Thursday, December 29, 2011

சில ஆச்சர்யங்களும் முரண்பாடுகளும்.....!!!

௧ : நரைச்ச முடியையும், வளரும் நகங்களையும் நறுக்காமல் இருக்க இயலாது...!!!



௨ : நான்கு பேருக்கு நல்லதுன்னா அருவாள் எடுக்கலாம்னே தோணுது [[ம்ம்ம்ம் மும்பை எப்பெக்ட்டு]]

௩ : முகத்தில் பூசும் பவுடர் காதுக்கும் கொஞ்சம் ஈயப்படும்...!!!


௪ : தண்ணி அடிக்கிறவன் தண்ணியில சாவான்...!!![[அளவா குடிச்சிட்டு நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க யாரையும் டிஸ்டப் பண்ணாமல்]]


௫ : கழுதைக்கு குதிரை வாலை வச்சாலும், கழுதை கழுதைதான்...!!!


௬ : கன்யாகுமரில பி ஏ படிச்சுட்டு டீ கடை நடத்தும் நண்பன், அதே பி ஏ மும்பையில படிச்சுட்டு பஹ்ரைனில் ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு கசின் [[அசின் அல்ல]]


௭ : லோகோ'வில் எனக்கு கருப்பு கலர் இருந்தால்தான் கண்ணுக்கு தெரிகிறது, அதே கணினியில் வெள்ளை கலர் இருந்தால்தான் என் நண்பனுக்கு தெரிகிறது...!!!


௮ : முல்லைப்பெரியார் பற்றி மௌனமாக இருக்கும் திரையில் வீரம் பேசும் நடிகர்கள்...!!!


௯ : பஹ்ரைனில் கலவரத்தின் போது, கண்ணீர் புகைக்குண்டு வெடிக்க தெரு நாயுடன் சேர்ந்து ஓடிய நண்பன்...!!! [[நாயா இருந்தாலும் மனுஷனுமா இருந்தாலும் உயிர் ஒன்றுதான் இல்லையா]]


௰ : பசிக்கிறது என்று சொன்னதும் உடனே சாப்பிட கூட்டிப்போகும் நண்பன்...!!!


௧௧ : காய்கறிகளையும் அசைவத்தையும் சரி சமமாக சாப்பிடும் பங்களாதேசிகள்...!!!


௧௨ : நெய்யாறு அணை விரிசலை கண்டுக்காத கேரளாவும் தமிழகமும்...!!!


௧௩ : அழிந்து வரும் வயல்வெளிகள்....!!!


௧௪ : போராடி கூட்டம் சேர்க்கும் அண்ணன் வைகோ, அவைகளை ஓட்டாக மாற்ற தெரியாத சூட்சுமம்...!!!


௧௫ : பதிவுலகிலும் அரசியல்....!!!


௧௬ : அணு உலை விபத்தை, விமான விபத்தை சுட்டி காட்டி வியாக்கியானம் பேசும் நல்லவர்கள்...!!! அதாவது மெத்த படித்த மேதாவிகள் [[அப்துல்கலாம் அல்லன்னு நான் சொன்னால் நம்பனும்]]


௧௭ : கமலின் மருதநாயகம்...!!!


௧௮ : ரஜினியின் அண்ணா ஹசாரே ஆதரவு....!!! [[இதை ஆரம்பத்துலே செய்து இருந்தால் உங்களை மக்கள் தலையில் வச்சி கொண்டாடி இருப்பாங்களேய்யா ஸோ ஸாரி டூ லேட்]]


௧௯ : அம்மா, சின்னம்மா பிரிவு...!!! [[சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் நம்பமாட்டேன்]]


௨௦ : ஈராக்கில் இருந்து ஓட்டு மொத்த ராணுவமும் திரும்ப பெறப்பட்டது - அமெரிக்கா [[ஈராக்கில் அமெரிக்கன் தூதரகத்தில் ஐம்பதாயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் - ஈராக் நண்பன் சொன்ன தகவல்]]


டிஸ்கி : முல்லைப்பெரியாருக்காக நடிகர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை என்று உணர்ச்சி வசப்பட்டு கோபபட்டு பொங்குறவிங்க எல்லாம் கீழே உள்ள லிங்க் போயி பார்த்து நெஞ்சை பிடிச்சுக்கொங்க....


