Wednesday, March 21, 2012

காந்தி தேசமே காவல் இல்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா, இது அகிம்சை செத்துப்போன நாடா...???!!!

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யும் தினமலர் பத்திரிக்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரஷ்யா நாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு கண்மூடித்தனமாக இல்லாதவைகளை எழுதி வருகிறதை வன்மையாக கண்டிக்கிறோம்....!!!



இதென்ன அநியாயமான அநாகரீகமான அடக்குமுறை, இது காந்தி தேசமா இல்லை சிங்களன் தேசமா...? அகிம்சையாக போராட்டம் நடத்தும் சொந்த மக்களையே பயமுறுத்தி அச்சுறுத்தும் அரசாங்கம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை, நீலாம்பரிகள் [[நரிகள்]] புரிந்து கொண்டால் நல்லது....!!!


அணுமின் நிலையம் திறக்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு முப்பது சதவீதம் மின்சாரம் கிடைக்கும் மீதி எல்லாம் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் கொடுக்கும் ஏற்பாட்டில் அரசாங்கம் செய்யல்படுகிறது, அன்று போராட்டத்துக்கு எதிரானவர்களுக்கும் கரண்ட் கட் நிச்சயம் பார்க்கலாம்....!!!


அமைதியாக போராடும் மக்களுக்கு எதிராக காஷ்மீர் போன்ற மாநிலத்தை போல மாற்ற நினைக்கிறதா இந்த அமைதியை அகிம்சையை விரும்பாத அரசாங்கம்...???


கடந்த தேர்தலில் ஜெயலலிதா முதன் முதல் பிரச்சாரம் செய்த இடம் சாமிதோப்பு [[கன்யாகுமரி மாவட்டம்]] காரணம் அய்யா வைகுண்டரின் பக்தர்களான நாடார் இன மக்களின் ஓட்டை குறிவைத்து போனவருக்கு அம்மக்கள் அமோக ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்தார்கள், ஆனால் அம்மக்கள் எந்த ஊர் மக்கள் என்று அம்மா வகையறாக்களுக்கு தெரியவில்லை, ஆம் அம்மக்கள், அணுமின்நிலையத்துக்காக போராடும், கூடங்குளம் சுற்று வட்டாரத்து மக்களே என்பது எத்தனை பேருக்கு தெரியும், இனி பாராளுமன்ற தேர்தலில் சரியாக பாடம் கர்ப்பிக்கப்படும் ரெண்டு அம்மாக்களுக்கும்....!!!


சங்கரன் கோவில் தேர்தலில் வெற்றி பெற்ற திமிரில் கூடங்குளத்தில் அடக்குமுறை என்னும் அராஜகத்தை கையில் எடுத்து இருக்கிறார் மாண்புமிகு அம்மா, இனியும் ஒரு இடைத்தேர்தல் வராது என்ற தைரியத்தில், அமைதியாக போராடும் மக்களிடம் ஒரு பெரிய போர் நடப்பதாக ஒத்திகை காட்டும் இவர்களுக்கு, மக்களின் பயத்தை பீதியை மாற்றும் படியான விழிப்புணர்வு செய்து காட்டமுடியாத தற்குறி புத்தியை என்னவென்று சொல்ல......!!!!???

9 comments:

  1. கூடங்குளத்தில் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை உடனே நிறுத்தவேண்டும்...

    கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

    Hitler's Germany...Sadam's Iraq...Now Singh's India...

    Shame on you Jaya...

    ReplyDelete
  2. Ellam ok thaan anne...but tamilnadu la power cut evlo neram nu ungalukku theriyum nu ninaikkiren...

    Koodangulam production 500 MW patthalainaa kooda, etho oru 10 nimisham extra current kedaichaa pothumnu thaan makkal ninaikkiraanga...

    Koodangulam plant -ai 6 maasam munnaadiye open panni iruntha JJ ku shottu.. aana ippo kuttu thaan...

    ReplyDelete
  3. current olungaa kodukkaama makkalai kashtap padutthi, koodangulam opening nyaayam thaan engira maathiri oru maayaiyai uruvaakivitta ammaavin raja thanthiram, ayya karunaanithiyai minji vittadhu...

    ammaa ippo thaan migap periya arasiyal vaathiyaagittu irukkaanga!!!

    ReplyDelete
  4. அண்ணனையே கோவப்பட வச்சிட்டாங்களே...

    ReplyDelete
  5. இனியும் ஒரு இடைத்தேர்தல் வராது என்ற தைரியத்தில்,
    >>>>
    அப்படியே வந்தாலும் அம்மா பயப்படும் ரகமில்லைங்கண்ணா.

    ReplyDelete
  6. அந்தமக்கள் போராட்டம் வெற்றியளிக்கனும் இதற்கு பதிவுலகில் இருப்போரும் கைகோர்க்க வேண்டும் ரெவெரி சொன்ன முகவரிகளைச் சுட்டி எதிர்ப்பை காட்டனும் அண்ணாச்சி!

    ReplyDelete
  7. அம்மாவுக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்ததற்கு காரணம் மனோசார் தான் காரணம். நீங்க எவ்வளவு நாள் அருவாளையே தீட்டி கிட்டு இருப்பீங்க எப்படி தீட்டுவததென்று மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து எல்லோரையும் அருவாளை தூக்க வைச்சு இருந்த இந்த நிலமை வந்திருக்காது

    ReplyDelete
  8. இது காந்தி வாழ்ந்த காலம் அல்ல காந்தி தேசமும் அல்ல அமைதி முறையில் போராடுவதற்கு....போராட்ட முறையை மாற்ற வேண்டும் அப்போதுதான் வெற்றி கிடைக்கும்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!