஞ்சும் கிடைக்காமல் போராடி கொண்டிருந்தார்கள்...நாங்க ஏசி ரூமுக்கு வந்து அமர்ந்து கொண்டோம்.....அப்புறமா பீடா கதை பேச்சு நடந்தது, சென்னையில் பீடா சாப்பிட்டு நொந்த கதையை பாபு பேசிட்டு இருந்தார்.


அப்புறமா பீடா வந்து சேரவும் சாப்பிட்டார்கள், நல்ல வேளை மண்டை கிறுகிருக்கவில்லை போலும் ஹே ஹே ஹே ஹே....!!!

ஐயோ புது நண்பர் திவான் பற்றி சொல்லணுமே, ஆண்டவா யாராவது எடக்கு மடக்கா அவருகிட்டே கேள்வி கேட்டு மாட்டிக்காதீங்க தப்புறது மிக மிக கடினம்....!!! அவர் ஹோட்டலுக்குள்ளே நடக்கும் அற்புதமான சம்பவங்களை விவரித்து கொண்டிருந்தார், நான் நம்பவே இல்லை, ஆனால் எனக்கு நேரில் அதை காண்பித்ததும் ஆச்சர்யமாக அசந்து போனேன் நானும் விஜயனும், ஏன்னா ஆபீசர் ஃபிரீ டைம்ல அங்கேதான் இருப்பாராம்....!!! இனி ஊர் போனால் ஜென்னத் ஹோட்டலை விட்டு நகர மாட்டேன் ஆமா.....!!!


ஹோட்டல்ல கிளாஸ் களவாங்குற பொம்பளைங்க, தண்ணி அடிச்சிட்டு வரும் ஆம்பிளைங்க என பல விஷயங்களில் ஒன்று, தொடர்ந்து கிளாஸ் களவாண்ட ஒரு பெண்ணை பொறி வச்சி கையும் கிளாசுமாக பிடித்து விட, அந்த பெண் அசரவில்லையாம், அப்புறமா பொறுமை இழந்த திவான் அவருக்கே உரிய ஸ்டைலில் ரெண்டு அப்பு அப்புனதும், அந்த பெண் நேரே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துருச்சி என்னான்னு...??? என் கையை பிடிச்சி இழுத்துட்டான்னு [[நாகரீகம் கருதி மேட்டரை மாத்திட்டேன்]]


போலீசுக்கு உண்மை தெரிஞ்சதும் அவளை மிரட்டி அனுப்பி இருக்கு....இப்பிடியெல்லாம் நிறைய மேட்டர் அவர் சொல்லும் போது ஆச்சர்யமா இருக்கு ஹோட்டல்னாலே அனுபவங்கள் சூப்பரா இருக்கும் என்பது எனக்கும் அனுபவம்தானே....!!!

அப்புறமா இம்சை பாபு இடையிலேயே எங்களை கழட்டி விட்டுட்டு ஓடிட்டார் [[ஹி ஹி]] நாங்களும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்து விட்டு சந்தோஷமாக விடை பெற்று கிளம்பினோம். ஏ யப்பா சாப்பாடு சாப்பிடனும்னா ஆபீசர் கூட போயி சாப்பிடனும்ய்யா.....!!!! அதான் நம்ம சித்ரா மேடம் சொன்னாங்க ஆபீசர் இருந்தார்னா நம்பி அந்த இடத்தில் சாப்பிடலாம்னு......சரிதானோ.......????


பிரியா விடை பெற்று கிளம்பி, நெல்லை பஸ்நிலையத்தில் நாகர்கோவில் பஸ்சுக்கு செம கூட்டம் ஹி ஹி ஹி ஹி நானும் விஜயனும் பஸ்சில் இடம் பிடிக்க ரவுடியா மாறி புகுந்து ஏறியும் ஹே ஹே ஹே ஒரே ஒரு சீட்தான் கிடைச்சது, அதில் மாறி மாறி அமர்ந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தோம்...விஜயன் மிகவும் ஆச்சர்யபட்டார், ஏன்னா முதன் முதலா பதிவர்களை பார்க்கும் போறோம்னு கொஞ்சம் டென்ஷனாவே இருந்தவர், சந்திப்பை பார்த்ததும் அசந்து விட்டார், ரொம்ப ரொம்ப சந்தோஷபட்டார்....!!! எனக்கும் அதே சந்தோசம்.....!!!