78 comments:

  1. வணக்கம் அண்ணே,
    நல்லா இருக்கிறீங்களா?

    ஆச்சரியங்கள் எனும் பெயரில் சில தத்துவங்களையும் அல்லவா அள்ளி வீசியிருக்கிறீங்க.

    ஹே....ஹே...

    ReplyDelete
  2. லோகோ'வில் எனக்கு கருப்பு கலர் இருந்தால்தான் கண்ணுக்கு தெரிகிறது, அதே கணினியில் வெள்ளை கலர் இருந்தால்தான் என் நண்பனுக்கு தெரிகிறது...!!//

    அண்ணே, இது பேய் செய்யும் மாயம் என நினைக்கிறேன்.

    ஹே.....ஹே..

    ReplyDelete
  3. அண்ணே உடான்ஸ் மட்டும் தான் ஒர்க் பண்ணுது, இன்ட்லி, தமிழ்10 மக்கர் பண்ணுது, நைட் வந்து ஓட்டு குத்துறேன்.

    ReplyDelete
  4. தம்பி, லேப் டாப் மனோ, நியூ இயர்ல இருந்தாவது என்னை வம்புக்கு இழுக்காமல் போஸ்ட் போடவும் ஹி ஹி

    ReplyDelete
  5. அண்ணே அளவா குடிக்கரதுன்னா என்னனே...ஸ்கேல் மூலம் அளக்கனுமா இல்ல முழம் போட்டு அளக்கனுமா ஹிஹி!

    ReplyDelete
  6. எலேய் நேத்து நான் போட்ட கிச்சிளிக்காஸ்ல இருந்த விஷயம்..ஹிஹி...ஏன்டா அந்த லிங்க் கொடுத்தா ஒரு அடி குறைஞ்ஜிடிவியா!

    ReplyDelete
  7. முரண்களின் மூட்டை நாம்ன்னு சொல்லாம சொல்லிடீங்க அண்ணே

    ReplyDelete
  8. [[அளவா குடிச்சிட்டு நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க யாரையும் டிஸ்டப் பண்ணாமல்]]//

    மக்கா உங்க புத்தாண்டு சபதம் இது தானா? அளவா குடிக்கிறது...

    ReplyDelete
  9. //நான்கு பேருக்கு நல்லதுன்னா அருவாள் எடுக்கலாம்னே தோணுது [[ம்ம்ம்ம் மும்பை எப்பெக்ட்டு]]//

    அப்போ மூணு பேருக்கு நல்லதுனா எடுக்கமாடிங்களா அருவாள? டவுட்.......

    ReplyDelete
  10. //முகத்தில் பூசும் பவுடர் காதுக்கும் கொஞ்சம் ஈயப்படும்...!!!.///

    கழுத்துக்கும் சேர்த்து...........

    //கழுதைக்கு குதிரை வாலை வச்சாலும், கழுதை கழுதைதான்...!!!//

    கண்டுபிடிப்புண்ணே கின்னஸ் ல போட்டறலாம் .....

    ReplyDelete
  11. //முல்லைப்பெரியார் பற்றி மௌனமாக இருக்கும் திரையில் வீரம் பேசும் நடிகர்கள்...!!!.//

    ஒரு நாள் உண்ணாவிரதத்திற்கு 1 கோடி ன்னு சொல்லி பாருங்க அப்போ பேசுவாங்க............ பணத்த காட்டுனா தான் வாயவே திறப்பாணுக...

    ReplyDelete
  12. பதிவுலகிலும் அரசியல்....!!!//

    பிரபலம்னாலே அரசியல் தான்.... 1 ரூபா கூட கிடைக்காத பதிவுலகத்திலேயே அரசியல்ன்னா............. 1.76 லட்சம் கோடி கிடைக்கிற அரசியல்ல எவ்ளோ அரசியல் இருக்கும்......... யோசிக்கணும்

    ReplyDelete
  13. அம்மா சொன்ன சின்ன சின்ன வேலைகளை செய்ய மாட்டேனு சொன்ன ஆண்கள், மனைவி சொல்லும் போது மறு பேச்சு பேசாம செய்வது ஏன்? முரண்பாடு...........

