Thursday, July 28, 2011

ஒரு பிரபல பதிவரின் தொடர் வெற்றி...!!!!!!

ஸ்கூலுக்கு குழந்தையை [[மும்பை]] விடபோன என் வீட்டம்மாவுக்கு போன் செய்து, செல்லம் அங்கே கடையில ஜூனியர் விகடனோ, ஆ விகடனோ, குமுதம் நாளிதழ் இருந்தால் எல்லாம் வாங்கிட்டு வாம்மா'ன்னு சொன்னேன், அவளும் சரி அத்தான் என சொன்னாள்....

கொஞ்சநேரvம் களிஞ்சதும் அவளிடமிருந்து போன், அத்தான் ஒரு வார இதழும் இல்லை ஆனால் குங்குமம் [[வார இதழ்]] தான் இருக்கு வாங்கிட்டு வரட்டுமா'ன்னு கேட்கவும் நானும் வாங்கிட்டு வாம்மானு சொன்னேன்...


அவள் கொண்டு தந்ததும் நான் அதை வாசிக்காமல், பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட்டுட்டு இருந்தேன், குங்குமம் டேபிளில் இருந்தது, கொஞ்ச [[அதிக]] நேரம் கழிச்சி தலைப்பை பார்த்தேன் அங்கே...
'பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்" என்று எழுதி இருந்தது....!!!


அடடா உடனே படிக்கனுமேன்னு தோணியதும், பிரகாசின் பதிவில் கமெண்ட்ஸ் போடும் பிஸியில் இருந்தமையால், படிக்காமல் மறந்து பதிவில் பிஸி ஆகிவிட்டேன், நேற்று மதியம் என் மனைவி, குங்குமம் படித்துவிட்டு, அத்தான் பாருங்க, நீங்க ஒரு ஆளை [[நண்பனைதான் ஹி ஹி]] மூதேவி மூதேவி'ன்னு திட்டி எழுதுவீன்களே [[அவ்வ்வ்வ்வ்]] அந்தாளுதான் "பெண்களை மயக்கும் மிஸ்டுகால் வில்லன்கள்" என்ற கட்டுரையை எழுதி இருக்கார் போல என சொல்லவும் ஆச்சர்யமாக விரித்து படிக்க ஆரம்பிச்சேன்....!!!


ஆமாம் சி பி செந்தில்குமார்'ன்னு போட்டுருக்கு...!!! ஆனாலும் எனக்கு சந்தேகமாகவே இருக்கவும், சிபி'க்கு போனை போட்டேன் உடனே பிட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ அட்டு படம் பார்த்துட்டு இருந்தானோ தெரியலை ராஸ்கல் என் போனை அட்டென்ட் பண்ணிட்டு ஹா ஹா ஹா ஹா'ன்னு சிரிச்சிட்டே இருக்கான் [[ராஸ்கல்]] 


டேய் டேய் நிறுத்துடா உன் சிரிப்பை, ஆமாம் சாப்பிட்டியா [[ஓசி சாப்பாடு]] ஆமாம்.........சரி குங்குமத்துல நீ ஏதாவது எழுதினியா கேட்குமுன்னே டெலிபோன் கட்டானது, கடுப்பான நான்.........சரி நம்ம போன்ல காசு தீந்துருக்குமொன்ற டவுட்ல, செக் பண்ணினேன் ஹி ஹி ஆமா காசு முடிஞ்சி போச்சி......!


அப்புறம் வோடா [[வடை இல்லை]] போன்ல  காசு போட்டுட்டு மறுபடியும் போன் பண்ணினேன் அப்பவும் ஹி ஹி ஹி ஹி'ன்னு சிரிச்சிட்டே இருக்கவும் நாலு @#$%$#@@###@@$$$$$$$$##$$%@@ திட்டு திட்டவும் நார்மலானான்.....!!!