நான் அடுத்த நாள் மும்பை கிளம்புவதாக இருந்ததால், ஆபீசருக்கும் அன்று மதுரையில் மீட்டிங் இருந்ததால் அவரும் நெல்லையில் மும்பை எக்ஸ்பிரசில் என்னோடு வருவதாக சொன்னார். அடுத்த பதிவும் அதை பற்றிதான்.......விருது நகரில் பிரபல பதிவர்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததும் சிபி ஏமாந்து நாறி போனது பற்றியும், பிரயாணம் பற்றியும் ரயிலில் ஆபீசர் செய்த அடாவடியையும் சொல்லப்போறேன் ஹே ஹே ஹே ஹே...!!!

டிஸ்கி : எலேய் தமிழ்வாசி மக்கா உம்மை இந்த தடவையும் என் மச்சினன் தேடினான் ஹே ஹே ஹே ஹே.........!!!

நன்றி : ஆபீசர் அண்ட் நண்பன் திவானுக்கும்........

டிஸ்கி : நிறைய போட்டோ ஆபீசர் பிளாக்கில் சுட்டது ஹி ஹி....

50 comments:

  1. விருது நகரில் பிரபல பதிவர்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததும்//

    yaru anna andha pirabala pathivargal

    ReplyDelete
  2. vittutu sapittu athu oru pathivu ., ponga anna ., unga kooda sanda :(

    ReplyDelete
  3. ரெண்டாவது படம் ரொம்ப சின்னதா இருக்கு. இன்னும் பெருசா போடுங்க தலைவா!!

    ReplyDelete
  4. ///////
    பரணி ஹோட்டலில் ஆபீசருக்கு சரியான மரியாதை நெஞ்சில் கை வைத்து வணங்குகிறார்கள்////////

    ஆபிஸர் ஆபிஸர்தான்...

    ReplyDelete
  5. ////////
    மீன் சாப்பாடு கையில் கமகமத்து கொண்டு இருந்தது மனசுக்கும் இதமாக இருந்தது...! சாப்பாடு பரிமாறினவர்களை பாராட்டனும், அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள்...!!!/////////


    ஆபிஸர் கூட இருந்ததால இந்த மரியாதை..
    இதுவே தனியா போயிருந்தா...

    ReplyDelete
  6. ////
    அவர் ஹோட்டலுக்குள்ளே நடக்கும் அற்புதமான சம்பவங்களை விவரித்து கொண்டிருந்தார்,////////

    அதை வச்சி ஒரு பதிவு தேத்துங்க....

    ReplyDelete
  7. //அப்புறமா இம்சை பாபு இடையிலேயே எங்களை கழட்டி விட்டுட்டு ஓடிட்டார் [[ஹி ஹி]] //

    எவன் வீட்டுல அடி வாங்குறது ..டைமுக்கு வீட்டுக்கு போகலை ..நான் வாங்குற அடி எனக்கு தான் தெரியும்

    ReplyDelete
  8. ///////
    விருது நகரில் பிரபல பதிவர்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததும் சிபி ஏமாந்து நாறி போனது பற்றியும், பிரயாணம் பற்றியும் ரயிலில் ஆபீசர் செய்த அடாவடியையும் சொல்லப்போறேன் ஹே ஹே ஹே ஹே...!!/////////

    ரைட்டு....

    ReplyDelete
  9. ///////
    இம்சைஅரசன் பாபு.. said...