    ReplyDelete
  14. /////பஹ்ரைனில் கலவரத்தின் போது, கண்ணீர் புகைக்குண்டு வெடிக்க தெரு நாயுடன் சேர்ந்து ஓடிய நண்பன்...!!! [[நாயா இருந்தாலும் மனுஷனுமா இருந்தாலும் உயிர் ஒன்றுதான் இல்லையா]]
    ///////
    நல்ல ஒரு கருத்து


    உங்களுக்கு மட்டும் எப்படி பாஸ் இப்படி தோனுது வாசித்துக்கொண்டு வரும் போது எங்க சி.பி அண்ணை கோத்துவிடலையே என்று யோசித்துக்கொண்டே வந்தேன் கடைசியில் அவர் கண்ணாடியில் சத்தியம் பண்ணிட்டிங்க ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  15. நிரூபன் said...
    வணக்கம் அண்ணே,
    நல்லா இருக்கிறீங்களா?

    ஆச்சரியங்கள் எனும் பெயரில் சில தத்துவங்களையும் அல்லவா அள்ளி வீசியிருக்கிறீங்க.

    ஹே....ஹே...//

    ஹி ஹி விடுங்க விடுங்க...

    ReplyDelete
  16. நிரூபன் said...
    லோகோ'வில் எனக்கு கருப்பு கலர் இருந்தால்தான் கண்ணுக்கு தெரிகிறது, அதே கணினியில் வெள்ளை கலர் இருந்தால்தான் என் நண்பனுக்கு தெரிகிறது...!!//

    அண்ணே, இது பேய் செய்யும் மாயம் என நினைக்கிறேன்.

    ஹே.....ஹே..//

    அடப்பாவமே இன்னுமா அது இங்கே இருக்குது...?

    ReplyDelete
  17. நிரூபன் said...
    அண்ணே உடான்ஸ் மட்டும் தான் ஒர்க் பண்ணுது, இன்ட்லி, தமிழ்10 மக்கர் பண்ணுது, நைட் வந்து ஓட்டு குத்துறேன்.//

    ஓட்டா மக்கா முக்கியம் அன்புதான் முக்கியம்...

    ReplyDelete
  18. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, லேப் டாப் மனோ, நியூ இயர்ல இருந்தாவது என்னை வம்புக்கு இழுக்காமல் போஸ்ட் போடவும் ஹி ஹி//

    ஏண்டா நீ இப்போ கெஞ்சுரியா இல்லை மிரட்டுரியான்னு முதல்ல சொல்லுடா ராஸ்கல்...

    ReplyDelete
  19. விக்கியுலகம் said...
    அண்ணே அளவா குடிக்கரதுன்னா என்னனே...ஸ்கேல் மூலம் அளக்கனுமா இல்ல முழம் போட்டு அளக்கனுமா ஹிஹி!//

    விடுய்யா விடுய்யா உனக்கு தெரியாத பீப்பாய் அளவுகளா...???

    ReplyDelete
  20. விக்கியுலகம் said...
    எலேய் நேத்து நான் போட்ட கிச்சிளிக்காஸ்ல இருந்த விஷயம்..ஹிஹி...ஏன்டா அந்த லிங்க் கொடுத்தா ஒரு அடி குறைஞ்ஜிடிவியா!//

    அட மூதேவி மூதேவி, பதிவு போடும் முன்பே உனக்கு சாட் பண்ணி லிங்க் கேட்டேனே ராஸ்கல் நீ ஆன்சரே பண்ணலை அதான் ஒரிஜினல் [[?]] லிங்க் குடுத்தேன்.

    ReplyDelete
  21. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    முரண்களின் மூட்டை நாம்ன்னு சொல்லாம சொல்லிடீங்க அண்ணே//

    ஹா ஹா ஹா ஹா அதே அதே....

    ReplyDelete
  22. FOOD NELLAI said...
    பல பகிர்வுகள் ஆச்சரியாமாத்தான் இருக்கு.//

    நன்றி ஆபீசர்....[[அப்பாடா பெல்ட் கையில் இல்லை]]

    ReplyDelete
  23. FOOD NELLAI said...
    // சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, லேப் டாப் மனோ, நியூ இயர்ல இருந்தாவது என்னை வம்புக்கு இழுக்காமல் போஸ்ட் போடவும் ஹி ஹி//


    இதுதான் சம்மன் இல்லாமல் ஆஜராவதோ!//

    இல்லை ஆபீசர் இவன் சரியான உள்குத்து வச்சிருக்கான், மிரட்டுரானா, கெஞ்சுரானா'னுதான் தெரியலை...