டேய் மக்கா குமுதத்துல'ன்னு நான் ஆரம்பிக்கவும் இடைமறித்தான், ஆமாம் குங்குமத்துல எழுதுனது நாந்தேன், அது மட்டுமா, ஆ விகடன்ல இந்த வாரம் எழுதி இருக்கேன், என்னமோ ஒரு தலைப்பு சொன்னான் மறந்து போச்சு.....ஆனால் அவன் குங்குமத்தில் எழுதிய கட்டுரை மிகவும் பெண்களுக்கு உபயோகம் உள்ளது என்பது என் மனைவியின் பாராட்டில் தெறிந்தது..!!! வாழ்த்துக்கள்'டா மக்கா.....


நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........??? என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!


டிஸ்கி : டேய் கில்மா பத்திரிக்கைகளுக்கு சற்று தள்ளியே இரு, ஏன்னா உன்னை கடுமையாக கண்காணிப்பதாக உளவுத்துறை "ஆபீசர்கிட்டே" இருந்து ரகசிய தகவல் எனக்கு வந்துருக்கு சாக்குரதை....


டிஸ்கி : படங்கள் எல்லாம் குங்குமம் வார இதழில் சுட்டது ஹி ஹி........

நன்றி குங்குமம்.


65 comments:

  1. அவரு பெரிய ஆளுதான்னே...நான் கூட இந்தியா டுடேக்கு போங்க கூபுடுராங்கன்னு சொன்னேன்....ஆனா அவருக்கு இஷ்டமில்லன்னு சொல்லி புட்டாறு...என்னத்த பண்ண...வாழ்துக்கள் சிபி அவர்களுக்கும்....பதிவுக்கு எட்டி பாக்காத அண்ணன் மனவுக்கும் ஹிஹி!

    ReplyDelete
  2. சி பி விகடன்ல ஒரு தொடர் எழுதப் போறதா கேள்விப்பட்டேன். இனி அவர் ரேஞ்சே வேற

    ReplyDelete
  3. மனோ என் பதிவில் ஒரு வரியில கமென்ட் போட்டதுல ரொம்ப பிஸியா இருந்திங்களா? நம்பனும்???

    ReplyDelete
  4. வணக்கம் அண்ணாச்சி,
    இதமான காலைப் பொழுதில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க. சிபியிடம் பல்வேறுபட்ட தனித்துவமான திறமைகள் ஒளிந்திருக்கிறது, ஆனாலும் அவர் நேரமின்மையால் தான் தன்னுடைய காத்திரமான படைப்புக்களைப் பகிருவதில்லை & பதிவிடுவதில்லை என நினைக்கின்றேன்.

    இனிவருங் காலங்களில் தொடர்ந்தும் தன்னுடைய எழுத்தாற்றலைப் பறைசாற்றும் வகையில் சிபி அவர்கள் நாளைக்கு ஒரு பதிவு என்ற விதத்தில் தன்னுடைய காத்திரமான படைப்புக்களைப் பகிர்வார் என நினைக்கின்றேன்.

    சிபிக்கு வாழ்த்துக்களையும்,
    அந்த இனிய செய்தியினைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகளையும் அனைத்து வலைப் பதிவர்களோடும் இணைந்து தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  5. விக்கியுலகம் said...
    அவரு பெரிய ஆளுதான்னே...நான் கூட இந்தியா டுடேக்கு போங்க கூபுடுராங்கன்னு சொன்னேன்....ஆனா அவருக்கு இஷ்டமில்லன்னு சொல்லி புட்டாறு...என்னத்த பண்ண...வாழ்துக்கள் சிபி அவர்களுக்கும்....பதிவுக்கு எட்டி பாக்காத அண்ணன் மனவுக்கும் ஹிஹி!//

    யோவ் உம்ம நேரமும் என் நேரமும் டாலி ஆகமாட்டேங்குதுய்யா ஹி ஹி....

    ReplyDelete
  6. இராஜராஜேஸ்வரி said...
    வாழ்த்துக்கள்...//

    நன்றி மேடம்...

    ReplyDelete
  7. தமிழ்வாசி - Prakash said...
    சி பி விகடன்ல ஒரு தொடர் எழுதப் போறதா கேள்விப்பட்டேன். இனி அவர் ரேஞ்சே வேற//

    ஐயய்யோ அப்போ அவனை இனி திட்டமுடியாதோ....????

