Tuesday, September 20, 2011

பிரபல நடிகர்களுடன், பிரபல பதிவர்கள் சந்திப்பு...!!!


பிரபல நடிகர்களுடன், பிரபல பதிவர்கள் சந்திப்பு நடக்கப்போகுது எருமைநாயக்கன் பட்டியில......
 
அஜித் : நான் பேஸ்மாட்டேன் பேஸ்னா நிறுத்த மாட்டேன், மங்காத்தா வெற்றி பேர்ஸேய்த பதிவர்களுக்கு நன்றி...
 
ஆபீசர் : போன கமல் சந்திப்புக்கு என்னை கூப்பிடாமல், இந்த சந்திப்புக்கு அழைத்தமைக்கு நன்றி எனக் கூறி, பெல்ட்டை உருவி டேபிளில் வைக்குறார்...
 
பன்னிகுட்டி : இவர் வேற அடிக்கடி பெல்ட்டை உருவி பாம்பு மாதிரி காட்டி பயமுறுத்துறாரே, டேய் பன்னித்தலையா [[செல்வா]] எதுக்கும் 108 க்கு போன் போட்டு வரச்சொல்லுடா...
 
விஜய் : ங்கனா ஏற்கனவே உங்க பதிவுல என்னை கடிச்சது, சீ ச்சே அடிச்சது போதாதாங்க்னா....???
 
பன்னிகுட்டி : உன் நடிப்பை பார்த்துட்டு உலக தமிழன் எல்லாம் கண்ணீர் விட்டு கமருன சாபம் உன்னை சும்மா விடாதுய்யா...
 
சிபி : நான் கில்மானந்தாவின் மனோ"ரஞ்சிதமான நினைவுகள்னு ஒரு பதிவு எழுதப் போறேன், அதை சினிமாவா எடுக்கணும் அதுக்கு விஜய்'தான் பொருத்தமா இருப்பார்னு நினைக்கிறேன் என சொல்லவும் சின்ன டாக்குட்டர் கலவரமாகிறார்.
 
செல்வா : அண்ணே அந்த கில்மா படத்துக்கு நம்ம நிரூபன் செம போருத்தம்னே.....
 
நிரூபன் : ஏண்டா பரதேசி என்னை போட்டு குடுக்குறே, நான் அதுக்கு சரிப்பட  மாட்டேன்ய்யா வேண்ணா துஷ்யந்தனை ரெக்கமன்ட் பண்ணுறேன்...
 
துஷ்யந்தன் : "பதிவை திறங்கள் நெட் வரட்டும்'ன்னு தலைப்பு வையுங்கள்....
 
விக்கி : எங்க மாமியோட மாமியார் கதை ஒன்னு இருக்கு, ஏன்னா நான் உண்மையதான் எழுதுவேன் [[ஆபீசர் பெல்ட்டை உயர்த்தி காட்டவும் விக்கி பம்முகிறான்....]]
 
சிவகுமார் : என்னய்யா இந்த ஊருக்கு எருமைநாயக்கன்பட்டி'ன்னு யாரய்யா பேர் வச்சது...?? மெட்ராஸ் பவன்னு பேர் வைக்காம, மும்பை ஜூ பீச் மாதிரி நாறுது [[விஜய் முன்னும் பின்னுமா திரும்பி பார்க்கிறார்]]
 
விஜய் : என் வேலாயுதம் கதையை பன்னிகுட்டி சுட்டு அவர் பதிவில் போட்டுட்டார் அதுக்கு ஒரு பதிலை சொல்லுங்க...?
 
சிம்பு : ஆமா பெரிய குலேப்பகாவலி, காத்தவராயன் கதை, போய்யா போத்திக்கிட்டு, நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எழுதி வச்சிக்கிங்க என விரலை காட்ட...
 
தனுஷ் : இல்லை இல்லை, சூப்பர் ஸ்டார் மருமகன் நான் என்பது எல்லாரும் அறிஞ்சதுதான்  அதனால நான்தான் சூப்பர் ஸ்டார்.
 