    ReplyDelete
  24. தமிழ்வாசி பிரகாஷ் said...
    [[அளவா குடிச்சிட்டு நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க யாரையும் டிஸ்டப் பண்ணாமல்]]//

    மக்கா உங்க புத்தாண்டு சபதம் இது தானா? அளவா குடிக்கிறது...//

    விடுய்யா விடுய்யா நாம பாக்காததா...

    ReplyDelete
  25. எனக்கு பிடித்தவை said...
    //நான்கு பேருக்கு நல்லதுன்னா அருவாள் எடுக்கலாம்னே தோணுது [[ம்ம்ம்ம் மும்பை எப்பெக்ட்டு]]//

    அப்போ மூணு பேருக்கு நல்லதுனா எடுக்கமாடிங்களா அருவாள? டவுட்.......//

    ஆஹா தேன்மொழி தங்கச்சி, அண்ணனை சிறைகம்பிக்குள் தள்ளலாம்னு முடிவே பண்ணியாச்சாம்மா....

    ReplyDelete
  26. எனக்கு பிடித்தவை said...
    //முகத்தில் பூசும் பவுடர் காதுக்கும் கொஞ்சம் ஈயப்படும்...!!!.///

    கழுத்துக்கும் சேர்த்து...........

    //கழுதைக்கு குதிரை வாலை வச்சாலும், கழுதை கழுதைதான்...!!!//

    கண்டுபிடிப்புண்ணே கின்னஸ் ல போட்டறலாம் ...//

    கின்னஸ்ல அண்ணன் பேரு வந்துச்சுன்னா அம்பது லட்சம் ரூவா கிடைக்குமாம், தங்கச்சிகளுக்கு நிறைய பட்டு சேலைகள் வாங்கி தந்துருதேன்...

    ReplyDelete
  27. எனக்கு பிடித்தவை said...
    //முல்லைப்பெரியார் பற்றி மௌனமாக இருக்கும் திரையில் வீரம் பேசும் நடிகர்கள்...!!!.//

    ஒரு நாள் உண்ணாவிரதத்திற்கு 1 கோடி ன்னு சொல்லி பாருங்க அப்போ பேசுவாங்க............ பணத்த காட்டுனா தான் வாயவே திறப்பாணுக...//

    ஒரு கோடி வேண்டாம் தங்கச்சி ஒரு லட்சம் ரூவான்னாலும் வந்துருவாணுக கண்ணுல கண்ணாடியை வச்சிகிட்டு...!!!

    ReplyDelete
  28. எனக்கு பிடித்தவை said...
    பதிவுலகிலும் அரசியல்....!!!//

    பிரபலம்னாலே அரசியல் தான்.... 1 ரூபா கூட கிடைக்காத பதிவுலகத்திலேயே அரசியல்ன்னா............. 1.76 லட்சம் கோடி கிடைக்கிற அரசியல்ல எவ்ளோ அரசியல் இருக்கும்......... யோசிக்கணும்//

    ஆஹா தங்கச்சி என்னமா யோசிக்குதுப்பா....!!!

    ReplyDelete
  29. எனக்கு பிடித்தவை said...
    அம்மா சொன்ன சின்ன சின்ன வேலைகளை செய்ய மாட்டேனு சொன்ன ஆண்கள், மனைவி சொல்லும் போது மறு பேச்சு பேசாம செய்வது ஏன்? முரண்பாடு........//

    தங்கச்சி பப்ளிக் பப்ளிக், அண்ணனை இப்பிடியெல்லாம் காட்டி குடுக்கப்டாது..