    ReplyDelete
  8. தமிழ்வாசி - Prakash said...
    மனோ என் பதிவில் ஒரு வரியில கமென்ட் போட்டதுல ரொம்ப பிஸியா இருந்திங்களா? நம்பனும்???//

    யோவ் அப்போ பதிவை படிக்க வேண்டாம்னு சொல்லுதீரா பிச்சிபுடுவேன் ஹி ஹி.....

    ReplyDelete
  9. நிரூபன் said...
    வணக்கம் அண்ணாச்சி,
    இதமான காலைப் பொழுதில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க. சிபியிடம் பல்வேறுபட்ட தனித்துவமான திறமைகள் ஒளிந்திருக்கிறது, ஆனாலும் அவர் நேரமின்மையால் தான் தன்னுடைய காத்திரமான படைப்புக்களைப் பகிருவதில்லை & பதிவிடுவதில்லை என நினைக்கின்றேன்.

    இனிவருங் காலங்களில் தொடர்ந்தும் தன்னுடைய எழுத்தாற்றலைப் பறைசாற்றும் வகையில் சிபி அவர்கள் நாளைக்கு ஒரு பதிவு என்ற விதத்தில் தன்னுடைய காத்திரமான படைப்புக்களைப் பகிர்வார் என நினைக்கின்றேன்.

    சிபிக்கு வாழ்த்துக்களையும்,
    அந்த இனிய செய்தியினைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகளையும் அனைத்து வலைப் பதிவர்களோடும் இணைந்து தெரிவித்துக் கொள்கின்றேன்.//

    நன்றி மக்கா.........

    ReplyDelete
  10. இன்னும் பல உயரங்களை எட்டப்போறார் சிபி.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. gokul said...
    இன்னும் பல உயரங்களை எட்டப்போறார் சிபி.பகிர்வுக்கு நன்றி.//

    வாழ்த்துவோம்.....!!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. விக்கியுலகம் said...

    ....பதிவுக்கு எட்டி பாக்காத அண்ணன் மனவுக்கும் ஹிஹி!

    சைக்கிள் கேப்ல கிடா வெட்றான் பாரு ராச்கல்

    ReplyDelete
  14. அண்ணன் விகடனை காப்பி பேஸ்ட் பண்ணினார் ...இனி விகடன் அண்ணனை காப்பி பேஸ்ட் பண்ணும் .......நியூட்டன்ஸ் லா !

    ReplyDelete
  15. siva said...
    வாழ்த்துக்கள்..//

    நன்றி மக்கா......

    ReplyDelete
  16. சி.பி.செந்தில்குமார் said...
    அடப்பாவி...!//

    ஹி ஹி அண்ணே டேய் அண்ணே நீ வாழ்க ஹி ஹி.....

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் சிபிக்கு!
    பகிர்தலுக்கு நன்றி பாஸ்! :-)

    ReplyDelete
  18. சி.பி.செந்தில்குமார் said...
    விக்கியுலகம் said...

    ....பதிவுக்கு எட்டி பாக்காத அண்ணன் மனவுக்கும் ஹிஹி!

    சைக்கிள் கேப்ல கிடா வெட்றான் பாரு ராச்கல்//

    ஒரு ராஸ்கல் இன்னொரு ராஸ்கல பற்றி பேசுது பாரு ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  19. வணக்கம் மனோ, என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதற்க்கு. தங்கள் பதிவை பின்தொடர்கிறேன்.

    //நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........??? என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!///

    வாழ்த்துக்கள் உங்களுக்கும் செந்தில்குமாருக்கும்.

    ReplyDelete
  20. koodal bala said...
    அண்ணன் விகடனை காப்பி பேஸ்ட் பண்ணினார் ...இனி விகடன் அண்ணனை காப்பி பேஸ்ட் பண்ணும் .......நியூட்டன்ஸ் லா !//

    அய் இது சூப்பரா இருக்கே....!!!