தமிழ்வாசி : டேய் நாதாரிகளா ஒழுங்கா ஒரு நல்ல படம் நடிங்கடா, நேரே அஞ்சா'சிங்கம்கிட்டே போட்டு குடுத்துருவேன்...
 
கஞ்சா கருப்பு : அய்யய்யோ பதிவர் சந்திப்புக்கு என்னை நெல்லையில கூப்பிட்டாயிங்க, சென்னையில கூப்பிட்டாயிங்க, மதுரையில கூப்பிட்டாயிங்க, மும்பையில கூப்பிட்டாயிங்க...
 
சந்தானம் : பேசாம சாமியார் ஆகிட்டேன்னா எல்லா இடத்துக்கும் போகலாம்....
 
சிபி : யோவ் முதல்ல சின்ன டாகுட்டருக்கும், பன்னிகுட்டிக்கும் என்னா பிரச்சினைன்னு பாருங்கய்யா...
 
சிரிப்பு போலீஸ் : அது வந்துண்ணா பிரண்ட்ஸ்'ன்னு ஒரு படம் வந்தது இல்லையா, அதில் டாக்குட்டர் சிரிச்ச சிரிப்பை பார்த்து அண்ணன் பேதி ச்சே பீதி ஆகி, திடீர் திடீர்னு நடுராத்திரியில அலற்ரதாலே வந்த பிரச்சினை....
 
அஜித் : அந்த படத்து கிளைமாக்ஸ்ல விஜய் மூஞ்சியில சாணி தேச்சுட்டு உக்காந்து இருந்த அந்த மெகா நடிப்பு என்னை மிக்க கவர்ந்த இடம், ஹேய் நான் பேஸ்மாட்டேன் பேஸ்னா...
 
ஆபீசர் : எலேய் திவானந்தா என ஆபீசர் கூப்பிடவும் அஜித் வாயை மூடிக் கொள்கிறார்.
 
கேப்டன் வாழ்க, பருப்பு சாரி, கருப்பு எம்ஜியார் வாழ்க என வாசலில் சத்தம் கேட்கிறது, கேப்டன் வெள்ளை வேட்டி சட்டையில் கருப்பு கண்ணாடியோடு உள்ளே நுழைகிறார்...
 
கேப்டன் : டேய் என்ன உள்ளே ஒரே இருட்டா இருக்கு...???
 
ராமராஜன் : யோவ் முதல்ல கூலிங் கிளாசை கழட்டிட்டு பாருய்யா...காலையிலேயே ஊத்தியாச்சா..???
 
கேப்டன் : ஏதோ எருமைநாயக்கன்பட்டி மாட்டுகொட்டயில நீ எனக்கு ஊத்தி தந்தமாதிரி பேசுற...??
 
பிரசாந்த் : மம்பட்டியான் மிக அருமையா வந்துருக்கு என்பதை பதிவர்களுக்கு சொல்லிகொள்கிறேன். சின்ன டாக்டருக்கு போட்டியா மறுபடியும் வந்து கலக்கப் போகிறேன்...
 
பலே பிரபு : அவருக்கே பேஸ்மென்ட் வீக்காகி கிடக்கு ம்ஹும் இவர் வேற...!!!
 
கவிதை வீதி : இனி சின்ன டாக்குட்டர் படத்துக்கு எல்லாம் என் கவிதைதான் பாட்டா வைக்கனும்னு பாட்டுரசிகன் மேல சத்தியமா சொல்லுறேன்..
 
கரன் : நாசமாபோச்சு போ, என் கம்பியூட்டர் சென்டர்லதான் சூட்டிங்க நடத்தனும்...
 
கேப்டன் : ஏய் ச்சு சும்மா இருங்கய்யா, அடுத்த ஆட்சியே எனது தலைமையில்தான் அமைய போகுது, அம்மா என்னை சும்மா விட்டாலும் நான் சும்மா இருக்கமாட்டேன், ஏய் நான் மதுரைக்காரன், என் ஊர்ல இருந்துட்டே எனக்கெதிரா பதிவு போடுறான், பிரகாஷ்னு ஒருத்தன், அவனை கொஞ்சம் அடையாளம் காட்டிட்டீங்கன்னா நான் இனிமே இங்கிலீஷ் பேசமாட்டேன்....
 