    ReplyDelete
  30. K.s.s.Rajh said...
    /////பஹ்ரைனில் கலவரத்தின் போது, கண்ணீர் புகைக்குண்டு வெடிக்க தெரு நாயுடன் சேர்ந்து ஓடிய நண்பன்...!!! [[நாயா இருந்தாலும் மனுஷனுமா இருந்தாலும் உயிர் ஒன்றுதான் இல்லையா]]
    ///////
    நல்ல ஒரு கருத்து


    உங்களுக்கு மட்டும் எப்படி பாஸ் இப்படி தோனுது வாசித்துக்கொண்டு வரும் போது எங்க சி.பி அண்ணை கோத்துவிடலையே என்று யோசித்துக்கொண்டே வந்தேன் கடைசியில் அவர் கண்ணாடியில் சத்தியம் பண்ணிட்டிங்க ஹி.ஹி.ஹி.ஹி//

    அந்த நாதாரியை ஏதாவது பண்ணாமல் என் கணினி ஒர்க் ஆகமாட்டேங்குதே அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  31. siva sankar said...
    HAPPY BIRTHDAY TO NEW YEAR 2012.//

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  32. MANO நாஞ்சில் மனோ said...
    எனக்கு பிடித்தவை said...
    //முல்லைப்பெரியார் பற்றி மௌனமாக இருக்கும் திரையில் வீரம் பேசும் நடிகர்கள்...!!!.//

    ஒரு நாள் உண்ணாவிரதத்திற்கு 1 கோடி ன்னு சொல்லி பாருங்க அப்போ பேசுவாங்க............ பணத்த காட்டுனா தான் வாயவே திறப்பாணுக...//

    ஒரு கோடி வேண்டாம் தங்கச்சி ஒரு லட்சம் ரூவான்னாலும் வந்துருவாணுக கண்ணுல கண்ணாடியை வச்சிகிட்டு...!!!

    ஹா ஹா ஹா !!!!!!!!!

    ReplyDelete
  33. MANO நாஞ்சில் மனோ said...
    எனக்கு பிடித்தவை said...
    பதிவுலகிலும் அரசியல்....!!!//

    பிரபலம்னாலே அரசியல் தான்.... 1 ரூபா கூட கிடைக்காத பதிவுலகத்திலேயே அரசியல்ன்னா............. 1.76 லட்சம் கோடி கிடைக்கிற அரசியல்ல எவ்ளோ அரசியல் இருக்கும்......... யோசிக்கணும்//

    ஆஹா தங்கச்சி என்னமா யோசிக்குதுப்பா....!!!

    உங்க பதிவுகள படிச்சதட்கப்புறமும் இப்படி யோசிக்கலேன எப்பூடி??

    ReplyDelete
  34. தத்துவம்லாம் சூப்பர் அண்ணா

    ReplyDelete
  35. : நரைச்ச முடியையும், வளரும் நகங்களையும் நறுக்காமல் இருக்க இயலாது...!!!
    >>
    நரைச்ச முடியை கட் பண்ணிட்டு மீ யூத்துன்னு சொல்லிக்கிட்டு திரியவா?

    ReplyDelete
  36. நடிகர்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு பொங்க தமிழனும் வரமாட்டான்...! மலையாளியும் வரமாட்டான்...!
    அப்படியே வந்தாலும் முட்டாளாகத்தான் இருப்பான். பதிவுலக அரசியல்.....மக்கா..நமக்கு இதெல்லாம் சகஜம்....

    ReplyDelete
  37. நரைச்ச முடிய நான் நறுக்குவது இல்லை, ஏன்னா எல்லாமே நரைச்சு போச்சு

    ReplyDelete
  38. கழுதைக்கு குதிரை வால் வச்சா அது கோவேறு கழுதை

    ReplyDelete
  39. முல்லைப் பெரியாறு விஷயத்தில் நடிகர்கள் மெளனமாக இருக்கிறார்களா? விஜயகாந்தை நடிகர்கள் லிஸ்டில் இருந்து தூக்கியாச்சா?

    ReplyDelete
  40. எனக்கு பிடித்தவை said...
    MANO நாஞ்சில் மனோ said...
    எனக்கு பிடித்தவை said...
    பதிவுலகிலும் அரசியல்....!!!//

    பிரபலம்னாலே அரசியல் தான்.... 1 ரூபா கூட கிடைக்காத பதிவுலகத்திலேயே அரசியல்ன்னா............. 1.76 லட்சம் கோடி கிடைக்கிற அரசியல்ல எவ்ளோ அரசியல் இருக்கும்......... யோசிக்கணும்//

    ஆஹா தங்கச்சி என்னமா யோசிக்குதுப்பா....!!!