    //அப்புறமா இம்சை பாபு இடையிலேயே எங்களை கழட்டி விட்டுட்டு ஓடிட்டார் [[ஹி ஹி]] //

    எவன் வீட்டுல அடி வாங்குறது ..டைமுக்கு வீட்டுக்கு போகலை ..நான் வாங்குற அடி எனக்கு தான் தெரியும்///////////



    பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்கா....

    ReplyDelete
  10. எப்படியோ இந்த தமிழ்மணம் சரியாயிடிச்சி...

    ReplyDelete
  11. வலையகம் said...
    வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்..//

    சரிண்ணே....

    ReplyDelete
  12. கல்பனா said...
    விருது நகரில் பிரபல பதிவர்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததும்//

    yaru anna andha pirabala pathivargal//

    சொல்றேம்மா, தங்கச்சி பாப்பா செல்லம்......

    ReplyDelete
  13. கல்பனா said...
    vittutu sapittu athu oru pathivu ., ponga anna ., unga kooda sanda :]//

    பிள்ளை, அவசரமா சந்திச்சது'மா அதான் யாரையும் கூப்பிடலை....கோவபடாதேம்மா.....அண்ணன் பாவம்ல......

    பாபு அண்ணன் இடையிலேயே ஓடிட்டான் ஹி ஹி....

    ReplyDelete
  14. சிவகுமார் ! said...
    ரெண்டாவது படம் ரொம்ப சின்னதா இருக்கு. இன்னும் பெருசா போடுங்க தலைவா!!//

    எலேய் இருலெய் இருலெய்......மெட்ராஸ் பவன் நான் வரும் அன்னைக்கு பெருசா சிறுசா பாத்துருவோம்லேய் ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  15. # கவிதை வீதி # சௌந்தர் said...
    ///////
    பரணி ஹோட்டலில் ஆபீசருக்கு சரியான மரியாதை நெஞ்சில் கை வைத்து வணங்குகிறார்கள்////////

    ஆபிஸர் ஆபிஸர்தான்...//

    சந்தேகமே கிடையாது மக்கா.....!!!!!

    ReplyDelete
  16. கவிதை வீதி # சௌந்தர் said...
    ////////
    மீன் சாப்பாடு கையில் கமகமத்து கொண்டு இருந்தது மனசுக்கும் இதமாக இருந்தது...! சாப்பாடு பரிமாறினவர்களை பாராட்டனும், அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள்...!!!/////////


    ஆபிஸர் கூட இருந்ததால இந்த மரியாதை..
    இதுவே தனியா போயிருந்தா...//

    திவான் அடி பின்னி இருப்பார் ஹி ஹி......

    ReplyDelete
  17. கவிதை வீதி # சௌந்தர் said...
    ////
    அவர் ஹோட்டலுக்குள்ளே நடக்கும் அற்புதமான சம்பவங்களை விவரித்து கொண்டிருந்தார்,////////

    அதை வச்சி ஒரு பதிவு தேத்துங்க....//

    திவானுக்கு போன் பண்ணி கேட்டுட்டு பதிவு போடுறேம்ய்யா.....

    ReplyDelete
  18. இம்சைஅரசன் பாபு.. said...
    //அப்புறமா இம்சை பாபு இடையிலேயே எங்களை கழட்டி விட்டுட்டு ஓடிட்டார் [[ஹி ஹி]] //

    எவன் வீட்டுல அடி வாங்குறது ..டைமுக்கு வீட்டுக்கு போகலை ..நான் வாங்குற அடி எனக்கு தான் தெரியும்//

    டேய் தம்பி பப்ளிக் பப்ளிக், நம்ம தங்கச்சி பாப்பா கல்பனா அருவாளோட வந்துர போறாள், யாரடா எங்க அண்ணனை அடிச்சதுன்னு ஜாக்குரதை.....