பிரகாஷ் : நான் இல்லை நான் இல்லை, நான் ஒரு பதிவரே இல்லை, சும்மா லுலாயிலாளுக்காக  வந்தேன் என கிடு கிடுன்னு ஆட...
 
மருதமூரான் : ‘நந்தா’ இயக்குனர் பாலா இயக்கிய படங்களில் எனக்கு பிடித்தமான படம். அதுபோல, ‘ அவன்- இவன்’ அவர் மீது எனக்கு அதிகம் எரிச்சலையூட்டிய படம். 
 
செல்வா : அண்ணே அண்ணே 108 வந்தாச்சு......
 
பன்னிகுட்டி : டேய் ஆம்புலன்ஸ் வாயா, ஏற்கனவே இவனுக பேதி பீதி ஏத்திட்டு இருக்கானுக, நீ வேற பீதி ஏத்துரியா படுவா பிச்சிபுடுவேன்...
 
கே ஆர் விஜயன் : ஒரு பதிவர் சந்திப்பையும் மிஸ் பண்ணக்கூடாதுன்னு மனசுல வைராக்கியமா இருக்கேன், ஆனால் நடக்குற சந்திப்பை பார்த்தால், போனதடவை கமல் சந்திப்பு மாதிரி, நெல்லை பஸ்டாண்டுக்கு நான்ஸ்டாப்பா ஓடவேண்டி வருமோன்னு பயமா இருக்குங்க...
 
எம் ஆர் : நான் இருக்கேன் எதுக்கும் கவலைப்படாதீங்க, அப்பிடி ஓடும்போது நாய் கடிச்சி வச்சிடுச்சின்னா பூவுல இருந்து மருந்து எடுத்து அரைச்சி தாரேன் பற்று போட்டு விட்ருங்க...
 
என் ராஜபாட்டை : ஏய் நான் தனி ஆளு இல்லை 100000 ஆயிரம் ஹிட்ஸ் வாங்கியிருக்கேன் வாங்கி இருக்கேன், ஆபீசர் பெல்ட்டை உதறி காண்பிக்கிறார் ராஜா பம்முகிறார்....
 
கேப்டன் : ஏய் ஏய் ஏய் நானும் தனி ஆளு இல்லை, நெப்போலியன், மானிட்டர், ஆபீசர்சொய்ஸ், ஒல்டுமெங் இப்பிடின்னு நிறைய பேர் எனக்கு பின்னாடி இருக்காங்க....
 
தொடரும்..... 

84 comments:

  1. வணக்கம் பாஸ்..

    படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  2. captain kitta nammala kaatti kudutharaathinga makka. ungalukku punniyama pogum.

    ReplyDelete
  3. பிரபல நடிகர்களுடன், பிரபல பதிவர்கள் சந்திப்பு நடக்கப்போகுது எருமைநாயக்கன் பட்டியில......
    //


    ஆமா சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்களுக்கும், எருமைகளுக்கும் நெறையத் தொடர்பிருக்குமோ?

    ReplyDelete
  4. //
    "பதிவை திறங்கள் நெட் வரட்டும்'//

    நல்ல யோசிகிரிங்க ...

    ReplyDelete
  5. makka kitta maattikittu namma bloggers padura avasthai konjam nanjam illlai.

    ReplyDelete
  6. ஆபீசர் : போன கமல் சந்திப்புக்கு என்னை கூப்பிடாமல், இந்த சந்திப்புக்கு அழைத்தமைக்கு நன்றி எனக் கூறி, பெல்ட்டை உருவி டேபிளில் வைக்குறார்...
    //

    ஏனுங்க அண்ணாச்சி,

    ஆப்பிசரோட பெல்ட் செம வெயிட்டா இருக்குதா?

    ReplyDelete
  7. செல்வா : அண்ணே அந்த கில்மா படத்துக்கு நம்ம நிரூபன் செம போருத்தம்னே.....//

    கொய்யாலே....

    என்னையை வைச்சு ஒரு கில்மா படமா..

    வெளங்கிரூம்.