    உங்க பதிவுகள படிச்சதட்கப்புறமும் இப்படி யோசிக்கலேன எப்பூடி??//

    ம்ம்ம் தங்கச்சிங்க எல்லாம் டெரராதான் இருக்காங்கப்போய்....

    ReplyDelete
  41. ராஜி said...
    தத்துவம்லாம் சூப்பர் அண்ணா//

    நன்றிம்மா மதி....

    ReplyDelete
  42. ராஜி said...
    : நரைச்ச முடியையும், வளரும் நகங்களையும் நறுக்காமல் இருக்க இயலாது...!!!
    >>
    நரைச்ச முடியை கட் பண்ணிட்டு மீ யூத்துன்னு சொல்லிக்கிட்டு திரியவா?//

    ஹா ஹா ஹா ஹா ஆஹா அண்ணனை காட்டி குடுக்குதே தங்கச்சி...

    ReplyDelete
  43. veedu said...
    நடிகர்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு பொங்க தமிழனும் வரமாட்டான்...! மலையாளியும் வரமாட்டான்...!
    அப்படியே வந்தாலும் முட்டாளாகத்தான் இருப்பான். பதிவுலக அரசியல்.....மக்கா..நமக்கு இதெல்லாம் சகஜம்....//

    பாசக்கார பயலுக...

    ReplyDelete
  44. uryajeeva said...
    நரைச்ச முடிய நான் நறுக்குவது இல்லை, ஏன்னா எல்லாமே நரைச்சு போச்சு//

    அடப்பாவமே எல்லாம் நரைச்சி போச்சா அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  45. suryajeeva said...
    கழுதைக்கு குதிரை வால் வச்சா அது கோவேறு கழுதை//

    அய் இது புதுசா இருக்கே...!

    ReplyDelete
  46. suryajeeva said...
    முல்லைப் பெரியாறு விஷயத்தில் நடிகர்கள் மெளனமாக இருக்கிறார்களா? விஜயகாந்தை நடிகர்கள் லிஸ்டில் இருந்து தூக்கியாச்சா?//

    அதான் அவர் பக்கா அரசியல்வியாதி ஆகிட்டாரே....

    ReplyDelete
  47. ////கழுதைக்கு குதிரை வாலை வச்சாலும், கழுதை கழுதைதான்...///

    ஹா ஹா ஹா ஹா

    முரண்பாட்டு மூட்டைகள்
    நினைச்சு பார்த்தா எல்லாம் சரிதான்னு தோணுது மக்களே...

    ReplyDelete
  48. மகேந்திரன் said...
    ////கழுதைக்கு குதிரை வாலை வச்சாலும், கழுதை கழுதைதான்...///

    ஹா ஹா ஹா ஹா

    முரண்பாட்டு மூட்டைகள்
    நினைச்சு பார்த்தா எல்லாம் சரிதான்னு தோணுது மக்களே...//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  49. அசத்திட்டீங்க மனோ.தத்துவங்கள் தத்துவங்களோ தத்துவங்கள்.அது சரி நகத்தை வெட்டணும்.ஏன் நரை முடியை வெட்டணும்.டை அடிச்சுக்கலாம் !

    ReplyDelete
  50. வணக்கம் மனோ அண்ணாச்சி!
    நலமா??
    ஈரடியில் வார்த்தைக் கோர்வைகளாக பலவிடயங்களையும் தந்து பதிவை சுவாரசியம் ஆக்கிவிட்டீர்கள் !
    நடிகர்கள் குரல் கொடுக்கனும் என்பது இப்போது ஒரு பரபரப்பு விடயமாகி விட்டது!
    மக்களுக்கு கேடான விடயம் எதில் தான் இவர்கள் குரல் கொடுத்தார்கள் நாமாதான் முட்டாள் ஆகின்றோம்!

    ReplyDelete
  51. முரண்பாடுகள் யோசிக்க வைத்தன. (வை.கோ.வுக்கு வர்ற கூட்டம் ஏன் ஓட்டா மாறலைன்னு நானும் யோசிச்சிருக்கேன்) ஆச்சரியங்கள் வியக்க வைத்தன. (யூத்துன்னு சொல்லிக்கறதென்ன... நாங்க எப்பவுமே யூத்துதான்னு சொல்லிடுங்க நண்பா மதி தங்கச்சி கிட்ட...)