    ReplyDelete
  19. கவிதை வீதி # சௌந்தர் said...
    ///////
    விருது நகரில் பிரபல பதிவர்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததும் சிபி ஏமாந்து நாறி போனது பற்றியும், பிரயாணம் பற்றியும் ரயிலில் ஆபீசர் செய்த அடாவடியையும் சொல்லப்போறேன் ஹே ஹே ஹே ஹே...!!/////////

    ரைட்டு....//

    யோவ் என்னாது ரைட்டா...??? பிச்சிபுடுவேன் அவ்வ்வ்வ்வ் எனக்கு இப்பவே கை கால் எல்லாம் உதரளா இருக்கு.....

    ReplyDelete
  20. கவிதை வீதி # சௌந்தர் said...
    ///////
    இம்சைஅரசன் பாபு.. said...

    //அப்புறமா இம்சை பாபு இடையிலேயே எங்களை கழட்டி விட்டுட்டு ஓடிட்டார் [[ஹி ஹி]] //

    எவன் வீட்டுல அடி வாங்குறது ..டைமுக்கு வீட்டுக்கு போகலை ..நான் வாங்குற அடி எனக்கு தான் தெரியும்///////////



    பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்கா....//

    எட்றா அந்த அருவாளை யாரை பார்த்து இந்த கேள்வியை கேட்டீர் ம்ஹும்...........


    ஹி ஹி ஹி ஹி நாங்க அண்ணன் தம்பி எல்லாம் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு நான் சொன்னேனா...????

    அருவா அருவா ம்ஹும்.....

    ReplyDelete
  21. கவிதை வீதி # சௌந்தர் said...
    எப்படியோ இந்த தமிழ்மணம் சரியாயிடிச்சி..//

    நான் இப்போதான் பார்த்தேன் ம்ம்ம்ம்ம்ம்ம்....

    ReplyDelete
  22. அண்ணே பகிர்வுக்கு நன்றி அண்ணே.....சூச்சா போனீங்களா இல்லையா....யோவ் இன்னும் எத்தன முறை தின்னதையே பதிவா போடுவ ஹிஹி!

    ReplyDelete
  23. //பிரியா விடை பெற்று கிளம்பி, //

    ஆஃபீசர் பற்றி அரைப் பதிவுக்கு எழுதிவிட்டு, இந்த பிரியா பொண்ணு பத்தி ஒரு வார்த்தையில் முடித்ததை கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  24. // இனி ஊர் போனால் ஜென்னத் ஹோட்டலை விட்டு நகர மாட்டேன்//

    நீங்க நகர ஆசைப்பட்டாலும் அவங்க விடமாட்டாங்க. நாலு லட்சம் இட்லிக்கு மாவு அரைக்க உங்களை தேடிட்டு இருக்காங்க. பழைய பில்லை ஒழுங்கா செட்டில் பண்ணிடுங்க.

    ReplyDelete
  25. ஓசில சாப்பாடு வாங்கி தந்த ஆபிசருக்கு நன்றி சொல்லாம பிரியாவுக்கு வடை..சாரி..விடை பெறும் விஷயத்தை எழுதிய மனோ ஒழிக. செங்கோவியுடன் என் (கண்ட) கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  26. இப்போது பணி எங்கே

    மனாமா அல்லது மீனாட்சிபுரம்

    ReplyDelete
  27. // எலேய் தமிழ்வாசி மக்கா//

    பிரபல பதிவர் தமிழ்வாசியை ‘மக்கா’ என்று கேட்ட மனோவின் ஆணவம் பாரீர். நாங்கள் மக்கு என்றால் நீங்கள் மட்டும்தான் புத்திசாலியா? மனோ அராஜகம் ஒழிக.

    ReplyDelete
  28. \\\ஏ யப்பா சாப்பாடு சாப்பிடனும்னா ஆபீசர் கூட போயி சாப்பிடனும்ய்யா.....\\\ அவர் ஃபுட் இன்ஸ்பெக்டர்ல்ல ...கண்டிப்பா நம்பி போலாம் ....