    ReplyDelete
  8. //
    என் ராஜபாட்டை : ஏய் நான் தனி ஆளு இல்லை 100000 ஆயிரம் ஹிட்ஸ் வாங்கியிருக்கேன் வாங்கி இருக்கேன், ஆபீசர் பெல்ட்டை உதறி காண்பிக்கிறார் ராஜா பம்முகிறார்....
    //

    அய்யோ .. அடிக்காதிங்க

    ReplyDelete
  9. துஷ்யந்தன் : "பதிவை திறங்கள் நெட் வரட்டும்'ன்னு தலைப்பு வையுங்கள்....//

    நல்ல வேளை கதவைத் திறவுங்கள் காத்து வரட்டும் என்று வைக்கலையேஏஏஏஏஏஏஏஏஎ

    ReplyDelete
  10. தமிழ்வாசி : டேய் நாதாரிகளா ஒழுங்கா ஒரு நல்ல படம் நடிங்கடா, நேரே அஞ்சா'சிங்கம்கிட்டே போட்டு குடுத்துருவேன்...
    //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    சைட் கப்பில பிரகாஷ் அருவாளைத் தூக்கிட்டாரா........................

    ReplyDelete
  11. makka pirapala pathivarkal pirapala nadigaikaludan santhippu eppo poda poringa.

    ReplyDelete
  12. கவிதை வீதி : இனி சின்ன டாக்குட்டர் படத்துக்கு எல்லாம் என் கவிதைதான் பாட்டா வைக்கனும்னு பாட்டுரசிகன் மேல சத்தியமா சொல்லுறேன்..//

    ஹே...ஹே...இது செம கலாய்ப்பு............

    ReplyDelete
  13. என்னப்பா இன்றைக்கு எல்லா இடத்திலயும் விஜயை வாரியிருக்கிறீங்க... எங்க போனாலும் விஜய்தான்.

    ReplyDelete
  14. செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.

    அதுவும் ஒவ்வோர் பதிவர்களின் ரசனையினையும் புரிந்து கொண்டு நீங்கள் அவர்கள் பாணியில் காமெடி பண்ணியிருப்பது இன்னும் ஜோரா இருக்கு.........

    கீழ் பந்திகளில் எழுத்துச் சின்னதாகி விட்டது..
    கொஞ்சம் சேஞ் பண்ணுங்க.

    ReplyDelete
  15. பரவாயில்லை.. நீங்க எல்லோரையும் மொத்தமா வரியிருக்கிறீங்க

    ReplyDelete
  16. உள்ளேன் ஐயா!

    செம நக்கல்ஸ்!

    ReplyDelete
  17. //அண்ணே அந்த கில்மா படத்துக்கு நம்ம நிரூபன் செம போருத்தம்னே..//

    ஹி ஹி நிரூபன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்

    ReplyDelete
  18. தமிழ்வாசி - Prakash said...
    captain kitta nammala kaatti kudutharaathinga makka. ungalukku punniyama pogum.//


    கேப்டன் இருக்கட்டும், என் மச்சினன் அல்லவா உம்மை வெறியா தேடிட்டு இருக்கான்...

    ReplyDelete
  19. நிரூபன் said...
    பிரபல நடிகர்களுடன், பிரபல பதிவர்கள் சந்திப்பு நடக்கப்போகுது எருமைநாயக்கன் பட்டியில......
    //


    ஆமா சந்திப்பில கலந்து கொள்ளும் பதிவர்களுக்கும், எருமைகளுக்கும் நெறையத் தொடர்பிருக்குமோ?//

    ஐ இந்த ஆங்கிளும் நல்லா இருக்கே....

    ReplyDelete
  20. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    "பதிவை திறங்கள் நெட் வரட்டும்'//

    நல்ல யோசிகிரிங்க ...//


    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  21. தமிழ்வாசி - Prakash said...
    makka kitta maattikittu namma bloggers padura avasthai konjam nanjam illlai.//

    உங்ககிட்டே நான் படுற அவஸ்த்தையை என்னான்னு சொல்றது ஹி ஹி...