    ReplyDelete
  52. பதிவுலகிலும் அரசியல் ஆட்டம் கானுது கொஞ்சம் வெறுப்பும் வேதனையுமாக இருக்கு சரியான நேரத்தில் இட்ட வாக்கியம் எனலாம்!

    ReplyDelete
  53. முரன்பாட்டின் மூட்டை சரியாகப் பொறுந்தும் நமக்கும் அண்ணாசி!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்!

    ReplyDelete
  54. .வைகோ மேட்டர் கொஞ்சம் கனமான உண்மை அண்ணே..விசயகாந்த நம்புற கூடம் இந்த மனுசன நம்ப மாட்டேங்குது..

    ReplyDelete
  55. கொஞ்ச நாள் வெளியூர் போயிருந்தேன் அண்ணே..நடுவுல சில பதிவுகள் மிஸ் பண்ணிட்டேன்...பொறுமையா நைட் படிக்குறேன்...

    ReplyDelete
  56. கன்யாகுமரில பி ஏ படிச்சுட்டு டீ கடை நடத்தும் நண்பன், அதே பி ஏ மும்பையில படிச்சுட்டு பஹ்ரைனில் ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு கசின் [[அசின் அல்ல]]//


    உண்மைதான் நண்பரே இந்த முரண்பட்டு உள்ளூரிலேயே இருக்கே

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  57. ஹேமா said...
    அசத்திட்டீங்க மனோ.தத்துவங்கள் தத்துவங்களோ தத்துவங்கள்.அது சரி நகத்தை வெட்டணும்.ஏன் நரை முடியை வெட்டணும்.டை அடிச்சுக்கலாம் !//

    இடையிடையே ஒவ்வொரு நரை முடி இருக்கும்போது டை அடித்தால் மொத்தமும் நரச்சிரும்னு பயம்...

    ReplyDelete
  58. தனிமரம் said...
    வணக்கம் மனோ அண்ணாச்சி!
    நலமா??
    ஈரடியில் வார்த்தைக் கோர்வைகளாக பலவிடயங்களையும் தந்து பதிவை சுவாரசியம் ஆக்கிவிட்டீர்கள் !
    நடிகர்கள் குரல் கொடுக்கனும் என்பது இப்போது ஒரு பரபரப்பு விடயமாகி விட்டது!
    மக்களுக்கு கேடான விடயம் எதில் தான் இவர்கள் குரல் கொடுத்தார்கள் நாமாதான் முட்டாள் ஆகின்றோம்!//

    சரியாகத்தான் சொன்னீர்கள் நண்பா...!!!

    ReplyDelete
  59. கணேஷ் said...
    முரண்பாடுகள் யோசிக்க வைத்தன. (வை.கோ.வுக்கு வர்ற கூட்டம் ஏன் ஓட்டா மாறலைன்னு நானும் யோசிச்சிருக்கேன்) ஆச்சரியங்கள் வியக்க வைத்தன. (யூத்துன்னு சொல்லிக்கறதென்ன... நாங்க எப்பவுமே யூத்துதான்னு சொல்லிடுங்க நண்பா மதி தங்கச்சி கிட்ட...)//

    ஹா ஹா ஹா ஹா சொல்லிருதேன்...

    ReplyDelete
  60. தனிமரம் said...
    பதிவுலகிலும் அரசியல் ஆட்டம் கானுது கொஞ்சம் வெறுப்பும் வேதனையுமாக இருக்கு சரியான நேரத்தில் இட்ட வாக்கியம் எனலாம்!//

    ம்ம்ம் கஷ்டமாத்தான் இருக்கு மக்கா...!

    ReplyDelete
  61. தனிமரம் said...
    முரன்பாட்டின் மூட்டை சரியாகப் பொறுந்தும் நமக்கும் அண்ணாசி!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்!//

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி...

    ReplyDelete
  62. மயிலன் said...
    .வைகோ மேட்டர் கொஞ்சம் கனமான உண்மை அண்ணே..விசயகாந்த நம்புற கூடம் இந்த மனுசன நம்ப மாட்டேங்குது..//

    இந்த நேரமட்டும் வைகோ பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் காங்கிரஸ் கலகலத்திருக்கும்...!!!