    ReplyDelete
  29. ///////
    பிரயாணம் பற்றியும் ரயிலில் ஆபீசர் செய்த அடாவடியையும் சொல்லப்போறேன் ஹே ஹே ஹே ஹே...!!/////////
    நான் எப்பய்யா அடாவடில்லாம் பண்ணினேன். மீ பாவம், விட்ருங்க!

    ReplyDelete
  30. //விக்கியுலகம் said...
    அண்ணே பகிர்வுக்கு நன்றி அண்ணே.....சூச்சா போனீங்களா இல்லையா....யோவ் இன்னும் எத்தன முறை தின்னதையே பதிவா போடுவ ஹிஹி!//
    பொறாமை ஹே ஹே!

    ReplyDelete
  31. ஆனால் எனக்கு நேரில் அதை காண்பித்ததும் ஆச்சர்யமாக அசந்து போனேன்//
    அப்படி என்ன நேர்ல பார்த்தீங்கன்னு எல்லோருக்கும் சொன்னாதானே நல்லா இருக்கும். இல்லாட்டி அவங்க மனசு உறுத்திகிட்டே இருக்குமே?

    ReplyDelete
  32. இப்படி சாப்பாடுகளை சொல்லியே நாக்கில் ரூசியை ஊறவைக்கிறீங்க மனோ தொடருங்கள் நானும் தமிழ்வாசியைத் தேடுகின்றேன் வருவாரா?

    ReplyDelete
  33. விக்கியுலகம் said...
    அண்ணே பகிர்வுக்கு நன்றி அண்ணே.....சூச்சா போனீங்களா இல்லையா....யோவ் இன்னும் எத்தன முறை தின்னதையே பதிவா போடுவ ஹிஹி!//

    யோவ் என்னை மரியாதையா அனத்த விடுங்கய்யா ம்ஹும்....

    ReplyDelete
  34. செங்கோவி said...
    //பிரியா விடை பெற்று கிளம்பி, //

    ஆஃபீசர் பற்றி அரைப் பதிவுக்கு எழுதிவிட்டு, இந்த பிரியா பொண்ணு பத்தி ஒரு வார்த்தையில் முடித்ததை கண்டிக்கிறேன்.//

    என்ன ஒய் ஏன் வீட்டம்மாகிட்டே மாட்டி விடுற ஐடியாவா பிச்சிபுடுவேன் ஹி ஹி....

    ReplyDelete
  35. ! சிவகுமார் ! said...
    // இனி ஊர் போனால் ஜென்னத் ஹோட்டலை விட்டு நகர மாட்டேன்//

    நீங்க நகர ஆசைப்பட்டாலும் அவங்க விடமாட்டாங்க. நாலு லட்சம் இட்லிக்கு மாவு அரைக்க உங்களை தேடிட்டு இருக்காங்க. பழைய பில்லை ஒழுங்கா செட்டில் பண்ணிடுங்க.//

    பொறுங்க ராசா, இனி நேரே மெட்ராஸ் பவன்தான்.....

    ReplyDelete
  36. ! சிவகுமார் ! said...
    ஓசில சாப்பாடு வாங்கி தந்த ஆபிசருக்கு நன்றி சொல்லாம பிரியாவுக்கு வடை..சாரி..விடை பெறும் விஷயத்தை எழுதிய மனோ ஒழிக. செங்கோவியுடன் என் (கண்ட) கண்டனத்தை தெரிவிக்கிறேன்..///

    யோவ் ரெண்டுபேரும் என்ன ஒரு முடிவோடதான் இருக்கீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  37. ராம்ஜி_யாஹூ said...
    இப்போது பணி எங்கே

    மனாமா அல்லது மீனாட்சிபுரம்//

    மும்பை ஹி ஹி......