    ReplyDelete
  22. நிரூபன் said...
    ஆபீசர் : போன கமல் சந்திப்புக்கு என்னை கூப்பிடாமல், இந்த சந்திப்புக்கு அழைத்தமைக்கு நன்றி எனக் கூறி, பெல்ட்டை உருவி டேபிளில் வைக்குறார்...
    //

    ஏனுங்க அண்ணாச்சி,

    ஆப்பிசரோட பெல்ட் செம வெயிட்டா இருக்குதா?//



    ஏன் அடிவாங்கனும்னு ஆசையா இருக்கா??? நெல்லைபக்கம் போங்கோ...

    ReplyDelete
  23. நிரூபன் said...
    செல்வா : அண்ணே அந்த கில்மா படத்துக்கு நம்ம நிரூபன் செம போருத்தம்னே.....//

    கொய்யாலே....

    என்னையை வைச்சு ஒரு கில்மா படமா..

    வெளங்கிரூம்.//


    அதுக்கு நீர் சரிப்பட மாட்டேர்னு சொல்லிட்டாயிங்க ஹி ஹி...

    ReplyDelete
  24. என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    என் ராஜபாட்டை : ஏய் நான் தனி ஆளு இல்லை 100000 ஆயிரம் ஹிட்ஸ் வாங்கியிருக்கேன் வாங்கி இருக்கேன், ஆபீசர் பெல்ட்டை உதறி காண்பிக்கிறார் ராஜா பம்முகிறார்....
    //

    அய்யோ .. அடிக்காதிங்க//


    பிச்சிபுடுவேன் பிச்சி ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  25. நிரூபன் said...
    துஷ்யந்தன் : "பதிவை திறங்கள் நெட் வரட்டும்'ன்னு தலைப்பு வையுங்கள்....//

    நல்ல வேளை கதவைத் திறவுங்கள் காத்து வரட்டும் என்று வைக்கலையேஏஏஏஏஏஏஏஏஎ//

    இந்த கமண்ட்சை சிவாஜி ஸ்டைல்ல படிச்சா இன்னும் ஜோரா இருக்கு...

    ReplyDelete
  26. நிரூபன் said...
    தமிழ்வாசி : டேய் நாதாரிகளா ஒழுங்கா ஒரு நல்ல படம் நடிங்கடா, நேரே அஞ்சா'சிங்கம்கிட்டே போட்டு குடுத்துருவேன்...
    //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    சைட் கப்பில பிரகாஷ் அருவாளைத் தூக்கிட்டாரா........................//
    அருவாளை தூக்குறாரா, கேப்டன்கிட்டே அடிவாங்கப் போறார்...

    ReplyDelete
  27. தமிழ்வாசி - Prakash said...
    makka pirapala pathivarkal pirapala nadigaikaludan santhippu eppo poda poringa.//


    ஒரு நடிகையை பற்றி போட்டதுக்கே ஆட்டோ அனுப்பினானுக, நடிகைகளா அவ்வவ்வ்வ்வ்...

    ReplyDelete
  28. நிரூபன் said...
    கவிதை வீதி : இனி சின்ன டாக்குட்டர் படத்துக்கு எல்லாம் என் கவிதைதான் பாட்டா வைக்கனும்னு பாட்டுரசிகன் மேல சத்தியமா சொல்லுறேன்..//

    ஹே...ஹே...இது செம கலாய்ப்பு..........//

    ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  29. கலக்கல் பதிவு ...
    எங்களக்கு ஏன் அழைப்பு
    அனுப்ப வில்லை .
    வெளிநடப்பு
    செய்ய போகிறோம் !

    ReplyDelete
  30. கலக்கல் பதிவு ...
    எங்களக்கு ஏன் அழைப்பு
    அனுப்ப வில்லை .
    வெளிநடப்பு
    செய்ய போகிறோம் !

    ReplyDelete
  31. மதுரன் said...
    என்னப்பா இன்றைக்கு எல்லா இடத்திலயும் விஜயை வாரியிருக்கிறீங்க... எங்க போனாலும் விஜய்தான்.//


    நல்லா தாங்குறார்ய்யா....

    ReplyDelete
  32. நிரூபன் said...
    செமையாக கலாய்ச்சிருக்கிறீங்க.