    ReplyDelete
  63. மயிலன் said...
    கொஞ்ச நாள் வெளியூர் போயிருந்தேன் அண்ணே..நடுவுல சில பதிவுகள் மிஸ் பண்ணிட்டேன்...பொறுமையா நைட் படிக்குறேன்...//

    நோ டென்ஷன் கூல்......

    ReplyDelete
  64. M.R said...
    கன்யாகுமரில பி ஏ படிச்சுட்டு டீ கடை நடத்தும் நண்பன், அதே பி ஏ மும்பையில படிச்சுட்டு பஹ்ரைனில் ஒன்னே முக்கால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு கசின் [[அசின் அல்ல]]//


    உண்மைதான் நண்பரே இந்த முரண்பட்டு உள்ளூரிலேயே இருக்கே

    பகிர்வுக்கு நன்றி நண்பரே//

    அவனுக்கு யாருமே பொண்ணு குடுக்கலை பாவம்....!!!

    ReplyDelete
  65. புத்தாண்டிற்கான சிந்தனைத் தொகுப்பு நன்றாக இருக்கிறது!
    இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!!

    ReplyDelete
  66. மனோ சாமிநாதன் said...
    புத்தாண்டிற்கான சிந்தனைத் தொகுப்பு நன்றாக இருக்கிறது!
    இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!!//

    உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  67. தொகுத்துள்ள ஆச்சர்யங்களும் முரண்பாடுகளும் சூப்பர்ப்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    //கின்னஸ்ல அண்ணன் பேரு வந்துச்சுன்னா அம்பது லட்சம் ரூவா கிடைக்குமாம், தங்கச்சிகளுக்கு நிறைய பட்டு சேலைகள் வாங்கி தந்துருதேன்...//

    எனக்கு பச்சை நிறத்தில் விரல் அளவு ஜரிகை பார்டர் வைத்த சேலை .
    அட்வான்ஸ் புக்கிங் அப்படியே எங்க வீட்டுக்காரருக்கும் பட்டு வேஷ்டி சட்டை .இது போதும் ..

    ReplyDelete
  68. அண்ணே என்ன சிபி அண்ணனுக்கு போட்டியா?? ஹா ஹா

    ஆனாலும் எல்லாமே சூப்பரோ சூப்பர் பாஸ்.

    ReplyDelete
  69. //அம்மா, சின்னம்மா பிரிவு...!!!//

    மக்கா நேற்று செயற்குழுவில் தாய் தெளிவா சொல்லிடுச்சி.

    ReplyDelete
  70. அடேயப்பா! ஒலகத்த இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு உன்னிப்பாவா கவனிச்சிக்கிட்டு வறீங்க.!

    வருஷக் கடைசி விருந்து பலமா இருக்குண்ணே.

    ReplyDelete
  71. // அம்மா, சின்னம்மா பிரிவு...!!! [[சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் நம்பமாட்டேன்]]

    //
    விக்கி வீடியோ மேல சத்தியமா , உங்க லப் டப் மேல சத்தியமா நம்ப மாட்டேன்

    ReplyDelete
  72. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

    இன்று :

    பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

    ReplyDelete
  73. வாயில்லாப் பூச்சியைப் போட்டு வாடி எடுக்குரீன்களே...

    புதிய ஆண்டு பொலிவோடு வரும் என்றே நம்புவோம்.
    அனைவருக்கும், பன்னிக்குட்டி அண்ணனுக்கும், டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  74. ஐயா மன்னிக்கணும்..
    முந்தின பின்னூட்டம் பன்னிக்குட்டி அண்ணனுக்கு எழுதியது..
    காப்பி பேஸ்ட்ல தப்பு நடந்து போச்சு ராசா!
    முரண் நல்ல இருக்கு....
    இருந்தாலும் அங்கே உள்ளவர்கள் இங்கும் வந்திருப்பார்கள் இல்லையா.
    "மனோ" பாட்டை நண்பர்களுக்கு
    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  75. சரி சரி இன்னிக்காவது அளவா குடிச்சிட்டு பதமா தூங்கும்.......!

    ReplyDelete
  76. சுவராஸ்யமான தொகுப்பு.. ! படித்து ரசித்தேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!