    ReplyDelete
  21. ஜீ... said...
    வாழ்த்துக்கள் சிபிக்கு!
    பகிர்தலுக்கு நன்றி பாஸ்! :-)//

    தேங்க்யூ தேங்க்யூ மக்கா....

    ReplyDelete
  22. வேடந்தாங்கல் - கருன் *! said...
    thanks for sharing makka..//

    நன்றி வாத்தி......

    ReplyDelete
  23. RAMVI said...
    வணக்கம் மனோ, என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதற்க்கு. தங்கள் பதிவை பின்தொடர்கிறேன்.

    //நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........??? என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!///

    வாழ்த்துக்கள் உங்களுக்கும் செந்தில்குமாருக்கும்.//

    மிக்க நன்றி ராம்வி....!!!

    ReplyDelete
  24. நான் குங்குமம் போல உள்ள சரோஜா தேவி டைப் புத்தகம் படிபதில்லை

    ReplyDelete
  25. அப்படியா..
    இன்னிக்கு வாங்கி பார்க்குறேன்...

    தொடரட்டும் சிபி பணி...

    ReplyDelete
  26. ஆனா... உங்க அளவுக்கு சிபி அசிக்கப்படுத்துகிற ஆள் வேறயாரும் இல்லை...

    பாவங்க கொஞ்சம் மரியாதையா போடுங்க...

    ReplyDelete
  27. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

    எனது கனா.................

    ReplyDelete
  28. வாழ்த்துகள் சிபிக்கு..சிபியிடம் இருக்கின்ற திறமைக்கு முழுநேர எழுத்தாளராகவே ஆக முடியும். ஆனாலும் வேலைப்பளுவும் நேரமின்மையுமே அவரிடம் இருக்கும் பிரச்சினைகள்.
    பத்திரிக்கைத் தொடர்பின் வாயிலாக கனவுத் தொழிற்சாலைக்குள்ளும் அண்ணன் நுழைந்து கலக்கட்டும்.

    ReplyDelete
  29. சந்தோசமா இருக்கு அண்ணா நல்ல விஷயம்

    சிபி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. என் ராஜபாட்டை"- ராஜா said...
    நான் குங்குமம் போல உள்ள சரோஜா தேவி டைப் புத்தகம் படிபதில்லை//

    ஒ அப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்கா...???

    ReplyDelete
  31. கவிதை வீதி # சௌந்தர் said...
    அப்படியா..
    இன்னிக்கு வாங்கி பார்க்குறேன்...

    தொடரட்டும் சிபி பணி...//

    ஹி ஹி ஹி பாருங்க பாருங்க.....

    ReplyDelete
  32. //நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........???//

    நண்பேன்டா..

    //என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!//

    இந்த ஒரு வரிக்காக என்னமா சுத்தி வளச்சு சொல்லிருக்கீங்க..

    ம்ம்ம்.. சிபி சார்க்கு என்னோட வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  33. கவிதை வீதி # சௌந்தர் said...
    ஆனா... உங்க அளவுக்கு சிபி அசிக்கப்படுத்துகிற ஆள் வேறயாரும் இல்லை...

    பாவங்க கொஞ்சம் மரியாதையா போடுங்க...//

    ஹி ஹி அவனை திட்டுனாதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கு ஹி ஹி கூல் மக்கா......

    ReplyDelete
  34. கவிதை வீதி # சௌந்தர் said...
    ஆனா... உங்க அளவுக்கு சிபி அசிக்கப்படுத்துகிற ஆள் வேறயாரும் இல்லை...

    பாவங்க கொஞ்சம் மரியாதையா போடுங்க...//

    அவனை திட்டலேன்னா எனக்கு மைனஸ் ஓட்டு போட்டுருவான்ய்யா....

    ReplyDelete
  35. T.V.ராதாகிருஷ்ணன் said...
    :)))//

    வாங்கண்ணே வாங்க......

    ReplyDelete
  36. HajasreeN said...
    vaalthukkal cp//

    மிக்க நன்றி ஹாஜா.....