    அதுவும் ஒவ்வோர் பதிவர்களின் ரசனையினையும் புரிந்து கொண்டு நீங்கள் அவர்கள் பாணியில் காமெடி பண்ணியிருப்பது இன்னும் ஜோரா இருக்கு.........

    கீழ் பந்திகளில் எழுத்துச் சின்னதாகி விட்டது..
    கொஞ்சம் சேஞ் பண்ணுங்க.//

    ஹி ஹி நன்றி...

    ReplyDelete
  33. மதுரன் said...
    பரவாயில்லை.. நீங்க எல்லோரையும் மொத்தமா வரியிருக்கிறீங்க//


    எனக்கு கிடச்ச நண்பனுங்க ரொம்ப நல்லவிங்க...

    ReplyDelete
  34. தமிழ் வாசிக்கு என்னாச்சு! ஒரே இங்கிலீசா கதைக்குது

    ReplyDelete
  35. வெளங்காதவன் said...
    உள்ளேன் ஐயா!

    செம நக்கல்ஸ்!//


    வாங்கோ அய்யா....

    ReplyDelete
  36. மதுரன் said...
    //அண்ணே அந்த கில்மா படத்துக்கு நம்ம நிரூபன் செம போருத்தம்னே..//

    ஹி ஹி நிரூபன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்//


    அதை அவரே ஒப்புகிட்டாரே....

    ReplyDelete
  37. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ரைட்டு.//


    ரைரைட்டுங்கோ...

    ReplyDelete
  38. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    கலக்கல் பதிவு ...
    எங்களக்கு ஏன் அழைப்பு
    அனுப்ப வில்லை .
    வெளிநடப்பு
    செய்ய போகிறோம் !//


    ஹி ஹி கீழே தொடரும்னு போட்ருக்கே படிக்கலையா...

    ReplyDelete
  39. KANA VARO said...
    கலக்கல் மனோ!

    September 20, 2011 4:45 AM


    KANA VARO said...
    தமிழ் வாசிக்கு என்னாச்சு! ஒரே இங்கிலீசா கதைக்குது//

    அது மொபைல்ல விளையாடிட்டு இருக்கு....

    ReplyDelete
  40. ஹா ஹா ஹா

    நக்கல்ஸ் அருமை...

    ReplyDelete
  41. செம கலகலப்பு + கலாய்ப்பு + காமெடி

    ReplyDelete
  42. என்ன மக்கா எங்க உயிரின் உயிர். ரத்தத்தின் ரத்தம். தன்மானசிங்கம் . எங்கள் பவர் ஸ்டார் டாக்குடர் சீனிவாசன் வரலையா ?
    அப்புறம் அது என்ன பிரபல நடிகர் சந்திப்பு எங்க பவரை விட யாருயா பெரிய பிரபலம் ....
    அண்ணே பன்னிகுட்டி அண்ணே இந்த அநியாயத்தை வந்து என்னன்னு கேளுங்க அண்ணே..........

    ReplyDelete
  43. நல்ல கற்பனை!!!!

    WELLDONE....KEEP IT UP

    ReplyDelete
  44. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஹா ஹா ஹா

    நக்கல்ஸ் அருமை...//

    ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  45. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    செம கலகலப்பு + கலாய்ப்பு + காமெடி//

    ஹி ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  46. அஞ்சா சிங்கம் said...
    என்ன மக்கா எங்க உயிரின் உயிர். ரத்தத்தின் ரத்தம். தன்மானசிங்கம் . எங்கள் பவர் ஸ்டார் டாக்குடர் சீனிவாசன் வரலையா ?
    அப்புறம் அது என்ன பிரபல நடிகர் சந்திப்பு எங்க பவரை விட யாருயா பெரிய பிரபலம் ....
    அண்ணே பன்னிகுட்டி அண்ணே இந்த அநியாயத்தை வந்து என்னன்னு கேளுங்க அண்ணே..........//


    உங்களை மாதிரி பொடிப்பயங்க சந்திப்புக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டார். அவர் அம்புட்டு பெரிய ஆளாம்....