    ReplyDelete
  38. சிவகுமார் ! said...
    // எலேய் தமிழ்வாசி மக்கா//

    பிரபல பதிவர் தமிழ்வாசியை ‘மக்கா’ என்று கேட்ட மனோவின் ஆணவம் பாரீர். நாங்கள் மக்கு என்றால் நீங்கள் மட்டும்தான் புத்திசாலியா? மனோ அராஜகம் ஒழிக.//

    ஐயய்யோ நான் இந்த விளையாட்டுக்கு வரலீங்கோ அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  39. koodal bala said...
    \\\ஏ யப்பா சாப்பாடு சாப்பிடனும்னா ஆபீசர் கூட போயி சாப்பிடனும்ய்யா.....\\\ அவர் ஃபுட் இன்ஸ்பெக்டர்ல்ல ...கண்டிப்பா நம்பி போலாம் ....//

    அதே அதே அதே............!

    ReplyDelete
  40. FOOD said...
    ///////
    பிரயாணம் பற்றியும் ரயிலில் ஆபீசர் செய்த அடாவடியையும் சொல்லப்போறேன் ஹே ஹே ஹே ஹே...!!/////////
    நான் எப்பய்யா அடாவடில்லாம் பண்ணினேன். மீ பாவம், விட்ருங்க!//

    ஹா ஹா ஹா ஹா பயப்படாதீங்க ஆபீசர் ஹி ஹி......

    ReplyDelete
  41. FOOD said...
    //விக்கியுலகம் said...
    அண்ணே பகிர்வுக்கு நன்றி அண்ணே.....சூச்சா போனீங்களா இல்லையா....யோவ் இன்னும் எத்தன முறை தின்னதையே பதிவா போடுவ ஹிஹி!//


    பொறாமை ஹே ஹே...//


    ராஸ்கல் ம்ஹும்......

    விடுங்க ஆபீசர்....

    ReplyDelete
  42. கே. ஆர்.விஜயன் said...
    ஆனால் எனக்கு நேரில் அதை காண்பித்ததும் ஆச்சர்யமாக அசந்து போனேன்//


    அப்படி என்ன நேர்ல பார்த்தீங்கன்னு எல்லோருக்கும் சொன்னாதானே நல்லா இருக்கும். இல்லாட்டி அவங்க மனசு உறுத்திகிட்டே இருக்குமே?//

    உறுத்துனதைதான் நீங்களும் பார்தீங்களே ஹி ஹி.....

    ReplyDelete
  43. Nesan said...
    இப்படி சாப்பாடுகளை சொல்லியே நாக்கில் ரூசியை ஊறவைக்கிறீங்க மனோ தொடருங்கள் நானும் தமிழ்வாசியைத் தேடுகின்றேன் வருவாரா?//

    தமிழ்வாசியை என் மாப்பிளை தேடுரதுக்கு வேறொரு வெயிட்டான காரணம் உண்டுய்யா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  44. //இப்பிடியெல்லாம் நிறைய மேட்டர் அவர் சொல்லும் போது ஆச்சர்யமா இருக்கு ஹோட்டல்னாலே அனுபவங்கள் சூப்பரா இருக்கும் என்பது எனக்கும் அனுபவம்தானே....!!!//
    உங்களுக்கு இல்லாத ஓட்டல் அனுபவமா?ஆனால் அதெல்லாம் நட்சத்திர ஓட்டலில், அங்கே!இது நம்மூரிலே!

    ReplyDelete
  45. நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வாங்க.....

    ReplyDelete
  46. ஹோட்டல் அனுபவங்கள் கலக்கல். இரண்டாவது சந்திப்பில் ஹோட்டல் மேட்டர்களுக்கும், சாப்பாட்டிற்கும் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீங்க.

    நீர் நிலைகளில் நீராடும் பழக்கம் இப்பவும் விட்டுப் போகல்லையோ;-))
    ஹா..ஹா...

    ReplyDelete
  47. அருமையான சந்திப்பு

    ReplyDelete
  48. mee the firstu..

    vaalga valamudan

    ReplyDelete
  49. பயணங்கள் தொடரும்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!