    ReplyDelete
  37. FOOD said...
    வாழ்த்துக்கள் சிபிக்கு. நன்றி மனோவிற்கு. சிபி நெல்லை வந்து சென்ற நேரம் நல்ல நேரம்தான்.//

    ஹா ஹா ஹா ஹா அட ஆமால்ல.....!!!

    ReplyDelete
  38. ஆகுலன் said...
    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...//

    நன்றி நன்றி.....

    ReplyDelete
  39. செங்கோவி said...
    வாழ்த்துகள் சிபிக்கு..சிபியிடம் இருக்கின்ற திறமைக்கு முழுநேர எழுத்தாளராகவே ஆக முடியும். ஆனாலும் வேலைப்பளுவும் நேரமின்மையுமே அவரிடம் இருக்கும் பிரச்சினைகள்.
    பத்திரிக்கைத் தொடர்பின் வாயிலாக கனவுத் தொழிற்சாலைக்குள்ளும் அண்ணன் நுழைந்து கலக்கட்டும்.//

    உண்மையை சொன்னீங்க மக்கா.....

    ReplyDelete
  40. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    சந்தோசமா இருக்கு அண்ணா நல்ல விஷயம்

    சிபி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..//

    நன்றி நன்றி......

    ReplyDelete
  41. இந்திரா said...
    //நண்பர்களின் எழுத்துக்கள் பேப்பரிலோ, வார இதழ்களிலோ வரும்போது மனசுக்கு என்னவோ நாமே எழுதுன ஃபீலிங்கும், பெருமையுமா இருக்கு இல்லையா........???//

    நண்பேன்டா..

    //என் நண்பன் சிபி செந்தில்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......!!!//

    இந்த ஒரு வரிக்காக என்னமா சுத்தி வளச்சு சொல்லிருக்கீங்க..

    ம்ம்ம்.. சிபி சார்க்கு என்னோட வாழ்த்துக்களும்..//



    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கண்டுபிடிச்சிட்டீன்களா ஹி ஹி....

    ReplyDelete
  42. “கில்மா படங்கள் உதவி: நாஞ்சில் மனோ” என்று போட மறந்த சிபி..உங்களுக்கு மனசாட்சி இருக்கா?

    ReplyDelete
  43. சி .பி அண்ணருக்கு வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  44. மர்மக்கதை ரேஞ்சிக்கு போகுது கதை (நா பதிவை சொன்னேன் ).. ஹி...ஹி...



    சி பிக்கு வாழ்த்துக்கள் :-) இன்னும் தொடரட்டும்

    ReplyDelete
  45. நல்ல நட்பு உங்கள் நட்பு.. வாழ்த்துக்கள் சிபி..))

    மனோ அப்புறம் முதலீடு பத்தி என் ப்லாகில் கேட்டு இருந்தீங்க.. உங்களுக்காகவும் நெல்லி மூர்த்திக்காகவும் பங்குச்சந்தை இயக்குனர் நாகப்பனிடம் கேட்டு எழுதி இருக்கேன் பாருங்க ..

    http://honeylaksh.blogspot.com/2011/07/7.html

    ReplyDelete
  46. வாழ்த்துக்கள் சி.பி. இதை எம்முடன் பகிர்ந்த மனோவிற்கு நன்றிகள்.

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  48. வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  49. இவங்க எல்லாம் வேர்ல்டு பெமச்சு!!

    ReplyDelete
  50. சிபிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  51. சிபிக்கு இது மிகச் சாதாரணம், இதை நான் வாழ்த்தப் போவதில்லை, இதையெல்லாம் குறைத்துவிட்டு படம் இயக்கும் வேலைகளில் கவனம் செலுத்தவும். அடுத்து இனி படம் இயக்கினால்தான் வாழ்த்து...!

    ReplyDelete
  52. நண்பர் சிபிக்கும் , பகிர்வுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. வாழ்துக்கள்

    ReplyDelete
  54. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  55. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  56. வாழ்த்துக்கள்.........

    வாழ்த்துக்கள்.........

    வாழ்த்துக்கள்...

    ......வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  57. சி.பி அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!