    ReplyDelete
  47. NAAI-NAKKS said...
    நல்ல கற்பனை!!!!

    WELLDONE....KEEP IT UP//


    தேங்க்யூ தேங்க்யூ...

    ReplyDelete
  48. கலக்கல் நண்பரே அருமை படிக்க
    t.m 12

    ReplyDelete
  49. விக்கியுலகம் said...
    ஹி ஹி !//


    மாட்னான் விக்கி...

    ReplyDelete
  50. M.R said...
    கலக்கல் நண்பரே அருமை படிக்க
    t.m 12//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  51. பெரிய விசில் சார் உங்களுக்கு

    ReplyDelete
  52. சூப்பர்..கும்மி..சிரிச்சு..சிரிச்சு.முடியல
    பாஸ்...

    இன்னைக்கு நானும்..டாகுத்தருக்குக்கும் நம்ம பதிவர்களுக்கும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்...நேரம் இருந்தால் வந்து பாருங்க பாஸ்

    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்

    ReplyDelete
  53. அரசன் said...
    பெரிய விசில் சார் உங்களுக்கு//


    உய்ய்ய்யி உய்ய்ய்யி.....

    ReplyDelete
  54. K.s.s.Rajh said...
    சூப்பர்..கும்மி..சிரிச்சு..சிரிச்சு.முடியல
    பாஸ்...

    இன்னைக்கு நானும்..டாகுத்தருக்குக்கும் நம்ம பதிவர்களுக்கும் ஒரு பதிவு போட்டு இருக்கேன்...நேரம் இருந்தால் வந்து பாருங்க பாஸ்

    அன்புடன்
    கே.எஸ்.எஸ்.ராஜ்//

    இதோ வாரேன்...

    ReplyDelete
  55. suryajeeva said...
    அது சரி//


    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  56. விஜய்க்கு பாட்டுக்கு என் கவிதையா...
    எதுக்கு என்னையும் கலாய்க்கிறதுக்கா...

    ReplyDelete
  57. // கேப்டன் : ஏய் நான் மதுரைக்காரன், என் ஊர்ல இருந்துட்டே எனக்கெதிரா பதிவு போடுறான், பிரகாஷ்னு ஒருத்தன், அவனை கொஞ்சம் அடையாளம் காட்டிட்டீங்கன்னா...//

    காட்டினா, எங்க பிரகாஷ் மேலயே கை வச்சிடுவாங்களா? வச்சா மதுரையே திரும்ப பத்திக்கிட்டு எரியும், தெரியும்ல?

    ReplyDelete
  58. கவிதை வீதி # சௌந்தர் said...
    ஏதோ உங்களால முடிஞ்சது...//

    ஹி ஹி விடும்யா விடுமய்யா....

    ReplyDelete
  59. கவிதை வீதி # சௌந்தர் said...
    விஜய்க்கு பாட்டுக்கு என் கவிதையா...
    எதுக்கு என்னையும் கலாய்க்கிறதுக்கா...//


    ஹா ஹா ஹா ஹா எஸ் எஸ் பன்னிகுட்டி காத்துட்டு இருக்கார்....

    ReplyDelete
  60. middleclassmadhavi said...
    :-)))))//

    நல்லா வாய்விட்டு சிரிங்க....

    ReplyDelete
  61. செங்கோவி said...
    // கேப்டன் : ஏய் நான் மதுரைக்காரன், என் ஊர்ல இருந்துட்டே எனக்கெதிரா பதிவு போடுறான், பிரகாஷ்னு ஒருத்தன், அவனை கொஞ்சம் அடையாளம் காட்டிட்டீங்கன்னா...//

    காட்டினா, எங்க பிரகாஷ் மேலயே கை வச்சிடுவாங்களா? வச்சா மதுரையே திரும்ப பத்திக்கிட்டு எரியும், தெரியும்ல?//


    மதுரை பத்திகிட்டு எரிஞ்சா அஞ்சாநெஞ்சன் எங்கே போவாரு ஹி ஹி...

    ReplyDelete
  62. பன்னிகுட்டி ராமசாமி அண்ணன கலாய்கிரீங்களா இல்ல சின்ன டாகுட்டர கலாய்கிரீங்களா? ஒன்னுமே புரியல போங்க!!

    ReplyDelete
  63. //கேப்டன் : , ஏய் நான் மதுரைக்காரன், //
    அண்ணே இதுக்கப்புறம் நம்ம சந்தானம் சார போட்டு இரு டயலாக் சொல்ல வச்சி இருக்கலாம் அது எப்புடின்னா....

    சந்தானம்: அப்ப நாங்க எல்லாம் என்னா மலேசியாகாரனாடா ?? நாங்களும் மதுரகாரன்தான்டா!! ஏன் நீ ஆன்னா ஊன்னா மதுரகாரன்னு பில்ட்அப்பு கொடுக்கற?

    ReplyDelete
  64. மொக்க ராசு மாமா said...
    பன்னிகுட்டி ராமசாமி அண்ணன கலாய்கிரீங்களா இல்ல சின்ன டாகுட்டர கலாய்கிரீங்களா? ஒன்னுமே புரியல போங்க!!//


    ஹா ஹா ஹா ஹா என்னாது ஒன்னுமே புரியலையா அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  65. மொக்க ராசு மாமா said...
    //கேப்டன் : , ஏய் நான் மதுரைக்காரன், //
    அண்ணே இதுக்கப்புறம் நம்ம சந்தானம் சார போட்டு இரு டயலாக் சொல்ல வச்சி இருக்கலாம் அது எப்புடின்னா....

    சந்தானம்: அப்ப நாங்க எல்லாம் என்னா மலேசியாகாரனாடா ?? நாங்களும் மதுரகாரன்தான்டா!! ஏன் நீ ஆன்னா ஊன்னா மதுரகாரன்னு பில்ட்அப்பு கொடுக்கற?//

    அடடா இது அசத்தலா இருக்கே மக்கா..!!!

    ReplyDelete
  66. அண்ணன் மொராக்கோ மேட்டர போட்டாத்தான் அடங்குவாரு போல ஹிஹி!

    ReplyDelete
  67. விக்கியுலகம் said...
    அண்ணன் மொராக்கோ மேட்டர போட்டாத்தான் அடங்குவாரு போல ஹிஹி!//


    மொரோக்கோ மேட்டரை சுஜாதா எப்பவோ எங்களுக்கு சொல்லிட்டாரே....

    ReplyDelete
  68. உங்கள்..நல்ல நகைச்சுவை உணர்வு சார் .. அருமை

    ReplyDelete
  69. அடடா, உண்மையிலயே பெல்ட உருவாம மனோ அடங்க மாட்டார்போல இருக்கே! ஹா ஹா ஹா.அத்தனையும் அட்டகாச கலக்கல்.

    ReplyDelete
  70. ஆமா, இன்னும் நீங்க அந்த சுவாமி திவானந்தாவை மறக்கலியா?

    ReplyDelete
  71. நைட் ஷிப் போயிட்டு வர்றதுக்குள்ள இத்தனை கூத்து நடந்துருக்கா..அய்யா சாமி..நான் விஜய் ரசிகனுங்கோ. அதனால மனோ சொல்ற வதந்திய நம்பாதீங்கோ!!

    ReplyDelete
  72. >>கேப்டன் : டேய் என்ன உள்ளே ஒரே இருட்டா இருக்கு...???

    ராமராஜன் : யோவ் முதல்ல கூலிங் கிளாசை கழட்டிட்டு பாருய்யா...காலையிலேயே ஊத்தியாச்சா..??

    hi hi ஹி தம்பி மனோ தன்னைத்தானே கலாய்ச்சுக்கறரு ஹய்யோ அய்யோ

    ReplyDelete
  73. செம கலாய்ப்பு மனோ சார்..


    //தொடரும்//


    எப்ப அடுத்த பதிவு???

    ReplyDelete
  74. "பதிவை திறங்கள் நெட் வரட்டும்'ன்னு தலைப்பு வையுங்கள்..../

    அட்டகாச கலக்கல் தலைப்பு.

    ReplyDelete
  75. எப்படி இப்படி ஒரு தீடீர் சந்திப்பு,

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!